என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்ரீகாந்தி"
- ராமதாஸ் கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
- கட்சிக்கும் தனக்கும் ஸ்ரீகாந்தி பாதுகாப்பாக இருப்பார் என்று அவர் தெரிவித்தார்.
பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது.
அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தருமபுரியில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ம.க. தலைவர் ராமதாஸ், பா.ம.க. செயல்தலைவராக ஸ்ரீகாந்தி செயல்படுவார் என அறிவித்தார்.
கட்சிக்கும் தனக்கும் ஸ்ரீகாந்தி பாதுகாப்பாக இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
பா.ம..க செயல்தலைவர் பதவியில் இருந்து மகன் அன்புமணியை நீக்கிய ராமதாஸ் அந்த பதவியை மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி பங்கேற்க இருந்தார்.
- ராமதாஸ் ஆதரவாளர் ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி நடந்துள்ளது.
பா.ம.க. ராமதாஸ் அணியின் நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீகாந்தி கும்பகோணத்தில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
கும்பகோணத்தில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி பங்கேற்க இருந்தார்.
ராமதாஸ் ஆதரவாளர் ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி நடந்ததை அடுத்து ஸ்ரீகாந்தியின் கும்பகோணம் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- சமீபத்தில் ராமதாஸ் கூட்டிய பொதுக்குழுவில் அவரது மகளான ஸ்ரீகாந்தி கலந்து கொண்டார்.
- 22 பேர் கொண்ட நிர்வாக குழுவில் ஸ்ரீகாந்தியும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பா.ம.க.வில் தந்தை- மகன் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. தனது மகள் வழிப்பேரரான முகுந்தன் பரசுராமனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்த நிலையில், அதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் . இதன்பின்னர், கூட்டணி விவகாரம், கட்சி செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அன்புமணி மீது தொடர்ந்து ராமதாஸ் அதிருப்தி அடைந்தார். இதனை தொடர்ந்து அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி உத்தரவிட்டார்.
இப்படியாக, கடந்த பொதுக்குழுவில் ஆரம்பித்த மோதல் சமீபத்தில் நடந்த முடிந்த பொதுக்குழு வரை நீடித்தது. இருதரப்பினரும் தனது ஆதரவாளர்களுன் பொதுக்குழு கூட்டினர். சமீபத்தில் ராமதாஸ் கூட்டிய பொதுக்குழுவில் அவரது மகளான ஸ்ரீகாந்தி கலந்து கொண்டார். அவருக்கு மேடையில் ராமதாஸ் அருகிலேயே இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீகாந்திக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், ராமதாஸ் தரப்பு ஸ்ரீகாந்திக்கு பா.ம.க. நிர்வாக குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 22 பேர் கொண்ட நிர்வாக குழுவில் ஸ்ரீகாந்தியும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, என் குடும்ப பெண்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று சவுமியாவிடம் சொன்னேன். ஆனால் இப்போது நடப்பது உங்களுக்கு தெரியும். பொதுக்குழுவில் சொன்னதுபோல் குடும்ப பெண்கள் கட்சியில் வேண்டாம் என்று சொன்னேன். என்னிடம் கெஞ்சி, கூத்தாடி, வாதாடி தருமபுரியில் போட்டியிட்டார் சவுமியா. தருமபுரி தொகுதியில் முதலில் தான் நிற்பதாக கூறிய அன்புமணி, பின்னர் சவுமியா நிற்பதாக கூறினார். தனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அரசியலுக்கு வேண்டாம் என்று கூறியதற்கு எதிர்மாறாக அன்புமணி செயல்பட்டதாக ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






