என் மலர்
நீங்கள் தேடியது "Medvedev"
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது
- இதில் ரஷியாவின் மெத்வதேவ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சக வீரர் ஆன்ட்ரூ ரூப்லெவுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் குயின்வென் செங் உடன் மோதினார். இதில் சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் மெத்வதேவ் மற்றும் கிறிஸ்டோபர் ஓ'கானல் மோதினர்.
- பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெகுலா மற்றும் பாட்ரிசியா மரியா டிக் மோதினர்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் மெத்வதேவ் மற்றும் கிறிஸ்டோபர் ஓ'கானல் மோதினர்.
இதில் மெட்வெடேவ் 6-2 6-2 6-7 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதேபோல இன்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெகுலா மற்றும் பாட்ரிசியா மரியா டிக் மோதினர். இதில் பெகுலா 6-3 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதில் உலகின் 3-ம் நிலை வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர், 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.
இதில் ஸ்வெரேவ் 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
- இதில் முன்னணி வீரர்களான மெத்வதேவ், அல்காரஸ் ஆகியோர் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தனர்.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நாளையுடன் முடிவடைய உள்ளது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டி ஒன்றில் டென்னிஸ் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இதில் டி மினார் 7-6 (9-7), 7-5 என்ற கணக்கில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்க வீரர் டாமி பாலுடன் மோதினார். இதில் டாமி பால் 6-3, 4-6, 6-3 என்ற கணக்கில் கார்லோசை வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டி நடைபெற்றது.
- இதில் முன்னணி வீரர்களான மெத்வதேவ், அல்காரஸ் ஆகியோர் வென்று காலிறுதிக்கு முன்னேறினர்.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் முசேட்டியுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், போலந்து வீரர் ஹுயுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார். இதில் அல்காரஸ் 3-6, 7-6 (7-2), 7-6 (7-3) என்ற கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டிகள் லண்டனில் நடந்தது.
- ரஷியாவின் டேனில் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
லண்டன்:
கிராண்ட்சிலாம் தொடர்களில் ஒன்றாகவும், மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்று போட்டியில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யுபங்குடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் முதல் செட்டை வென்றார். சுதாரித்துக் கொண்ட யுபங் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 4, 5வது செட்களை மெத்வதேவ் வென்றார்.
இறுதியில் மெத்வதேவ் 6-4, 1-6, 4-6, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவுடன் மோதினார். இதில் அல்காரஸ் 7-6 (7-3), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஹோல்கர் ரூனே, டேனியல் மெட்வெடேவ் ஆகியோர் மோதினர்.
- பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் மெர்டென்ஸ் - ஸ்ட்ரோம் சாண்டர்ஸ் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
ரோம்:
இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலீனா ரைபகினா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இதையடுத்து ஆண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஹோல்கர் ரூனே, டேனியல் மெட்வெடேவ் ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் டேனியல் மெட்வெடேவ் 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஹோல்கர் ரூனேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மேலும், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போடிக்வாண்டே-ராபின் ஹாஸ் இணை ஹ்யூகோ நிஸ் - ஜான் சிலின்ஸ்கி இணையை எதிர் கொண்டது.
இந்த ஆட்டத்தில் ஹ்யூகோ நிஸ் - ஜான் சிலின்ஸ்கி இணை 7-5, 6-1 என்ற செட் கணக்கில் போடிக்வாண்டே-ராபின் ஹாஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

மேலும், பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா - கோகோ காப் இணை எலிஸ் மெர்டென்ஸ் - ஸ்ட்ரோம் சாண்டர்ஸ் இணையை எதிர்கொண்டது. இதில் எலிஸ் மெர்டென்ஸ் - ஸ்ட்ரோம் சாண்டர்ஸ் இணை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலா - கோகோ காப் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.
- டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ருனே மெத்வதேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- முன்னணி வீரரான ஜோகோவிச் 3வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
மான்டே கார்லோ:
மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த 2-வது காலிறுதி சுற்றில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார்.
இதில் பிரிட்ஸ் 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வீழ்த்தி அரையிறுதியை எட்டினார்.
மற்றொரு காலிறுதியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ருனே, ரஷிய வீரர் மெத்வதேவுடன் மோதினார். இதில் ஹோல்ஜர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஏற்கனவே 3வது சுற்றில் முன்னணி வீரரான ஜோகோவிச் தோல்வி அடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மியாமி ஓபன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நடந்தது.
- இதில் ரஷிய வீரர் மெத்வதேவ் இத்தாலி வீரர் சின்னரை வென்று கோப்பையை கைப்பற்றினார்.
மியாமி:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், இத்தாலி வீரர் ஜானிக் சின்னரை சந்தித்தார்.
இதில் மெத்வதேவ் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று, சாம்பியன் பட்டம் வென்றார்.
- மியாமி ஓபன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன.
- முதல் அரையிறுதியில் மெத்வதேவ் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மியாமி:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் கரென் கச்சனாவை சந்தித்தார். இதில் மெத்வதேவ் முதல் செட்டை 7-6 என்ற செட் கணக்கில் வென்றார். இரண்டாவது செட்டை கச்சனாவ் 6-3 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-3 என கைப்பற்றிய மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.