ஆபத்தான முறையில் பஸ்சில் தொங்கி செல்லும் மாணவர்கள்

கூடுதல் பஸ் இயக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் வலியுறுத்தல்
ஆபத்தான முறையில் பஸ்சில் தொங்கி செல்லும் மாணவர்கள்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு- ஆற்காடு சாலையில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது.

செய்யாறில் தனியார் ஐடிஐ ,அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்த கல்லூரி மற்றும் பள்ளிகளில் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

அனைத்து கல்வி நிலையங்களும் மாலை ஒரே நேரத்தில் முடிவடைவதால் ஆரணி பகுதிகளில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் பஸ்சில் போட்டி போட்டுக்கொண்டு ஏற்கின்றனர்.

பஸ்சின் உள்ளே இடம் இல்லாததால் படிக்கட்டுகளில், ஜன்னல் வழியே மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கி செல்லும் அவல நிலை உள்ளது.

இதனால் விபத்து ஏற்படும் முன் அரசு போக்குவரத்து துறை மாணவர்களின் நலன் கருதி கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com