என் மலர்
நீங்கள் தேடியது "மொராக்கோ"
- அருகருகே அமைந்த அந்த இரண்டு குடியிருப்பு கட்டடங்களிலும் எட்டு குடும்பங்கள் வசித்து வந்தன.
- இந்த விபத்தானது மொராக்கோவில் இந்தாண்டு நடைபெற்ற 2வது பெரிய விபத்தாகும்.
மொராக்கோவின் 2வது பெரிய நகரமான ஃபெஸ் நகரில் இரண்டு நான்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழுந்து நேற்று பெரும் விபத்து ஏற்பட்டது.
அருகருகே அமைந்த அந்த இரண்டு குடியிருப்பு கட்டடங்களிலும் எட்டு குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் நேற்று ஏற்பட்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்தர். மேலும் 16 பேர் காயங்களுடன் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
இடிபாடுகளுக்கும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியாததால் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொங்க உள்ளது.
இந்த விபத்தானது மொராக்கோவில் இந்தாண்டு நடைபெற்ற 2வது பெரிய விபத்தாகும். முன்னதாக மொராக்கோவில் கடந்த மே மாதம் ஏற்பட்ட மற்றொரு கட்டட விபத்தில் 10 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
வடமேற்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள மொராக்கோ நாட்டில் ஆறாம் முஹம்மது தலைமையிலான மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் முப்படைகளின் தலைவராக மன்னர் விளங்கி வருகிறார். அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன.
பாராளுமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களில் இருந்து பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார். ஆட்சி நிர்வாகத்தை பிரதமரால் நியமிக்கப்பட்ட மந்திரிசபை நடத்தி வருகிறது. சாடெடைன் ஒத்மானி தற்போது பிரதமர் பதவியை வகித்து வருகிறார்.
சுமார் மூன்றரை கோடி மக்கள் வாழ்ந்துவரும் மொராக்கோவின் முதன்மை மதமாக இஸ்லாம் உள்ளது. மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் அராபிய - பெர்பர் வம்சாவளியினராவார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக்கு பின்னர் மன்னர் கையொப்பமிட்ட பின்னர் இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என தெரிகிறது. #Morocco ##Moroccomilitary








