search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "app introduction"

    • கட்சி கொடி, சின்னம், தேர்வு செய்யும் பணிகளிலும் விஜய் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
    • கூட்டத்தில் கட்சிக்கு புதிதாக 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கடந்த 2-ந் தேதி அரசியல் கட்சி தொடங்கினார்.

    இதையடுத்து கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி கொடி, சின்னம், தேர்வு செய்யும் பணிகளிலும் விஜய் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கட்சிக்கு புதிதாக 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

    இதற்காக சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு அடுத்த வாரம் முதல் செயல்பட உள்ளது. தற்போது அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகிறது. புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் மாவட்ட, மாநகர், நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி வார்டு வாரியாக நடைபெற உள்ளது.

    கட்சியின் உள் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் கட்சி பதவிகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. முதலில் மகளிர் அணிக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு கட்சி பதவிகளில் முன்னுரிமை வழங்கப்பட இருக்கிறது. புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக மாவட்ட சட்டமன்ற வாரியாக புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    இந்த பணிகள் தொடர்பாக தமிழகம், புதுச்சேரி நிர்வாகிகளை விஜய் உத்தரவின் பேரில் புஸ்சி ஆனந்த் அடிக்கடி தொடர்பு கொண்டு உறுப்பினர் சேர்க்கை பணியை வேகப்படுத்தி வருகிறார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படும் நிலையில் உறுப்பினர்கள் சேர்க்கைகளில் கட்சி தொண்டர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்களாக சேர விரும்புபவர்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், செல்போன் நம்பர் ஆகியவை இணைக்கப்பட உள்ளது.

    • உணவகங்கள் மற்றும் கடைகளில், பொது மக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் உணவு பாதுகாப்புத்துறை மூலம், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • புதிய வெப்சைட் மற்றும் செல்போன் ஆப்பை, தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தரமற்ற, கலப்பட உணவுகள் குறித்த பொது மக்களின் புகார் நட வடிக்கைகளை எளிதாக்கும் வகையில், விபரங்களை மிக எளிமையாக தேர்ந்தெ டுக்கும் வசதிகளுடன், புதிய வெப்சைட் மற்றும் செல்போன் ஆப்பை, தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

    ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில், பொது மக்களுக்கு தரமான, சுகா தாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் உணவு பாதுகாப்புத்துறை மூலம், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது, உணவு தொடர்பான பொதுமக்க ளின் புகார் நடவடிக்கை களை எளிதாக்கும் வகையி லும், விரைவு நடவடிக்கை எடுக்கவும், புதிய வெப்சைட் மற்றும் மொபைல் ஆப்பை, தமிழக அரசு அறிமுகப்படுத்திள்ளது.

    அதில், பொதுமக்கள் தங்களது புகார்களை டைப் ஏதும் செய்யாமல், மிக எளிமையாக விபரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய வெப்சைட் foodsafety.tn.gov.in மற்றும் மொபைல் செயலி Tnfood safety Consumer App டவுன் லோடு செய்து எளிதாக பயன்படுத்தலாம். எனவே வெப்சைட் மூலமாகவும், செல்போன் ஆப் மூலமாகவும், பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம்.

    புகார் செய்பவர்களின் விபரங்கள், ரகசியம் பாது காக்கப்படும். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள், ஆய்வு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு, புகார்தாரருக்கு ஆய்வ றிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×