search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் கலப்படம், தரமற்ற உணவு குறித்து புகார் செய்ய செல்போன் ஆப் அறிமுகம்
    X

    நாமக்கல் மாவட்டத்தில் கலப்படம், தரமற்ற உணவு குறித்து புகார் செய்ய செல்போன் ஆப் அறிமுகம்

    • உணவகங்கள் மற்றும் கடைகளில், பொது மக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் உணவு பாதுகாப்புத்துறை மூலம், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • புதிய வெப்சைட் மற்றும் செல்போன் ஆப்பை, தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தரமற்ற, கலப்பட உணவுகள் குறித்த பொது மக்களின் புகார் நட வடிக்கைகளை எளிதாக்கும் வகையில், விபரங்களை மிக எளிமையாக தேர்ந்தெ டுக்கும் வசதிகளுடன், புதிய வெப்சைட் மற்றும் செல்போன் ஆப்பை, தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

    ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில், பொது மக்களுக்கு தரமான, சுகா தாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் உணவு பாதுகாப்புத்துறை மூலம், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது, உணவு தொடர்பான பொதுமக்க ளின் புகார் நடவடிக்கை களை எளிதாக்கும் வகையி லும், விரைவு நடவடிக்கை எடுக்கவும், புதிய வெப்சைட் மற்றும் மொபைல் ஆப்பை, தமிழக அரசு அறிமுகப்படுத்திள்ளது.

    அதில், பொதுமக்கள் தங்களது புகார்களை டைப் ஏதும் செய்யாமல், மிக எளிமையாக விபரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய வெப்சைட் foodsafety.tn.gov.in மற்றும் மொபைல் செயலி Tnfood safety Consumer App டவுன் லோடு செய்து எளிதாக பயன்படுத்தலாம். எனவே வெப்சைட் மூலமாகவும், செல்போன் ஆப் மூலமாகவும், பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம்.

    புகார் செய்பவர்களின் விபரங்கள், ரகசியம் பாது காக்கப்படும். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள், ஆய்வு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு, புகார்தாரருக்கு ஆய்வ றிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×