search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Additional Bus"

    • கூடுதல் பஸ் இயக்க வேண்டும்
    • சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு- ஆற்காடு சாலையில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது.

    செய்யாறில் தனியார் ஐடிஐ ,அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த கல்லூரி மற்றும் பள்ளிகளில் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    அனைத்து கல்வி நிலையங்களும் மாலை ஒரே நேரத்தில் முடிவடைவதால் ஆரணி பகுதிகளில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் பஸ்சில் போட்டி போட்டுக்கொண்டு ஏற்கின்றனர்.

    பஸ்சின் உள்ளே இடம் இல்லாததால் படிக்கட்டுகளில், ஜன்னல் வழியே மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கி செல்லும் அவல நிலை உள்ளது.

    இதனால் விபத்து ஏற்படும் முன் அரசு போக்குவரத்து துறை மாணவர்களின் நலன் கருதி கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கயத்தாறில் இருந்து நெல்லை, கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கு பணி நிமித்தமாக தினமும் ஏராளமானோர் பஸ்களில் வந்து செல்கின்றனர்
    • காலை நேரத்தில் சுமார் 2 மணி நேரம் வரை 2 பஸ்களே கயத்தாறு பகுதிக்கு சென்றுள்ளது.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் இருந்து நெல்லை, கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கு பணி நிமித்தமாகவும், தொழில் விஷயமாகவும் தினமும் ஏராளமானோர் பஸ்களில் வந்து செல்கின்றனர்.

    மாணவர்கள் சிரமம்

    மேலும் நெல்லையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கயத்தாறை சேர்ந்த சுமார் 462 மாணவ-மாணவிகளும், கோவில்பட்டி சுற்றுவட்டார பள்ளி, கல்லூரிகளில் சுமார் 263 மாணவ-மாணவிகளும் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் காலை நேரத்தில் கயத்தாறு பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

    காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பஸ்களில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதாகவும், அவ்வாறு செல்லும்போது சிலர் சாலைகளில் விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை இருப்பதாவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

    கூடுதல் பஸ்கள்

    இன்று காலை நேரத்தில் சுமார் 2 மணி நேரம் வரை 2 பஸ்களே கயத்தாறு பகுதிக்கு சென்றுள்ளது. அதில் கூட்டமாக மாணவர்கள் ஏறியதால் பஸ் கண்டக்டர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் பஸ்களில் இருந்து இறங்கி வீடு திரும்பி விட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்த னர். பல ஆண்டுகளாக இதே நிலை நீடிப்பதால், காலை நேரங்களில் மாணவ-மாணவிகளின் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • சில நேரங்களில் ஒரே ஒரு பஸ் மட்டுமே வருவதால் அந்த பஸ்சில் தொங்கியபடி மாணவ- மாணவிகள் பயணம் செய்ய வேண்டி உள்ளது.
    • ரெயில்வே குட்ஷெட் விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையாக கங்கைகொண்டானில் விரிவாக்க முனையம் செல்ல உள்ளது.

    நெல்லை:

    பாளை யூனியனுக்குட்பட்ட நொச்சிகுளம் பஞ்சாயத்து கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் இன்று சீருடையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் இருந்து காலை நேரங்களில் இயக்கப்படும் அரசு பஸ்கள் மூலம் ஏராளமான மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருகிறோம். வழக்கமாக 3 பஸ்கள் இயக்கப்படும் நிலையில், அதில் ஒரு பஸ் சமீபகாலமாக அவ்வப்போது வராமல் நின்று விடுகிறது.

    சில நேரங்களில் ஒரே ஒரு பஸ் மட்டுமே வருவதால் அந்த பஸ்சில் தொங்கியபடி மாணவ- மாணவிகள் பயணம் செய்ய வேண்டி உள்ளது.

    குறித்த நேரத்திற்கு பஸ்கள் வராததால் ஒழுங்கான நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இதனால் எங்களின் படிப்பு தடைபடுகிறது. கடந்த 11-ந் தேதி பஸ் டிரைவர், மாணவி ஒருவரை அவதூறாக பேசி உள்ளார். அந்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சமத்துவபுரத்தில் இருந்து ஐகிரவுண்டு வழியாகவும், நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்தும் எங்கள் பகுதிக்கு கூடுதல் பஸ் வசதிகள் செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    தென்னக ரெயில்வே யின் குட்ஷெட்டில் சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அருணாச்சலம் தலைமையில் நிர்வாகிகள் அய்யப்பன், மாரியப்பன் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறோம். எங்கள் சங்கத்தில் 120 தொழிலாளர்கள் உள்ளனர். எங்களை வழிநடத்த 2 காண்டிராக்டர்கள், 2 ஏஜெண்டுகள் உள்ளனர்.

    2 வருடத்திற்கு ஒருமுறை எங்களுக்கு ஊதிய ஒப்பந்தம் போடப்படும். தற்போதுள்ள ஒப்பந்தம் 2023-ம் ஆண்டு டிசம்பர் வரை நடைமுறையில் உள்ளது.

    இந்நிலையில் ரெயில்வே குட்ஷெட் விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையாக கங்கைகொண்டானில் விரிவாக்க முனையம் செல்ல உள்ளது.

    எனவே அங்கு வேலையில் எங்களுக்கு முன்னுரிமை அளித்து எங்களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    மேலப்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திற னாளிகளான காஜா மைதீன், அப்துல் காதர், பாத்திமுத்து ஆகியோர் அளித்த மனுவில், நாங்கள் 3 பேரும் கடந்த பல வருடங்களாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம்.

    மாற்றுத் திறனாளி களான எங்கள் வீட்டில் கழிப்பறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கூறி இருந்தனர்.

    இவர்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பாளை சட்டமன்ற தொகுதியின் செயற்குழு உறுப்பினர் காதர் மீரான் தலைமையில் வந்து மனு அளித்தனர்.

    ×