search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 year jail"

    பேருந்து மீது கல் வீசிய வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டியை அமைச்சர் பதவியில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். #ChennaiSpecialCourt #BalakrishnaReddy #Stalin
    சென்னை:

    கடந்த 1998-ல் கள்ள சாராய விற்பனையை எதிர்த்து கர்நாடக எல்லையில் போராட்டம் நடைபெற்றது அப்போது, பேருந்துகள் மீது கல் வீசியதாக தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிமீது வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது.

    இதற்கிடையே, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    மேலும்,தமிழக அமைச்ச்சர் பால்கிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.



    இந்நிலையில், பேருந்து மீது கல் வீசிய வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டியை அமைச்சர் பதவியில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அமைச்சரவையில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டியை உடனடியாக நீக்க வேண்டும். தகுதி இழந்த ஒருவர் இனி அமைச்சரவையில் தொடரக் கூடாது. 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற பாலகிருஷ்ணா ரெட்டியை காலதாமதமின்றி நீக்க வேண்டும்

    மேலும், உயர் நீதிமன்றமே கைதுசெய்ய உத்தரவிட்ட பிறகும் உயர் கல்வித்துறைச் செயலாளரை அப்பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது. எனவே, உயர் கல்வித்துறை செயலர் பொறுப்பில் இருந்து மங்கத்ராம் சர்மாவை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். #ChennaiSpecialCourt #BalakrishnaReddy #Stalin
    பேருந்துகள் மீது கல் வீசிய வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. #ChennaiSpecialCourt #MinisterBalakrishnaReddy
    சென்னை:

    கடந்த 1998-ல் கள்ள சாராய விற்பனையை எதிர்த்து கர்நாடக எல்லையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பேருந்துகள் மீது கல் வீசியதாக தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிமீது வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.



    மேலும்,தமிழக அமைச்ச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

    3 ஆண்டு சிறைதண்டனை மூலம், அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவியை பாலகிருஷ்ண ரெட்டி இழக்க நேரிடும். சிறை தண்டனைக்குப் பிறகும் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிகிறது. #ChennaiSpecialCourt #MinisterBalakrishnaReddy
    விஷம் வைத்து புலியை கொன்றவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோத்தகிரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி வனச்சரகம் தெங்குமரஹாடா பிரிவு வனப்பகுதியில் இறந்து கிடந்த எருமையின் உடலில் விஷம் தடவப்பட்டு இருந்தது. அதை சாப்பிட்ட புலி இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்த எருமையின் உடலில் விஷம் வைத்து புலியை கொன்றது தெங்குமரஹாடா சித்தி ராம்பட்டியை சேர்ந்த திம்மையன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி திம்மையனை வனத்துறையினர் கைது செய்தனர்.

    இது சம்பந்தமான வழக்கு கோத்தகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வனச்சரகர்கள் செல்வம், சக்திவேல், வனவர் நாகேஷ், வனக்காப்பாளர் கண்ணன், ஆகியோர் அரசு தரப்பு சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த கோத்தகிரி நடுவர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர், குற்றம் சாட்டப்பட்ட திம்மையனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் அபராத தொகையை கட்டதவறும் பட்சத்தில் மேலும் 3 மாதம் சிறை தண்டனை கூடுதலாக அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறியுள்ளார். 
    ×