search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mutton Recipes"

    • இதை சூடான சாதத்துடன் சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.
    • இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிது.

    தேவையான பொருட்கள்:

    ஆட்டுக்கறி - 500 கிராம்

    வெங்காயம் - 2

    கோதுமை மாவு - 4 டீஸ்பூன்

    இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

    பிரியாணி இலை - 3

    தனியா - 1 டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 6

    கருப்பு ஏலக்காய் - 2

    பச்சை ஏலக்காய் - 6

    அன்னாசி பூ - 1

    கடுக்காய் - 1 சிறியது

    கிராம்பு - 6

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பட்டை - 2 துண்டு

    ஜாதிப்பத்திரி - 3 துண்டு

    கருஞ்சீரகம் - ½ டீஸ்பூன்

    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

    சுக்குப்பொடி - 1 டீஸ்பூன்

    மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2½ டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 1 கப்

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    நிஹாரி மசாலா தயாரிப்பதற்கு பிரியாணி இலை, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், ஏலக்காய், அன்னாசி பூ, கடுக்காய், கிராம்பு, சீரகம், பட்டை, ஜாதி பத்திரி, கருஞ்சீரகம், சோம்பு ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். இவை 1 கிலோ ஆட்டுக்கறிக்கான மசாலா அளவாகும்.

    ஆட்டுக்கறியை நன்றாக கழுவி அதனுடன் மல்லித்தூள், சுக்குப்பொடி, 2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்து வைத்துள்ள 'நிஹாரி' மசாலாவில் பாதி அளவு சேர்த்து நன்றாகப் பிசைந்து கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.

    பின்பு பிரஷர் குக்கரில் ஒரு கப் அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் பொடிதாக நறுக்கிய ஒரு வெங்காயம்(முக்கால் பாகம்) சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் ஊற வைத்துள்ள ஆட்டுக்கறி கலவையை சேர்த்து, கறி பொரியும் வரை வறுக்கவும். சிறிது நேரத்தில் எண்ணெய் பிரிந்து மேலே வரும்.

    அப்போது இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி கறியை வேக வைக்கவும். இரண்டு விசில் வந்து ஆவி அடங்கியதும் குக்கரை திறக்கவும்.

    வெந்திருக்கும் கலவையில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவுடன் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைக்கவும். இந்தக் கரைசலை அடுப்பில் இருக்கும் கலவையில் ஊற்றி கிளறவும். கலவை சிறிது சிறிதாக கெட்டியாக ஆரம்பிக்கும்.

    பிறகு அதனை மூடி குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    இப்போது வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும், அதில் மீதியுள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு அதனுடன் அரை டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், அரை டீஸ்பூன் 'நிஹாரி மசாலா' சேர்த்து வறுக்கவும்.

    பின்பு இந்த தாளிப்பை கொதித்துக் கொண்டிருக்கும் நிஹாரியுடன் சேர்த்து கிளறவும். இப்போது சுவையான 'மட்டன் நிஹாரி' தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இதை சூப் போன்றும் குடிக்கலாம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    மட்டன் எலும்புடன் - அரை கிலோ

    மட்டன் கொழுப்பு - 100 கிராம்

    பச்சை மிளகாய் - 4

    கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்

    தக்காளி - 1

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை - 2 கொத்து

    மசாலா அரைக்க :

    மரசெக்கு கடலை எண்ணெய் - தேவையான அளவு

    கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி

    சின்ன வெங்காயம் - 8

    பூண்டு பற்கள் - 8

    சீரகம், மிளகு - தலா 1 டீஸ்பூன்

    செய்முறை

    * மட்டனை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

    * தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    * ப.மிளகாயை விழுதாக அம்மிகல்லில் நசுக்கி கொள்ளவும்.

    * ஒரு பிரஷர் குக்கரில் மட்டன், மட்டன் கொழுப்பை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மூடியை மூடி 4 விசில் வரை வேக வைக்க வேண்டும்.

    * பின்னர் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து நைசாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

    * ஒரு அகலமான வாணலியில் மரசெக்கு கடலை எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

    * பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . சிறிதளவு உப்பு , மிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் மற்றும் அம்மிகல்லில் நசுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    * கடைசியாக வேக வைத்த மட்டனை நீருடன் முழுவதுமாக சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . நன்றாக கொதி வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

    * இப்போது சூப்பரான மட்டன் ரசம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மட்டன் தால்சா சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    மட்டன் - 1/2 கிலோ

    பச்சை மிளகாய் - 2

    தக்காளி - 2

    சின்ன வெங்காயம் - 12

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

    கத்திரிக்காய் - 1

    மாங்காய் - 1/2

    கொத்தமல்லி - சிறிது

    பிரியாணி இலை - 1

    பட்டை - 1

    கிராம்பு - 2

    ஏலக்காய் - 2

    துவரம் பருப்பு - 1/2 கப்

    கடலை பருப்பு - 1/4 கப்

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    புளிச்சாறு - 1/4 கப்

    உப்பு - சுவைக்கேற்ப

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு..

    வெங்காயம் - 1/2 கப்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    மிளகு - 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    நெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    * தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், மாங்காய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.

    * கடலை பருப்பு, துவரம் பருப்பை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    * மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    * முதலில் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு சேர்த்து தாளித்த பின்னர் சின்ன பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்க வேண்டும்.

    * பின்பு அதில் மட்டனை கழுவிப் போட்டு நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும். அதன் பின் கடலை பருப்பு, துவரம் பருப்பு மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் போதுமான நீரை, அதாவது வழக்கமாக பருப்பு வேக வைக்க ஊற்றும் அளவை விட அதிகமாக நீரை ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    * விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். மட்டனும், பருப்புக்களும் நன்கு வெந்ததும், கத்திரிக்காய், மாங்காய் சேர்த்து புளிச்சாற்றினையும் சிறிது ஊற்றி மூடி வைத்து, 10 நிமிடம் காய்கறிகள் வேகும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

    * பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், மிளகு மற்றும் சிறிது வெங்காயத்தை சேர்த்து வதக்கி, குக்கரில் உள்ள மட்டன் தால்சாவில் ஊற்றி கிளறி, மேலே சிறிது கொத்தமல்லியை தூவினால், மட்டன் தால்சா தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தென் மாவட்டங்களில் மட்டன் உப்புகண்டம் மிகவும் பிரபலம்.
    • பழைய சோறு, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    ஆட்டு இறைச்சி - 1 கிலோ

    பூண்டு - 20 பல்,

    காய்ந்த மிளகாய் - 15

    மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    ஆட்டு இறைச்சியை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். உப்பு சிறிதளவு தான் போட வேண்டும். ஏனெனில் மட்டன் காயும் போது சுருங்கும். அதனால் உப்பு அதிகரித்து விடக்கூடாது.

    இந்த விழுதினை நறுக்கி வைத்த மட்டனில் சேர்த்து நன்கு கலக்கவும். மசாலா நன்றாக பிடிக்க வேண்டும்.

    இதனை ஒரு நூலில் கோர்த்து வெயிலில் காய வைக்கவும். ஈரம் வற்றும் வரை 1 வாரம் காய வைக்கவும். நன்றாக காய்ந்த உடன் காற்று புகாதா டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது.

    தேவைப்படும் போது உப்புக்கண்டத்தை எடுத்து அம்மிக்கல்லில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடவும்.

    சுவையான ருசியான உப்புக்கண்டம் ரெடி.

    • முஸ்லீம்கள் நோன்பு காலத்தில் மட்டனை சமைத்து சாப்பிடுவார்கள்.
    • சூடான சாதத்துடன் சாப்பிடவும் இந்த ரெசிபி சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    மட்டன் - அரை கிலோ

    வரமிளகாய் - 18

    வெங்காயம் - 2

    பட்டை - 2

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

    சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

    மட்டன் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்

    சோம்பு பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்

    புளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வாக்கி, பின் மட்டனை சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும்.

    அடுத்து அதில் பட்டை, ஏலக்காய், இஞ்சி பூண்டு பேஸ்ட், சோம்பு பொடி, சீரகப் பொடி மற்றும் மட்டன் மசாலா சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி, பின் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

    பின் குக்கரை மூடி 2 விசில் போட வேண்டும்.

    வரமிளகாயில் உள்ள விதைகளை நீக்கி விட்டு தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மிளகாய் விழுதுடன் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து, அதனை குக்கரில் உள்ள மட்டனுடன் சேர்த்து பிரட்டி, பச்சை வாசனை நீங்கி, மட்டனுடன் மசாலா அனைத்து ஒன்று சேரும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், காஷ்மீரி மட்டன் குருமா ரெடி!!!

    • இந்த கஞ்சியை செய்வது மிகவும் சுலபம்.
    • இந்த கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்

    வறுத்த சிறு பருப்பு - 1 கப்

    எலும்பில்லாத மட்டன் - அரை கிலோ

    பெ.வெங்காயம் - 3 (நறுக்கவும்)

    கேரட் - 4 (நறுக்கவும்)

    உருளைக்கிழங்கு - 2 (நறுக்கவும்)

    பட்டாணி - சிறிதளவு

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    மசாலா தூள் - தேவைக்கு

    மிளகாய் தூள் - தேவையான அளவு

    தக்காளி - 4 (நறுக்கவும்)

    பட்டை, ஏலக்காய் - சிறிதளவு

    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு

    செய்முறை:

    அரிசியை சிறிதுநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    குக்கரில் மட்டன், மிளகாய்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உருளைக்கிழங்கு, பட்டாணி, தக்காளி, கேரட், உப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

    நன்கு வெந்ததும் குக்கரை திறந்து அரிசி, பருப்பு சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும் ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் ஏலக்காய், கருவா பட்டை, வெங்காயம், மசாலா தூள் சேர்த்து வதக்கி அரைத்துவைத்த கலவையில் சேர்க்கவும்.

    பின்னர் அதனை அடுப்பில் வைத்து தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம்.

    சுவையான மட்டன் கஞ்சி ரெடி.

    • தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும்.
    • சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் மூளை - 5

    சின்ன வெங்காயம் - 200 கிராம்

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - 2 டீஸ்பூன்

    சீரக தூள் - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - 2 டீஸ்பூன்

    உப்பு -தேவையான அளவு

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    * மட்டன் மூளையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் சூடானதும் அதில் மட்டன் மூளையை போட்டு அதனுடன் 1/2 டீஸ்பூன், சிறிது உப்பு போட்டு 5 நிமிடம் வேகவிடவும். பிறகு தண்ணீரில் இருந்து எடுத்து, அதில் உள்ள நரம்புகளை நீக்கி, பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

    * தக்காளி குழைய வதங்கி எண்ணெய் பிரிந்தது வரும் போது அதில் நறுக்கிய மட்டன் மூளையை சேர்த்து கலந்து, அதனுடன் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.

    * பிறகு கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.

    * தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்ததும் இதில் சிறிது அளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் மட்டன் மூளை மிளகு மசாலா தயார்.

    • காய்ச்சல், உடல் வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ரசத்தை குடிக்கலாம்.
    • இந்த ரசத்தை சூப்பாகவும் குடிக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    நல்லி எலும்பு - கால் கிலோ

    வெங்காயம் - 2

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

    மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

    சீரகப் பொடி - 1/2 ஸ்பூன்

    மஞ்சள் - 1/4 ஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    தாளிக்க :

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்

    கொத்தமல்லி - கையளவு.

    மிளகு - தேவைக்கு ஏற்ப

    செய்முறை

    நல்லி எலும்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஆட்டுக்காலை போட்டு தண்ணீர் ஊற்றி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, சிறிது கொத்தமல்லி தழை, மிளகு தூள், வெங்காயம், சீரகப் பொடி, மஞ்சள் சேர்த்து நன்குக் கலந்து குக்கரை மூடி அடுப்பில் குறைவான தீயில் 30 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    பின் வேக வைத்த மட்டன் தண்ணீரை ஊற்றவும்.

    இறுதியாக மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

    இப்போது காரசாரமான நல்லி எலும்பு ரசம் தயார்.

    • மாலை நேரத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் கொத்துக்கறி - அரை கிலோ

    முட்டை - 1

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி - 2

    பூண்டு - 2

    துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    கச கசா - 1 டீஸ்பூன்

    முந்திரி பருப்பு - 10

    வறுத்த பொட்டுக்கடலை - 1 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    கிராம்பு - 2

    கசகசா - 2 டீஸ்பூன்

    பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    மட்டன் கொத்துகறியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, கசகசா மற்றும் முந்திரி பருப்பை போட்டு வறுக்கவும்.

    அது சற்று பொன்னிறமாக மாறியதும் அதில் பொட்டுக்கடலையை சேர்த்து நன்றாக வறுக்கவும். பின், இந்த கலவையில் இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்..

    பின், இந்த கலவையில் தேங்காய் துருவல், கொத்தமல்லி, உப்பு மற்றும் கறிவேப்பில்லை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கியதும், இதில் மட்டனை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    பின்னர் இந்த கலவை நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

    அரைத்த மட்டன் விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் முட்டையை சேர்த்து விட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின், அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி செய்து வைத்த மட்டன் உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இதனை அப்படியே சூடாக பரிமாறவும். அவ்ளோ தான் சூடான சூப்பரான மட்டன் கோலா உருண்டை ரெடி.

    • இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ஆட்டு தலை - 1

    தக்காளி - 2

    வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 2

    சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

    பட்டை - 1

    கிராம்பு - 2

    ஏலக்காய் - 2

    தனியா தூள் - 1/2 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிது

    கொத்தமல்லி - சிறிது

    தேங்காய் துருவல் - 1 கப்.

    செய்முறை : 

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஆட்டு தலை கறியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்,

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    5 நிமிடம் வதக்கிய பின்னர் அதனுடன் தலைகறியை சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 6 விசில் போட்டு வேக விடவும். 

    குக்கர் விசில் போனவுடன் மூடியை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். 

    கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பின்பு பரிமாறவும்.

    • ஆந்திரா உணவுகள் அனைத்தும் நல்ல காரமாகவும், சுவையுடனும் இருக்கும்.
    • இன்று ஆந்திரா ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மட்டன் - 1/2 கிலோ

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    வெங்காயம் - 3

    தக்காளி - 1

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

    வறுத்து அரைப்பதற்கு...

    கசகசா - 1 டீஸ்பூன்

    சோம்பு - 1/2 டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    மல்லி - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பட்டை - 1 இன்ச்

    கிராம்பு - 2

    பச்சை ஏலக்காய் - 3

    செய்முறை:

    மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டனைப் போட்டு, 2 கப் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 6 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கசகசா, சோம்பு, மிளகு, மல்லி, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

    அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து மிளகாய் தூள் மற்றும் பாதி மிளகுத் தூளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    பின் தக்காளி மற்றும் மட்டனை சேர்த்து, தீயை அதிகரித்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.

    அத்துடன் உப்பு, வறுத்து அரைத்த மசாலாப் பொடிகளை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கிளறி, வடிகட்டி வைத்துள்ள மட்டன் நீர் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

    குழம்பானது கொதித்து ஓரளவு கெட்டியாகும் போது, அதில் மிளகுத் தூளை தூவி கிளறி இறக்கி, கொத்தமல்லியை மேலே தூவினால், ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு ரெடி!!!

    • தோசை, இடியாப்பம், இட்லிக்கு சூப்பராக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    வேக வைக்க :

    ஆட்டுக்கால் - 4

    வெங்காயம் - 3

    தக்காளி - 2

    பச்சை மிளக்காய் - 4

    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி

    மிளகு தூள் - 2 தேக்கரண்டி

    தனியாத்தூள் - 2 மேசைகரண்டி

    உப்பு - தே. அளவு

    தேங்காய் - அரை மூடி

    தாளிக்க :

    எண்ணெய்

    பட்டை, ஏலம், கிராம்பு - தலா 2

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி

    கொத்தமல்லி - ஒரு கொத்து

    புதினா - சிறிதளவு

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * தேங்காயை நைசாக அரைத்து கொள்ளவும்.

    * ஆட்டுக்காலை நன்றாக தேய்த்து கழுவி அதில் உள்ள அழுக்கு, முடியை எடுத்து விடவும்.

    * குக்கரில் ஆட்டுக்கால், நறுக்கிய முக்கால் பாகம் வெங்காயம், நான்கு மேசைகரண்டி இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, உப்பு தூள், மிளகு தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு அனைத்தையும் போட்டு கிளறி நான்கு பெரிய டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் போட்டு பதினைந்து நிமிடம் அதிக தீயிலும், பதினைந்து நிமிடம் சிம்மிலும் வேகவைத்து இறக்கவும்.

    * விசில் போனதும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டு கொதிக்கவிடவும்.

    * மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின் மீதம் உள்ள வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி மீதமுள்ள இஞ்சிபூண்டு பேஸ்டும் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி கொத்தமல்லி, புதினா சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின் கொதித்து கொண்டிருக்கும் ஆட்டு கால் பாயாவில் கொட்டி இறக்கவும்.

    * கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    * சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி.

    * ஆட்டுக்காலில் கொழுப்பு அதிக இருக்கும். ஆகையால் எண்ணெய் கம்மியா ஊற்றினால் போதும்.

    * இதை இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையான இருக்கும்.

    ×