search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adi friday"

    • கடைசி ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • சோழவந்தான், காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர் உள்பட 21 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து சண்முகவேல் அர்ச்சகர்பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.

    சோழவந்தான் வடக்கு வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் மகளிர் குழு சார்பில் தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. மேளதாளத்துடன் 4 ரத வீதியும் சுற்றி வந்து ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக கம்பத்தில் அபிஷேகம் செய்தனர். பின்னர் கூழ் வார்த்து பக்தர்களுக்க வழங்கினர்.

    திரவுபதி அம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், உச்சி காளியம்மன் கோவில், தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில், உச்சி மகா காளியம்மன் கோவில், திருவேடகம் விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஏடகநாதர்-ஏலவார் குழலி அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. சோழவந்தான், காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×