search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 people"

    • ஒரு பெண் உள்பட 5 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர்.
    • அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. பவித்ரா தலை மையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது வீரப்பன்சத்திரம் கைகட்டிவலசு பகுதியில் ஒரு பெண் உள்பட 5 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் வீரப்பன்சத்திரம் கருப்பன் தெருவை சேர்ந்த சுதர்சன் (21), பெரியேசேமூர் பகுதி சேர்ந்த விக்னேஷ் (26), சூளை பகுதியை சேர்ந்த ஞானபிரகாஷ் (24), அதே பகுதியை சேர்ந்த இளங்கோ (25), வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் அவர்களிட மிருந்து 86 போதை மாத்திரைகள், 2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை யடுத்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்ட னர்.

    பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படு த்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். 

    • மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • 80 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவ டிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு மாதம் இல்லாத வகையில் ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

    இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 943 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்து ள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 16 பேர் கொரோனா பாதிப்பு டன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    தற்போது நாளொன்றுக்கு 80 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 4 பேர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அருண்குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1,250 மதிப்புள்ள 125 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில், சட்ட விரோதமாக மது மற்றும் கஞ்சா விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானி, மொடக்குறிச்சி, வரப்பாளையம் காவல் நிலைய எல்லைகளில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 4 பேர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்த 25 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேப்போல் கருங்கல்பாளையம் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது பவானி ரோடு, நெரிகல்மேடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அருண்குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1,250 மதிப்புள்ள 125 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • மதுரையில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
    • இன்ஸ்பெக்டர் சாது ரமேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை வண்டியூர், சங்கு நகரில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக, அண்ணா நகர் போலீசுக்கு தகவல் வந்தது. இதில் தொடர்புடைய குற்றவா ளிகளை கைது செ ய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமரன் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர் சாது ரமேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று நோட்டமிட்டனர்.

    அங்கு 10-க்கும் மேற்பட்ட கும்பல் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களில் 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் அரிவாள், கத்தி, 4 மிளகாய் பொடி பாக்கெட்டுகள், 3 கயிறுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    5 பேரையும் தனிப்படை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் மதுரை பாலாஜி நகர், செந்தில் மகன் அஜய் (20), செங்கல்பட்டு மாவட்டம், மாத்தூர், மாரியம்மன் கோவில் தெரு, ஜெகன் (25), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், இந்திரா நகர், சிவராமன் மகன் லோகேஸ்வரன் (20), முனிச்சாலை கான்பாளையம், பாபுஜி மகன் பிரேம்குமார் (19), செங்கல்பட்டு மாவட்டம், செண்டிவாக்கம், மாதா கோவில் தெரு, மனோஜ் குமார் (30) என்பது தெரிய வந்தது.

    அவர்கள் கூறுகையில், "மதுரை தாசில்தார் நகரை சேர்ந்த அஜய் மற்றும் முனிச்சாலை பிரேம்குமார் இருவரும் மதுரையில் கொள்ளை அடிப்பதற்காக நோட்டம் பார்த்து வந்தனர். இதில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா இல்லாத 10-க்கும் மேற்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

    அந்த பகுதிகளில் கொள்ளை அடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரும் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். நாங்கள் ஆயுதங்களுடன் புறப்பட்டு வந்தோம். மதுரை மாநகரில் எந்தெந்த இடங்களில் கொள்ளையடிப்பது தொடர்பாக 5 பேரும் வண்டியூரில் கூடி சதி திட்டம் தீட்டினோம். இதனை தெரிந்து கொண்ட போலீசார் எங்களை சுற்றி வளைத்து பிடித்து விட்டனர்" என்று வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்.

    இதனை தொடர்ந்து மதுரை மாநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளை அடிக்க பதுங்கி இருந்ததாக, 5 பேரையும் அண்ணா நகர் போலீசார் கைது செய்தனர்.

    ×