என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் கேப்டன்"

    • சமீப காலங்களில் ஐசிசி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னால் பணிந்து போன விதத்தை பார்க்கும் போது, யாராவது ஒருத்தர் இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது
    • உலக கிரிக்கெட்டின் பரந்த நலன்களுக்காக எந்தப் பாதையை எடுக்க விரும்புகிறது என்பதை ஐ.சி.சி இப்போது முடிவு செய்ய வேண்டும்

    டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அரசு மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன முடிவெடுக்கிறதோ அதை வீரர்கள் பின்பற்றுவார்கள் என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி முடிந்த உடனேயே அணி மேலாளரால் வீரர்களுக்கு இந்த முடிவு தெரிவிக்கப்பட்டதாக சல்மான் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அவர், "நாங்கள் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள், எங்கள் அரசாங்கமும் வாரியமும் எந்த முடிவை எடுத்தாலும், அனைத்து வீரர்களும் அதற்கு உடன்படுவோம்" என தெரிவித்தார். "எங்களுக்கு இன்னும் மூன்று குழு போட்டிகள் உள்ளன, எனவே அவை அனைத்தையும் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முயற்சிப்போம்," என்றும் தெரிவித்தார்.

    இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணிக்கும் முடிவுக்கு ஷாஹித் அப்ரிடி, முகமது யூசுப் மற்றும் ரஷீத் லத்தீப் போன்ற முன்னாள் கேப்டன்களும், மொயின் கான், சர்பராஸ் அகமது மற்றும் மொஹ்சின் கான் போன்ற முன்னாள் வீரர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    'சமீப காலங்களில் ஐசிசி வங்கதேசத்திற்கு செய்த காரியங்கள் அல்லது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னால் அவர்கள் பணிந்து போன விதம் ஆகியவற்றைப் பார்க்கும் போது, யாராவது ஒருத்தர் இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று லத்தீப் கூறியுள்ளார்.

    அரசியலை விளையாட்டோடு கலப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லாததால், பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாடாதது ஏமாற்றமளித்ததாகவும், ஆனால் அந்த முடிவுக்கான காரணங்களை தான் புரிந்துகொண்டதாகவும் அஃப்ரிடி கூறியுள்ளார்.  உலக கிரிக்கெட்டின் பரந்த நலன்களுக்காக எந்தப் பாதையை எடுக்க விரும்புகிறது என்பதை ஐ.சி.சி இப்போது முடிவு செய்ய வேண்டும் என்று மொயின் கூறினார்.

    முன்னதாக டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    இந்திய வீரர்கள் எங்களைவிட திறமையானவர்கள் என ஆசிய கோப்பை போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியுள்ளார். #AsiaCup2018 #INDvPAK
    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    எங்களது பந்து வீச்சாளர்கள் மீண்டும் சிறப்பாக பந்து வீசினார்கள். தவானின் பேட்டிங் அபாரமாக இருந்தது. நாங்கள் இருவரும் இணைந்து எங்களது பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது:-



    நாங்கள் சிறப்பாகவே ஆடினோம். ஆனால் 20 முதல் 30 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். சில முக்கியமான கேட்ச்களை தவறவிட்டோம். இது மாதிரி கேட்சுகளை தவறவிட்டால் வெற்றி பெறுவது கடினம்.

    நாங்கள் தொடக்கத்லேயே சில விக்கெட்டுகளை வீழ்த்த நினைத்தோம். இது தொடர்பாக பந்து வீச்சாளர்களிடம் பேசினேன். ஆனால் தவான் ரோகித் போன்ற வீரர்களை ‘அவுட்’ செய்ய முடியவில்லை. அவர்கள் திறமைசாலிகள்.

    எங்களைவிட இந்திய வீரர்கள் திறமையானவர்கள் அடுத்த ஆட்டம் எங்களுக்கு வாழ்வா? சாவா? போட்டியாகும். இதனால் அதில் சிறப்பாக செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதுவது பாகிஸ்தானா? வங்காளதேசமா? என்பது இரு அணிகள் நாளை மோதும் ஆட்டத்தின் முடிவு மூலம் தெரிய வரும்.

    இந்திய அணி நாளைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. #AsiaCup2018 #INDvPAK
    ×