search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 teenagers arrested"

    • சேலம் அயோத்தியாபட்டணத்தை அடுத்த குப்பனூர் பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது.
    • இக்கல்லூரியில் படிக்கும் 2 மாணவிகள் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு மீண்டும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    சேலம்:

    சேலம் அயோத்தியாபட்டணத்தை அடுத்த குப்பனூர் பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

    2 மாணவிகள்

    இந்த நிலையில் இக்கல்லூரியில் படிக்கும் 2 மாணவிகள் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு மீண்டும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் மாணவிகளை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் மாணவிகளை தங்கள் கையைப் பிடித்து சாலையை கடத்தி விடுமாறும் வற்புறுத்தி உள்ளனர். அதற்கு மாணவிகள் மறுத்ததாக தெரிகிறது.

    சரமாரி தாக்குதல்

    இதனை தொடர்ந்து அந்த 2 வாலிபர்களும் மாணவிகளை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை தடுத்து மாணவிகளை மீட்டனர். மேலும் இதுகுறித்து வீராணம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கைது

    இதில் மாணவிகளை தாக்கியது குப்பனூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (22), கார்த்திகேயன் (25) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவிகளை வழிமறித்து வாலிபர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இவர் பெரியார் பஸ் நிலையம் அருகில் யாசகம் வாங்கி வருகிறார்.

    மதுரை

    மதுரை கீரைத்துறை, தாயுமானவர் கோவில் சந்து பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பெரியார் பஸ் நிலையம் அருகில் யாசகம் வாங்கி வருகிறார்.

    இந்தநிலையில் அந்த பெண் நேற்று இரவு கூடலழகர் கோவில் அருகில் உள்ள வைகுண்ட ஏகாதசி மண்டபத்தில் படுத்தி ருந்தார். அப்போது அங்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் தனியாக படுத்திருந்த அந்த பெண்ணு க்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் அந்தப் பெண்ணை தாக்கி விட்டு தப்பிச் சென்று விட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், திடீர் நகர் போலீசில் புகார் செய்தார்.

    இதன் பேரில் இன்ஸ் பெக்டர் காசிராஜன் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஜெய்ஹிந்த்புரம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வினோத் என்ற சித்தன் (வயது 35), மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த சுப்பிரமணி மகன் அஜித் நாகராஜ் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    ×