search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cheese Recipes"

    • குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
    • காலை உணவாக எடுத்துக்கொள்ள ஏற்றது.

    குழந்தைகளுக்கு காலை உணவாக அவர்களுக்கு பிடித்த வகையில் ஆரோக்கியமாகவும், சுவை நிறைந்ததாகவும் செய்து கொடுக்க நீங்கள் விரும்பினால் இந்த `முட்டை சீஸ் ரோல்' தான் சரியான தேர்வு. முட்டை, சீஸ் வைத்து குழந்தைகளுக்கு பிடித்தவாறு எவ்வாறு `முட்டை சீஸ் ரோல்' செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள் :

    முட்டை - 3

    உப்பு - தேவையான அளவு

    சிவப்பு மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்

    பிரெட் துண்டுகள் - 3

    வெண்ணெய் - 3 தேக்கரண்டி

    சாண்ட்விச் சீஸ் - 3

    செய்முறை :

    முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முட்டையுடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு அடித்து கொள்ள வேண்டும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் இதில் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து கொள்ளலாம். இவை அனைத்தையும் நன்றாக கலந்து எடுத்து தனியே வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு பிரெட் துண்டை எடுத்து அதன் நான்கு பக்கங் ஓரங்களையும் வெட்டி எடுத்துவிட வேண்டும். பின்னர் வெட்டிய பிரெட் துண்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி சீசில் தடவி வைக்க வேண்டும்.

    அடுத்து அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து வெண்ணெய் தடவி சூடானதும் அதில் நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்ற வேண்டும். பிறகு முட்டைகளை மெதுவாக கல்லில் பரப்பி அதன் மேல் சீஸ் தூவிய ரொட்டியை வைத்து முட்டையை கொண்டு சுற்றி நன்றாக சமைக்கவும். முட்டை மற்றும் பிரெட் நன்றாக வெந்தவுடன் எடுத்து குழந்தைகளுக்கு சூடாக பரிமாறுங்கள்.

    • குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • சீஸ் பூரியை வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் செய்து கொடுத்து அசத்தலாம்

    தேவையான பொருட்கள்:

    பூரி மாவிற்கு...

    கோதுமை மாவு - 1 கப்

    ரவை - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    உள்ளே வைப்பதற்கு...

    துருவிய சீஸ் - 1 கப்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை:

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பௌலில் கோதுமை மாவு, ரவை, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து ஈரத் துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்பு உள்ளே வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    * சிறிது மாவை எடுத்து உருட்டி, அதை சப்பாத்தி போன்று தேய்த்து, அதன் நடுவே சிறிது சீஸ் கலவையை வைத்து மூடி அதை மீண்டும் தட்டையாக பூரி அளவிற்கு தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சீஸ் மசாலா பூரி தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
    • விருந்தினர் வந்தால் இந்த ரெசிபி செய்து கொடுத்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - 1

    பிரெட் - 6 துண்டுகள்

    உருளைக்கிழங்கு - கால் கிலோ

    பன்னீர் - 100 கிராம்

    துருவிய சீஸ் - விருப்பத்ற்கேற்ப

    ப.மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

    சில்லி ப்ளோக்ஸ் - 2 தேக்கரண்டி

    மிளகு தூள் - கால் தேக்கரண்டி

    தனியா தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி - சிறிதளவு

    ஆரிகானோ - 1 தேக்கரண்டி

    சோள மாவு - கால் கப்

    பிரெட் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    சோள மாவில் 1 தேக்கரண்டி சில்லி ப்ளோக்ஸ், சிறிதளவு உப்பு, ஆரிகானோ, சிறிதளவு தண்ணீர் சேர்த்து திக்கான பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் மஞ்சள் தூள், சில்லி ப்ளோக்ஸ் 1 தேக்கரண்டி, தனியா தூள், மிளகுதூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து துருவிய பன்னீர், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

    எல்லாம் சேர்ந்து ஒன்றாக கலந்து வரும் போது துருவிய சீஸை சேர்த்து வதக்கவும்.

    மசாலா எல்லாம் ஒன்று சேர்ந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.

    பிரெட்டில் மேல் இந்த மசாலாவை தடவவும்.

    பின்னர் மசாலா தடவிய பிரெட்டை நீளமான துண்டுகளாக வெட்டவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து வெட்டிய பிரெட் துண்டுகளை சோள மாவு கலவையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ஆலு பிரெட் பிங்கர்ஸ் ரெடி.

    • குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • சீஸ் வைத்து பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    முட்டை - 3,

    குடைமிளகாய் - 1,

    முட்டைகோஸ் - 100 கிராம், (விருப்பப்பட்டால்)

    கேரட்- 1,

    பெரிய வெங்காயம் - 1,

    பச்சை மிளகாய் - 3,

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

    சீஸ் - ஒரு சிறு கட்டி,

    எண்ணெய் - தேவையான அளவு,

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,

    உப்பு - சுவைக்கேற்ப.

    செய்முறை:

    முட்டையை நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லி, கேரட், கோஸ் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    காய்கறிக் கலவையுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளுங்கள்.

    அடித்து வைத்திருக்கும் முட்டையில், நறுக்கிய காய்கறிகளைக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

    தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை, காய்கறிக் கலவையை சிறு அடைகளாக ஊற்றி, மேலே துருவிய சீஸைப் பரவலாகத் தூவி, வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடுங்கள்.

    விருப்பப்பட்டால், மிளகுதூள் தூவிப் பரிமாறலாம்.

    சூடாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    • குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.

    தேவையான பொருட்கள் :

    பிரெட் - 2

    முட்டை - 1

    வெங்காயம் - 1 சிறியது

    பச்சை மிளகாய் - 1

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    கொத்தமல்லி - சிறிதளவு

    மிளகு தூள் - விருப்பத்திற்கேற்ப

    உப்பு - தேவையான அளவு

    சீஸ் - விருப்பத்திற்கேற்ப

    வெண்ணெய் - விருப்பத்திற்கேற்ப

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக்கொள்ளுங்கள்.

    பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலக்கிக்கொள்ளுங்கள். பின் அதில் துருவிய சீஸ் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

    தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டை கலவையை ஆம்லெட்டாக ஊற்றி மேலே மிளகு தூள் தூவி எடுக்கவும்.

    அடுத்ததாக பிரெட்டை வெண்ணெய் தடவி இரு புறமும் டோஸ்ட் செய்து எடுத்து அதன் நடுவே ஆம்லெட்டை இரண்டாக பிரித்து ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும்.

    மீண்டும் தவாவை அடுப்பில் வைத்து பிரெட்டை அழுத்தியவாறு இரு புறமும் வெண்ணெய் ஊற்றி வாட்டி எடுக்கவும்.

    அவ்வளவுதான் சீஸ் ஆம்லெட் சாண்ட்விச் தயார்.

    • இந்த சாண்ட்விச்சை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • காலையில் இந்த ரெசிபியை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    பிரெட் - 4

    பச்சை மிளகாய் - 1

    வெங்காயம் - 1

    கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    சீஸ் ஸ்லைஸ் - விருப்பத்திற்கேற்ப

    சில்லி ஃபிளேக்ஸ் - விருப்பத்திற்கேற்ப

    வெண்ணெய் - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    முட்டை கலவை செய்ய

    முட்டை - 3

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    மிளகு தூள் - தேவையான அளவு

    செய்முறை

    பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்

    2 பிரெட் துண்டுகளை எடுத்து அதில் ஒன்றின் மீது சீஸ் ஸ்லைஸ் வைத்து, சில்லி ஃபிளேக்ஸ் தூவவும்.

    மற்றொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடவும்.

    தாவாவை அடுப்பில் வைத்து சூடு செய்து, வெண்ணெய் சேர்த்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்யவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    தாவாவை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை கலவையை ஊற்றி அதன் மேல் டோஸ்ட் செய்த சாண்ட்விச்'சை வைக்கவும்.

    சான்விச் முழுவதும் ஆம்லெட் வரும் படி மூடவும். நன்றாக வேக விடவும்.

    கடைசியாக அடுப்பிலிருந்து எடுத்து பாதியாக நறுக்கவும்.

    இப்போது அருமையான ஆம்லெட் சீஸ் சாண்ட்விச் தயார்.

    • இந்த தோசையை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
    • இந்த தோசை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    தோசை மாவு - 1 கரண்டி

    ஸ்வீட் கார்ன் - தேவையான அளவு

    குடைமிளகாய் - சிறியது 1

    வெண்ணெய் - தேவையான அளவு

    மிளகுப் பொடி - 1/2 மேசைக் கரண்டி

    சீஸ் - விருப்பத்திற்கு ஏற்ப

    புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் - 1 மேசைக் கரண்டி

    செய்முறை

    குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசையாக ஊற்றி சுற்றி வெண்ணெய் ஊற்ற அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    பின்னர் தோசை மேல் புதினா சட்னி அல்லது தக்காளி சாஸை தேய்க்கவும்.

    அடுத்து அதன் மேல் ஸ்வீட் கார்ன், குடைமிளகாயை மேலே தூவி கொள்ளவும்.

    அடுத்து அதன் மேல் மிளகு தூள், சிறிது உப்பு தூவவும்.

    கடைசியாக தோசை மேல் சீஸை துருவி விடவும்.

    சீஸ் உருகியதும் எடுத்து பரிமாறவும்.

    இப்போது சீஸ் கார்ன் கேப்சிகம் தோசை ரெடி.

    • டீ, காபியுடன் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.
    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 5

    கேரட் - 1

    கோஸ் - 50 கிராம்

    குடைமிளகாய் - 1

    சீஸ் - 1 கப் துருவியது

    பச்சை மிளகாய் - 2

    பூண்டு விழுது - அரை ஸ்பூன்

    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    பிரெட் - 12 துண்டுகள்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    ப.மிளகாய், கோஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கோஸ்,குடைமிளகாய் போட்டு அதனுடன் துருவிய சீஸ், பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, அதனை நீரில் நனைத்து, பிழிந்து விட்டு ஒரு தட்டில் வைத்து, அதன் நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து, பந்து போன்று உருட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, நன்றாக காய்ந்ததும், அதில் உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான சீஸ் வெஜிடபிள் போண்டா தயார்.

    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 4

    கேரட் - 1

    கோஸ் - 1/2 கப்

    குடை மிளகாய் - 1

    சீஸ் - 1 கப்

    பச்சை மிளகாய் - 2

    பூண்டு விழுது - அரை ஸ்பூன்

    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    பிரெட் - 12 துண்டுகள்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    சீஸ், கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கோஸ், குடைமிளகாய், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, கேரட் துருவியது, கோஸ், குடைமிளகாய் போட்டு அதனுடன் துருவிய சீஸ், பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, அதனை நீரில் நனைத்து, பிழிந்து விட்டு ஒரு தட்டில் வைத்து, அதன் நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து, பந்து போன்று உருட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அனைத்தையும் செய்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான சீஸ் பிரெட் போண்டா தயார்.

    • காலையில் ஆரோக்கியமான உணவிற்கு இந்த சாண்விச் சாப்பிடலாம்.
    • இந்த சாண்விச்சை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    ப.மிளகாய் - 1

    வெங்காயம் - 1

    முட்டை - 2

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    பிரெட் - 2

    சீஸ் ஸ்லைஸ் - 2

    சில்லி ஃபிளேக்ஸ் - விருப்பத்திற்கேற்ப

    வெண்ணெய் - விருப்பத்திற்கேற்ப

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - விருப்பத்திற்கேற்ப

    செய்முறை

    ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பிரெட்டின் மேல் சீஸ் ஸ்லைஸை வைத்து அதன் மேல் சில்லி ஃபிளேக்ஸ் தூவி மற்றொரு பிரெட்டால் மூடவும்.

    தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் பிரெட்டை வைத்து ஒரு புறம் ரோஸ்ட் ஆனதும் மறுபுறம் திருப்பி போட்டு சுற்றி வெண்ணெய் விட்டு இருபுறமும் டோஸ்ட் செய்யவும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை போட்டு அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்த பின்னர் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும்.

    இப்போது தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி முட்டை சற்று வெந்ததும் பிரெட்டை நடுவில் வைத்து முட்டையை அதன் மேல் மடித்து போட்டு பின்னர் திருப்பிபோட்டு வேக வைக்கவும்.

    முட்டை நன்றாக வெந்ததும் தவாவில் இருந்து இறக்கி இரண்டாக வெட்டி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான ஆம்லெட் சீஸ் சாண்ட்விச் ரெடி.

    • வீட்டில் சப்பாத்திகள் மீதமாகிவிட்டால் சப்பாத்தி சாண்ட்விச் செய்யலாம்.
    • உணவகங்களில் வாங்கும் சாண்ட்விச்கள் கொழுப்பு, கலோரி மிக அதிகமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி - 4

    சோளம் - 1/4 கப்

    முட்டைக்கோஸ் - 50 கிராம்

    சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்

    மயோனைஸ் - 2 தேக்கரண்டி

    வெண்ணெய் - 4 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    குடைமிளகாய் - 1

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி

    சீஸ் - 4 துண்டுகள்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    கோஸ், குடைமிளகாய், வெங்காயத்தை பொடியாகநறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம், குடைமிளகாய் மற்றும் சோளம் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

    பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

    கடைசியாக முட்டைக்கோஸ் சேர்த்து, இன்னும் இரண்டு நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

    இந்த காய்கறி கலவையில் தக்காளி சாஸ் மற்றும் மயோனைஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

    சப்பாத்தியை உங்கள் விருப்பப்படி வெட்டி ஒரு துண்டை எடுத்து அதில் காய்கறி கலவையை எடுத்து நிரப்பவும்.

    அதன் மீது சீஸ் சேர்த்து சப்பாத்தியை பாதியாக மடியுங்கள்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது வெண்ணெய் சேர்த்து உருகியதும் செய்து வைத்த சப்பாத்தி சாண்ட்விச்களை வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது பொன்னிறமாகும் வரை இருபுறமும் சமைத்து பரிமாறவும்.

    குழந்தைகளுக்கு சீஸ், உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சுவையான சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 4
    கொத்தமல்லி - 1/2 கப்
    உருளைக் கிழங்கு - 250 கிராம்
    சீஸ் - 1 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 1/4 கப்
    எண்ணெய் - தேவையான அளவு

    மாவு பிசைய :


    மைதா - 2 கப்
    எண்ணெய் - 2 ஸ்பூன்

    செய்முறை :

    உருளைக் கிழங்கை குக்கரில் 2 விசில் விட்டு வேக விடவும்.

    கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    உருளைக் கிழங்கு வெந்ததும், தோலை உரித்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளுங்கள். பின் அதில் ப.மிளகாய், சீஸ் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    மாவு பிசைய அகலமாக பாத்திரத்தில் மைதா மாவைக் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு பிசைவது போல் பிசையுங்கள். பிசைந்ததும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் நன்கு பிசையுங்கள்.

    அடுத்ததாக உங்களுக்கு எந்த அளவிற்கு சமோசா வேண்டுமோ அந்த அளவிற்கு கொஞ்சம் மாவை எடுத்து உருண்டைகளாக பிடித்து வையுங்கள். இப்படி எல்லா மாவையும் உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது சப்பாத்தி திரட்டும் கல்லில் வைத்து சப்பாத்தி உருட்டுவது போல் திரட்டுங்கள்.

    திரட்டிய மாவை கையில் எடுத்து சமோசாவிற்கு முக்கோண வடிவில் பிடிப்பதுபோல் கையில் சுருடிக் கொள்ளுங்கள்.

    அதில் தற்போது தயாரித்து வைத்துள்ள சீஸ் உருளைக் கிழங்கு பூரணத்தை தேவையான அளவு வைத்து மேற்புறத்தை மூடுங்கள். மாவை வாய் திறக்காதவாறு நன்கு அழுத்தி மூடுங்கள்.

    இப்படி அனைத்தையும் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் பொரிப்பதற்கு தோவையான எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சமோசாவை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான சீஸ் சமோசா தயார்.

    இதையும் படிக்கலாம்...சத்துக்கள் நிறைந்த சோள தோசை
    ×