search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 people injured"

    • நெல்லை வண்ணார்பேட்டை கொக்கிரகுளம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இவ்வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
    • சந்திப்பில் இருந்து அறிவியல் மையம் சாலை நோக்கி செல்ல வேண்டிய வாகனங்களும் கடும் போக்குவரத்து நெருக்கடியால் அணிவகுத்து நின்றது.

    நெல்லை:

    நெல்லை வண்ணா ர்பேட்டை கொக்கிரகுளம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இவ்வழியாக நாள்தோறும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.

    தனியார் பஸ் மோதல்

    இன்று பிற்பகல் 11 மணிக்கு தனியார் பஸ் ஒன்று வண்ணார்பேட்டை யில் இருந்து சந்திப்பு நோக்கி சென்றது. அந்த பஸ் கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிக்னல் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக முன்னாள் சென்ற ஆட்டோ மீது மோதியது.

    இதில் ஆட்டோவின் கண்ணாடிகள் மற்றும் தனியார் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் ஆட்டோ டிரைவர், தனியார் பஸ் டிரைவர் மற்றும் தனியார் பஸ்சின் முன்பக்கம் இருந்த பயணிகள் இருந்த சுமார் 10 பேர் காயமடைந்தனர். பின்னர் அந்த ஆட்டோ முன்னாள் சென்ற அரசு பஸ் மீதும், அரசு பஸ் அதற்கு முன்னதாக சென்ற ஒரு கார் மீதும் மோதியது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    இந்த விபத்தில் அரசு பஸ் மற்றும் கார் கண்ணாடிகள் உடைந்தது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது. உடனடியாக அங்கு இருந்த போக்குவரத்து காவலர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் 30 நிமிடத்திற்கு மேலாக ஆம்புலன்சு வராததால் காயமடைந்த வர்கள் சாலையோரம் இருக்க வைக்கப்பட்டனர்.தொடர்ந்து தனியார் ஆம்பு லன்சு வரவழைக்கப்பட்டு காயமடைந்த வர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபபட்டு வருகிறது.

    போக்குவரத்து பாதிப்பு

    இந்த சம்பவத்தால் வண்ணார் பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பகுதியில் இருந்து கொக்கிரகுளம் வரையிலும் நூற்றுக்கணக்கான வாக னங்கள் அணிவகுத்து நின்றது.

    மேலும் சந்திப்பில் இருந்து அறிவியல் மையம் சாலை நோக்கி செல்ல வேண்டிய வாகனங்களும் கடும் போக்குவரத்து நெருக்கடியால் அணிவகுத்து நின்றது. இதனால் சுமார் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்து வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர்.

    இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சின் டிரைவரை பொதுமக்கள் சூழ்ந்து அவரை தாக்கினர். பின்னர் அவரை போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    இது தொடர்பாக பயணிகள் கூறும்போது, தனியார் பஸ்கள் அதிக பயணிகளை ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மாநகர பகுதிகளில் அதிவிரைவாக சென்று வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட இந்த தனியார் நிறுவனத்தின் பஸ்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகிறது. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அவ ர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • வாணியம்பாடி கணவாய்புதூரில் மாடு விடும் விழா நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூர் கிராமத்தில் 13-ம் ஆண்டு எருது விடும் திருவிழா நடைப்பெற்றது.

    விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனி தலைமை தாங்கினார்.

    ஊர் கவுண்டர் தங்கவேல், ஒன்றிய குழு உறுப்பினர் முருகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் டி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    முன்னதாக வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் பிரேமலதா தலைமையில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

    விழாவில், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, குப்பம், மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின. இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் மீது காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்குள்ள மருத்துவ உதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து

    நிர்ணியிக்கப்பட்ட இலக்கை அதிவேகமாக கடந்து சென்ற காளை உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக 60 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 40 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 45 பரிசுகள் வழங்கப்பட்டது.

    விழாவை சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் வருகை தந்து விழாவை கண்டு ரசித்தனர். பாதுகாப்பிற்காக வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை அருகே கவிநாடு கண்மாயில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி கவிநாடு கண்மாயில் நேற்று காலை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 924 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. காளைகளை அடக்க 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர். காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து தகுதி உள்ள காளைகளை மட்டும் போட்டியில் பங்கேற்க அனுமதித்தனர். இதேபோல மாடுபிடி வீரர்களும் பரிசோதனை செய்யப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து காலை 8.30 மணியளவில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    பின்னர், ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். அப்போது, பல காளைகளை வீரர்கள் அடக்கினர். அந்த நேரத்தில் பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் அருகே நெருங்க விடாமல் வீரர்களை மிரட்டின.

    காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த 2 பேர், 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஜல்லிக்கட்டை காண புதுக்கோட்டை, இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள், லாரிகள், சரக்கு ஆட்டோக்கள், டிராக்டர் போன்றவற்றில் வந்து கண்டு ரசித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 
    ×