search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asuravadham"

    அசுரவதம் படம் ரிலீசாகியிருக்கும் நிலையில், அட்டகத்தி படத்திற்கு பிறகு ரஞ்சித்துடன் இணையாதது, ஐஸ்வர்யாவுடனான நட்பு என தனது சினிமா அனுபவங்கள் குறித்து நடிகை நந்திதா பகிர்ந்து கொண்டார். #NanditaSwetha
    அட்டகத்தி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நந்திதா, தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் மட்டுமே நடிக்கிறார். அவரிடம் பேசியதில் இருந்து...

    ஐஸ்வர்யா ராஜேஷுடனான நட்பு எப்படி தொடர்கிறது?

    அட்டகத்தி படத்தில் தான் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்தோம். அந்த நட்பு அப்படியே நீடிக்கிறது. அவரது வளர்ச்சி ஒரு தோழியாக எனக்கு பெருமையாக இருக்கிறது. நாங்கள் இருவருமே எவ்வளவு கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்தோம். கதாநாயகி ஆனோம் என்பது இருவருக்குமே தெரியும். எனவே எங்களிடம் எந்த பொறாமையும் கிடையாது.

    தொடர்ந்து அம்மா வேடங்களில் நடித்தால் இமேஜ் பாதிக்காதா?

    இமேஜ் பற்றிய கவலையோ, பயமோ எனக்கு இல்லை. அசுரவதம் படத்தின் கதையே முதலில் ஐஸ்வர்யாவுக்கு தான் சென்றது. அவர் என்னிடம் படத்தை பற்றியோ, கதை பற்றியோ எதுவும் கூறாமல் நீ அம்மாவாக நடிப்பாயா? என்று மட்டும் கேட்டார். நடிக்க தயார் என்றதும் கதை கேட்க சொன்னார். நான் எந்த வேடத்திலும் நடிக்க தயார். அடுத்து டாணா என்ற படத்தில் கவர்ச்சியான மாடர்ன் கதாபாத்திரத்தில் ஐடி பெண்ணாக நடிக்கிறேன். வணங்காமுடியில் போலீஸ் வேடம். கதையில் நமது கதாபாத்திரம் முக்கியமானதா, இல்லையா என்பதை தான் பார்க்கிறேன்.



    அட்டகத்திக்கு பிறகு ரஞ்சித் உங்களை நடிக்க வைக்கவில்லையே?

    அதன் பிறகான அவர் படங்களில் எனக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லை. எனக்கே அது தோன்றியது. என்னை அறிமுகப்படுத்தியதே அவர் தான். எனவே எனக்கு பொருத்தமான வேடம் இருந்தால் கண்டிப்பாக அழைப்பார். இன்னமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.

    சென்னையில் எப்போது வீடு வாங்கி செட்டில் ஆகப்போகிறீர்கள்?

    எப்போது சென்னையில் நான் நடிக்கும் 4 படங்களுக்கான படப்பிடிப்பு நடக்கிறதோ, அப்போது வாங்கி செட்டில் ஆகிவிடுவேன்.

    காதல்?

    அதற்கு எல்லாம் நேரமே இல்லை. தொடர்ந்து படப்பிடிப்புகளில் தான் இருக்கிறேன். #NanditaSwetha

    அசுரவதம் படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்துள்ள நந்திதா படத்தில் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக தான் செய்ய தவறியதை பற்றி பேசுவதாகக் கூறி பாலியல் தொல்லை பற்றி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். #NanditaSwetha
    அசுரவதம் படத்தில் சசிகுமார் மனைவியாக, ஒரு பெண் குழந்தைக்கு தாயாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நந்திதா. 
    இந்த நிலையில், சமூகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவது குறித்தும், அதில் இருந்து எப்படி தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    வீடியோவில் நந்திதா பேசியதாவது,

    அசுரவதம் படத்தில் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக நான் செய்ய தவறியதை பற்றி உங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். நாம் வாழும் இந்த சமுதாயத்தில் நம்ம குழந்தைகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் எந்த ரூபத்தில், எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது ரொம் கஷ்டம். குறிப்பாக பாலியல் தொல்லை. ஒருவருக்குள் அப்படி ஒரு மிருக குணம் இருக்கிறது என்பதை அவர்கள் முகத்தை பார்த்து நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அப்படினா எப்படி நம்ம குழந்தை அதை கண்டுபிடிச்சு அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளும். 

    ரொம்ப கஷ்டம். பொதுவாக ஒரு குழந்தையை தொட்டு, கொஞ்சிப்பேசி, முத்தம் கொடுப்பதை நமது கலாச்சாரத்தில் அவ்வளவு பெரிய தப்பா பார்ப்பதில்லை. அதை தான் பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் ரொம்ப வசதியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். நம்ம குழந்தைகளும் அதை புரிந்து கொள்ள முடியாமல் அவர்களுக்கு பலியாகின்றனர். 

    இதை தடுக்க நாம் நமது குழந்தைகளை இந்த மாதிரி ஆபத்தான இடங்களில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். யாராவது அவர்களுக்கு தொல்லை கொடுத்தால் அவர்களை காட்டிக் கொடுப்பதும் தான். இந்த இரண்டுமே இந்த சமூகத்தில் நமது குழந்தைகள் வாழவும், வளரவும் ரொம்ப அவசியம். 

    இவர்களிடம் இருந்து தப்பிக்க என்னனென்ன செய்ய வேண்டும். எப்படி தப்பிக்க வேண்டும் என்பது குறித்து வீடியோவில் விளக்கி உள்ளார். #NanditaSwetha

    நந்திதா பேசிய முழு வீடியோ:
    மருதுபாண்டியன் இயக்கத்தில் சசிகுமார் - நந்திதா ஸ்வேதா நடிப்பில் வெளியாகி இருக்கும் `அசுரவதம்' படத்தின் விமர்சனம்.
    மளிகைக் கடை வைத்திருக்கும் வசுமித்ராவிற்கு நாயகன் சசிகுமார் போன் செய்து ஒரு வாரத்தில் சாக போகிறாய் என்று மிரட்டுகிறார். யார் என்று தெரியாத ஒருவர் போன் செய்து மிரட்டுவதால் வசுமித்ரா பதட்டமடைகிறார். மறுநாள் கடை வாசலில் நிற்கும் சசிகுமார், வசுமித்ராவை முறைத்து பார்க்க, இவன் தான் தன்னை மிரட்டியது என்று தெரிந்துக் கொள்கிறார்.

    பின்னர் இவர்களுக்குள் நடக்கும் சண்டையில், வசுமித்ராவை நடுரோட்டில் கொல்ல முயற்சிக்கிறார். ஆனால், வசுமித்ரா தப்பித்து விடுகிறார். பின்னர் பல முறை அவரை கொலை செய்ய முயற்சித்து வேண்டுமென்றே விட்டு அவருக்கு மரண பயத்தை காண்பிக்கிறார் சசிகுமார்.



    பின்னர் தன் நண்பர்கள் மூலமாக சசிகுமாரை பிடிக்க முயற்சிக்கிறார் வசுமித்ரா. சிக்காமல் இருக்கும் சசிகுமார், ஒருகட்டத்தில் வசுமித்ராவிடம் சிக்கிக் கொள்கிறார். 

    இறுதியில் வசுமித்ராவிடம் சிக்கிக் கொண்ட சசிகுமார், உயிர் தப்பினாரா? எதற்காக வசுமித்ராவிற்கு மரண பயத்தை காண்பிக்கிறார்? அவரது வாழ்க்கையில் நடந்தது என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார் வழக்கமான நடிப்புடன், அவருக்கே உரிய பாணியில் ஆக்‌ஷனை வெளிப்படுத்தி இருக்கிறார். சில காட்சிகளில் முந்தைய படங்களின் சாயல் தெரிகிறது. நாயகியாக நடித்திருக்கும் நந்திதாவிற்கு சின்ன வேலைதான். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.



    வில்லனாக வரும் வசுமித்ரா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சசிகுமாருக்கு பயந்து ஓடும் காட்சியில் பரிதாபப்பட வைக்கிறார். அவைகா, ஸ்ரீஜித் ரவி ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

    சமூக அக்கறைக் கொண்டு ஒரு கருத்தை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் மருது பாண்டியன். ஆனால், கருத்தை ஏற்றுக் கொண்டாலும், திரைக்கதையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தில் மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா என்ற வசனம் வரும். அதையே இப்படத்தில் வில்லனுக்கு சசிகுமார் மரண பயத்தை காண்பிப்பதை மட்டுமே முழு திரைக்கதையாக வைத்திருக்கிறார். சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்த இயக்குனர், அவர்களை சரியாக உபயோகிக்க வில்லையோ என்று தோன்றுகிறது.



    எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. கோவிந்த் மேனனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘அசுரவதம்’ மிரட்டல். #Asuravadham #Sasikumar

    மருது பாண்டியன் இயக்கத்தில் சசிகுமார் - நந்திதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அசுரவதம்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Asuravadham #SasiKumar
    `கொடிவீரன்' படத்தை தொடர்ந்து சசிகுமார் ‘அசுரவதம்’ மற்றும் `நாடோடிகள்-2' படத்தில் நடித்து முடித்து முடித்திருக்கிறார். மருது பாண்டியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அசுரவதம்’ படத்தை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார். இதில் சசிகுமார் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். 

    இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படம் வருகிற ஜூன் 29-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



    எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கோவிந்த்மேனன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருக்கிறது. #Asuravadham #SasiKumar

    ×