என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒன்பிளஸ்"

    • புதிய ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போனும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும்.
    • இந்திய மாடலில் 50MP + 50MP இரட்டை பின்புற கேமராக்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவில் ஒன்பிளஸ் 15 சிரீசின் அடுத்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 15R அடுத்த மாதம் 17ஆம் தேதி அறிமுகப்படுத்துவதை ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 16 கொண்டிருக்கும். இத்துடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP66, IP68, IP69 மற்றும் IP69K மதிப்பீடுகளுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வாழ்நாள் முழுக்க உத்தரவாதத்துடன் கிரீன் லைன் (பச்சை கோடு) பிரச்சினை ஏற்படாது என ஒன்பிளஸ் உறுதியளிக்கிறது.

    புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் மிண்ட் பிரீஸ் வண்ணங்களில் வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்த வார இறுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 6T-ஐ போலவே இருக்கும் என தெரிகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 மற்றும் 8000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

     


    இதன் இந்திய மாடலில் 50MP + 50MP இரட்டை பின்புற கேமராக்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் சீன வெர்ஷனில் 50MP + 8MP கேமரா சென்சார்கள் இடம்பெறுகின்றன.

    இந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விவரங்கள் அடுத்த வாரங்களில் வெளியிடப்படும் என்று ஒன்பிளஸ் கூறுகிறது. வழக்கம் போல், புதிய ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போனும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும். அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஒன்பிளஸ் இந்தியா ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும்.

    • தினசரி மல்டி-டாஸ்கிங் முதல் கேமிங் வரை ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒப்பிடமுடியாத வேகத்தை உறுதி செய்கிறது.
    • ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் இதுவரை எந்த ஒன்பிளஸ் மாடலிலும் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வருகிற 13-ந்தேதி உலகளவில் மற்றும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வேகமான மற்றும் மென்மையான அனுபவத்தை உறுதியளிக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் ஒரு புரட்சிகரமான டிரிபிள்-சிப் கட்டமைப்பு, மிகவும் மென்மையான 1.5K 165 Hz டிஸ்ப்ளே மற்றும் நீண்ட நேரம் நீடிக்கும் 7300mAh பேட்டரி ஆகியவற்றை கொண்டிருக்கும். இது தினசரி மல்டி-டாஸ்கிங் முதல் கேமிங் வரை ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒப்பிடமுடியாத வேகத்தை உறுதி செய்கிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் 6.78-இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 மொபைல் பிராசஸர் வழங்கப்படுகிறது. இது முதன்மை நிலை செயல்திறனுக்கான அடித்தளத்தை வழங்குகிறது. ஒவ்வொரு தொடர்புக்கும் உடனடி பதிலுக்காக 3200Hz டச் சாம்ப்ளிங் கொண்டுவரும் ஒரு பிரத்யேக டச் ரெஸ்பான்ஸ் சிப் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு தனித்த வைஃபை சிப் நெரிசலான நெட்வொர்க் சூழல்களிலும் கூட வலுவான, நிலையான இணைப்பைப் பராமரிக்கிறது.



    ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் இதுவரை எந்த ஒன்பிளஸ் மாடலிலும் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் 7300mAh சிலிக்கான் நானோஸ்டாக் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அதிவேக சார்ஜிங்கை உறுதிப்படுத்துவதற்காக 120W சூப்பர்வூக் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் வருகிற நவம்பர் 13ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியீட்டின் போது தெரியவரும். அறிமுகத்திற்குப் பிறகு, உலகளாவிய வெளியீட்டு நிகழ்வைத் தொடர்ந்து, நவம்பர் 13 ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. வழக்கம் போல், இந்த ஸ்மார்ட்போன் அமேசான், ஒன்பிளஸ் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் விற்பனை செய்யப்படும்.

    • இந்த ஸ்மார்ட்போன் 7800mAh பேட்டரியுடன் வரும் என்று கூறப்படுகிறது.
    • ஸ்மார்ட்போன் குயிக்சில்வர், ஃபிளாஷ் வைட் மற்றும் ரேசிங் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கும்.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் பேசப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 15 மாடலுடன் அறிமுகம் செய்வதாக ஒன்பிளஸ் உறுதிப்படுத்தி இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களும் வருகிற 27ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகமாகின்றன. ஸ்மார்ட்போன் வெளியீடு உறுதியாகி இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய விவரங்கள் சீனா டெலிகாம் வலைத்தளத்தில் வெளிவந்துள்ளன.

    டெலிகாம் வலைத்தள பட்டியலில் ஒப்போ PLQ110 என்ற மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குயிக்சில்வர், ஃபிளாஷ் வைட் மற்றும் ரேசிங் பிளாக் என மூன்றுநிறங்களில் கிடைக்கும் என்று ஒன்பிளஸ் தெரிவித்துவிட்டது.

    இந்த ஸ்மார்ட்போன் அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கும் என்றும், IP66/68/69/69K டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் என்று ஒன்பிளஸ் சமீபத்தில் உறுதிப்படுத்தியது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 7800mAh பேட்டரியுடன் வரும் என்று கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் ஏஸ் 6 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.78-இன்ச் (2800×1272 பிக்சல்கள்) 1.5K AMOLED டிஸ்ப்ளே 165Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3nm பிராசஸர், அட்ரினோ 830 GPU

    12GB / 16GB LPDDR5X RAM, 256GB / 512GB / 1TB UFS 4.1 மெமரி

    டூயல் சிம் (நானோ + நானோ)

    ஆண்ட்ராய்டு 16 சார்ந்த கலர்ஓஎஸ் 16

    50MP பிரைமரிகேமரா, OIS

    8MP 120° அல்ட்ரா-வைடு கேமரா, 4K 60 fps வீடியோ பதிவு

    16MP செல்ஃபி கேமரா

    இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்

    யுஎஸ்பி டைப்-சி ஆடியோ

    ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 7 802.11 be (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.4

    7800mAh பேட்டரி

    120W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • மூன்று சென்சார்களுக்குப் பதிலாக இரண்டு சென்சார்கள் வழங்கப்படுகின்றன.
    • ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் அதன் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன்- ஒன்பிளஸ்15 வெளியீட்டு தேதியை அறிவித்தது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத இறுதியில் சீன சந்தையில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மற்றொரு டாப் என்ட் மாடலான ஒன்பிளஸ் ஏஸ் 6உடன் வரும் என்று தெரிகிறது.

    ஒன்பிளஸ்15 வெளியீட்டு தேதி

    சீனாவின் வெய்போ தள பதிவில், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு) அறிமுகம் செய்யப்படும் என்று கூறியது.

    இது ஒன்பிளஸ் 15ஐ போன்ற கேமரா பம்ப் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இருப்பினும் மூன்று சென்சார்களுக்குப் பதிலாக இரண்டு சென்சார்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    ஒன்பிளஸ்15 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 இரண்டும் ஒப்போ இ-ஷாப், ஜெடி மால் மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் முன்பதிவிற்காக பட்டியலிடப்பட்டுள்ளன. அக்டோபர் 27 அறிமுகத்திற்குப் பிறகு அவை விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டுடன் வரும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்று ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் 165Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 1.5K OLED ஸ்கிரீன் கொண்டிருக்கலாம். இத்துடன் 100W (வயர்டு) மற்றும் 50W (வயர்லெஸ்) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட், 1.5K BOE OLED ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இது அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 7,800mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
    • இந்த பிராசஸர் TSMC-இன் 3nm (N3P) செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், சீன சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    விற்பனையில் சிறந்து விளங்கிய ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாகி இருக்கும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன், ஒன்பிளஸ் நிறுவனம் இதுவரை வெளியிட்ட மாடல்களில் மிகப்பெரிய பேட்டரி கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனுடன், இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    புதிய ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் நவம்பர் 13ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. எனினும், இதுபற்றி ஒன்பிளஸ் தரப்பில் இதுவரை இந்த தகவல் உறுதிப்படுத்தவில்லை.

    ஒன்பிளஸ் 15 பேட்டரி விவரங்கள்:

    டிப்ஸ்டர் பால்ட் பாண்டா வெளியிட்டுள்ள தகவல்களின் படி , ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 7,300mAh பேட்டரி வழங்கப்படும். இத்துடன் 120W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்குமா, இல்லையா என்பது குறித்து எந்த விவரங்களும் வெளியாகவில்லை.

    பேட்டரியைத் தவிர, வரவிருக்கும் ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் பிற அம்சங்களையும் டிப்ஸ்டர் பகிர்ந்துள்ளார். அதில் இந்த ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பிராசஸர் TSMC-இன் 3nm (N3P) செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

    ஒன்பிளஸ் போனில் உள்ள மிகப்பெரிய பேட்டரியைத் தவிர, இது முந்தைய தலைமுறைகளின் 120Hz பேனல்களிலிருந்து 165Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். மேம்படுத்தப்பட்ட டிஸ்ப்ளே தொழில்நுட்பம் போன்களில் கேம்களை விளையாடும்போது அதிக ஃபிரேம் வீதங்களை ஆதரிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

    சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த கலர்ஓஎஸ் 16 உடன் வரும் என்றும், மற்ற சந்தைகளில் ஆக்சிஜன் ஓஎஸ் 16 உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய மேம்படுத்தல் பேட்டரி திறனாக இருக்கும்.
    • ஒன்பிளஸ் Nord CE 5 ஆனது 80W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 7,100mAh பேட்டரியைக் கொண்டிருக்கலாம்.

    ஒன்பிளஸ் Nord 5 பற்றி சமீபகாலமாக பல தகவல்கள் பரவி வருகின்றன. இதனிடையே ஒன்பிளஸ் Nord 5 மற்றும் Nord CE 5 ஆகியவை அடுத்த மாதம் 8-ந்தேதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் ஒன்பிளஸ் Nord 5-ன் முந்தைய மாடலான Nord 4 கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமானதால் இதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்பிளஸ் Nord என்பது செயல்திறன் சார்ந்த போன்களை வழங்குவதற்காக அறியப்பட்ட ஒன்பிளஸ் நிறுவனத்தின் இடைப்பட்ட சீரிஸ் ஆகும்.

    ஒன்பிளஸ் Nord 5 சீரிஸ் வெளியீட்டு விவரம்:

    * ஒன்பிளஸ் Nord 5 மற்றும் Nord CE 5 ஜூலை 8 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும்.

    * இது பெரும்பாலும் ஒன்பிளஸ் Nord 5 சீரிசுக்கான உலகளாவிய வெளியீட்டுத் தேதியாக இருக்கலாம். ஆனால் இந்தியாவில் அறிமுகமானது Nord 4-ஐ போலவே அதே நாளில் வெளியாகலாம்.

    * ஒன்பிளஸ் Nord 5 சீரிஸ் குறித்து நிறுவனத்தினடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. வரவிருக்கும் போன்கள் பற்றிய எந்த டீஸர்களும் வெளியாகவில்லை.

    * ஒன்பிளஸ் Nord 5 சீரிஸ், சீனாவில் கிடைக்கும் Ace 5 சீரிசின் மறுபெயரிடப்பட்ட பதிப்புகளாக வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் Nord 5-ல் என்ன எதிர்பார்க்கலாம்?

    * இந்தியாவில் ஒன்பிளஸ் Nord 5 விலை சுமார் ரூ.30,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இது இந்தியாவில் ரூ.29,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட Nord 4-ஐ போன்றது.

    * புதிய Nord 5 ஆனது MediaTek Dimensity 9400e சிப்செட் மூலம் இயக்கப்படலாம், இது தற்போது Realme GT 7 இல் உள்ளது. இது முதன்மையான Dimensity 9400 சிப்செட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய இடைப்பட்ட சிப்செட் ஆகும். ஒப்பிடுகையில், Nord 4 மாடலில் வழங்கப்பட்ட Snapdragon 7+ Gen 3 SoC உடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

    * இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய மேம்படுத்தல் பேட்டரி திறனாக இருக்கும். ஏனெனில் Nord 5 ஆனது 7,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். குறிப்பாக 100W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 6,650mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

    * இந்த ஸ்மார்ட்போனில் OIS உடன் 50MP முதன்மை கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 16MP செல்பி கேமராவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் Nord CE 5 அம்சங்கள் குறித்து வெளியான தகவல்

    * ஒன்பிளஸ் Nord CE 5 சமீபத்தில் BIS சான்றிதழில் காணப்பட்டது. இது அதன் இந்திய வருகையை உறுதிப்படுத்தியது.

    * இந்த ஸ்மார்ட்போன் Nord CE 4 போன்றே 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.7-இன்ச் FHD+ OLED பிளாட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    * புதிய Nord CE 4 இன் Snapdragon 7 Gen 3 சிப்செட்டுடன் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் Nord CE 5 ஆனது MediaTek Dimensity 8350 சிப்செட்டால் இயக்கப்படலாம்.

    * இந்த ஸ்மார்ட்போனில் 50MP சோனி LYT600/IMX882 பிரதான கேமரா, 4K 30/60fps வீடியோ பதிவு மற்றும் பின்புறத்தில் 8MP சோனி IMX355 அல்ட்ரா-வைட் கேமரா; 16MP செல்ஃபி கேமரா இருக்கும் என்று கூறப்படுகிறது.

    * ஒன்பிளஸ் Nord CE 5 ஆனது 80W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 7,100mAh பேட்டரியைக் கொண்டிருக்கலாம். இது Nord CE 4 இன் 5,500mAh பேட்டரியை விட ஒரு பெரிய மேம்படுத்தலாக இருக்கும். ஆனால் சார்ஜிங் 100W இலிருந்து 80W ஆகக் குறையும்.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.
    • புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அந்நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிளாக்‌ஷிப் தர ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். தற்போது இந்த மாடலின் மேம்பட்ட வெர்ஷன் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய பட்ஸ் ப்ரோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இயர்பட்ஸ் உற்பத்தி நிலையை எட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதன் உற்பத்தி ஆசியா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக டிப்ஸ்டரான முகுல் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.

    புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பிளாக்‌ஷிப் மாடல்- ஒன்பிளஸ் 11 உடன் அறிமுகம் செய்யப்படும் என்றும் முகுல் ஷர்மா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டின் துவக்க மாதங்களில் ஒன்பிளஸ் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், அடுத்த ஆண்டு இயர்பட்ஸ் மாடலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஸ்டெம் வைத்த இன்-இயர் டிசைன் மற்றும் சிலிகாம் டிப்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். மேலும் இதில் 11mm மற்றும் 6mm டூயல் ஆடியோ டிரைவர்கள், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் வழங்கப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதி 45db வரை நாய்ஸ் ரிடக்‌ஷன் வசதியை வழங்கும்.

    மற்ற டாப் எண்ட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களை போன்றே இதிலும் அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ஆம்பியண்ட் மோட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். ஏற்கனவே வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மூன்று மைக்ரோபோன்களை கொண்டு காலிங் மற்றும் ANC வசதிகளை வழங்கும் என கூறப்பட்டது. மேலும் இதில் ஸ்பேஷியல் ஆடியோ சப்போர்ட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புது டேப்லெட் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
    • புதிய ஒன்பிளஸ் பேட் மூலம் அந்நிறுவனம் டேப்லெட் சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு ஆண்ட்ராய்டு டேப்லெட் மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. ஒன்பிளஸ் பேட் மாடல் மீண்டும் உருவாக்கப்பட்டு வருவதாக ஒன்பிளஸ் டிப்ஸ்டரான மேக்ஸ் ஜேம்பர் தெரிவித்து இருக்கிறார். ஒன்பிளஸ் பேட் மூலம் அந்நிறுவனம் டேப்லெட் சந்தையில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் என்ற போதிலும், கடந்த ஒரு வருடமாக இந்த மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒன்பிளஸ் ஹார்டுவேர் வளர்ச்சி பிரிவும் ஒப்போ நிறுவன சாதனங்கள் வளர்ச்சி பிரிவு நெருங்கிய பரஸ்பரம் கொண்டிருக்கும் நிலையில், ஒப்போ பேட் மாடல் மேற்கத்திய பகுதிகளில் ஒன்பிளஸ் பேட் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது. "ஒன்பிளஸ் பேட்" பெயரை அந்நிறுவனம் டிரேட்மார்க் செய்து இருக்கிறது.

    ஒன்பிளஸ் பேட் மாடல் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும் மேக்ஸ் ஜேம்பர் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை 2022 முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. ஒன்பிளஸ் தனது முதல் டேப்லெட் பற்றி இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.

    ஒப்போ நிறுவனம் இரண்டு டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. ஒப்போ பேட் 11 இன்ச் 2.5K LCD 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கிறது. ஒப்போ பேட் ஏர் மாடல் 10.36 இன்ச் 2K LCD 60HZ ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன் மற்றும் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    ஒன்பிளஸ் பேட் மாடல் ஒப்போ பேட் போன்று சக்திவாய்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் இதில் ஆண்ட்ராய்டு 12L ஒஎஸ் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய டேப்லெட் மாடலுக்கு ஒன்பிளஸ் நிறுவனம் கீபோர்டு டாக் மற்றும் ஸ்டைலஸ் வசதி உள்ளிட்டவைகளை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஸ் ப்ரோ 2 இயர்பட்ஸ் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
    • புதிய பட்ஸ் ப்ரோ 2 மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் இயர்பட்ஸ் மாடல்களாக பட்ஸ் ப்ரோ சீரிஸ் இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது பட்ஸ் ப்ரோ சீரிசின் மேம்பட்ட வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ரெண்டர்களை 91மொபைல்ஸ் வெளியிட்டு உள்ளது. இதில் புதிய ஒன்பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விவரங்கள் வெளியாகி உள்ளது.

    ரெண்டர்களின் படி புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட ட்வீக் செய்யப்பட்ட டிசைன் கொண்டிருக்கிறது. மேலும் இந்த இயர்பட்ஸ் ஒவல் வடிவம் கொண்டிருக்கிறது. தோற்றத்தில் புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ஆப்பிள் ஏர்பாட்ஸ் மாடலை நினைவூட்டும் வகையில் காட்சியளிக்கிறது. இதன் மேல்புறம் மேட் ஃபினிஷ், கீழ்புறம் கிளாஸி ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    இந்த இயர்பட்ஸ் ஆலிவ் கிரீன் நிறம் கொண்டிருக்கிறது. இயர்பட்ஸ் கேசில் டைனாடியோ (Dynaudio) என்கிரேவிங் செய்யப்பட்டு உள்ளது. டைனாடியோ 1977 ஆண்டு துவங்கப்பட் டச்சு லவுட் ஸ்பீக்கர் பிராண்டு ஆகும். புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலின் டிரைவர்களை டைனாடியோ உருவாக்கி இருக்கிறதா அல்லது டியூனிங் போன்ற அம்சங்களை மட்டும் செய்திருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 11mm டூயல் டிரைவர்கள், அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த வசதி மூலம் சத்தத்தை 45 டெசிபெல்கள் வரை குறைக்க முடியும். மேம்பட்ட சவுண்ட் பிக்-அப் வழங்க இயர்பட்களில் மூன்று மைக்ரோபோன்கள் வழங்கப்படலாம். இத்துடன் LHDC 4.0 கோடெக் மற்றும் ஸ்பேஷியல் சரவுண்ட் சவுண்ட் அம்சம் வழங்கப்படலாம்.

    புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் ANC ஆன் செய்யப்பட்ட நிலையில், முழு சார்ஜ் செய்தால் ஆறு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. ANC ஆஃப் செய்தால் அதிகபட்சம் ஒன்பது மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இதனுடன் வரும் சார்ஜிங் கேஸ் சேர்த்தால் அதிகபட்சம் 32 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    Photo Courtesy: 91Mobiles

    • ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை இருவித ரேம், மெமரி ஆப்ஷன்களில் விற்பனை செய்கிறது.
    • அடுத்த ஆண்டு துவக்கத்தில் முற்றிலும் புதிய ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போனினை ஒன்பிளஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மாரட்போன் விலை இந்தியாவில் ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இரண்டு ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி ஒன்பிளஸ் 10 ப்ரோ விலை ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதே விலை அமேசான் மற்றும் ஒன்பிளஸ் சில்லறை விற்பனை மையங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. எனினும், இந்த விலை குறைப்பு நிரந்தரமானதா அல்லது குறுகிய காலத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 66 ஆயிரத்து 999 விலையில் வெளியிடப்பட்டது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 71 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது விலை குறைப்பின் படி இரு வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 61 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 66 ஆயிரத்து 999 என மாற்றப்பட்டு இருக்கிறது.

    அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைதளத்தில் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் 10 ப்ரோ விலையை மேலும் குறைக்க முடியும். கூடுதலாக ஒன்பிளஸ் பட்ஸ் Z2 மாடலை ரூ. 2 ஆயிரத்து 299 விலையில் வாங்கிட முடியும். ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஒன்பிளஸ் பட்ஸ் Z2 உண்மையான விலை ரூ. 5 ஆயிரத்து 499 ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் QHD+ வளைந்த AMOLED டிஸ்ப்ளே, LTPO 2.0 தொழில்நுட்பம், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 8MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
    • நார்டு சீரிஸ் தவிர ஒன்பிளஸ் அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஒன்பிளஸ் நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை தொடர்ந்து அதன் ரெண்டர்கள் தற்போது வெளியாகி உள்ளது. ரெண்டர்களின் படி புதிய நார்டு CE 3 மாடலின் மத்தியில் பன்ச் ஹோல் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய நார்டு CE 2 மாடலில் பன்ச் ஹோல் இடது புறத்தில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும் கேமரா பம்ப்-க்கு மாற்றாக பிரைமரி கேமராவுடன், இரண்டு ரிங்குகள் காணப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள ஃபிளாட் சைடுகள் தோற்றத்தில் ஒன்பிளஸ் X போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் இடது புறத்தில் வால்யூம் ராக்கர்கள், வலது புறத்தில் கைரேகை சென்சார் அடங்கிய பவர் பட்டன், கீழ்புறத்தில் 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் நார்டு CE 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.7 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619L GPU

    6 ஜிபி, 8 ஜிபி, 12 ஜிபி ரேம்

    128 ஜிபி, 256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    108MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், சூப்பர் லீனியர் ஸ்பீக்கர்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப்-சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய ஒன்பிளஸ் நார்டு CE 3 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் அல்லது இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து புதிய மாணிட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இது தவிர ஏராளமான சாதனங்களை அறிமுகம் செய்யும் பணிகளிலும் ஒன்பிளஸ் ஈடுபட்டு வருகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் டிசம்பர் 12 ஆம் தேதி இரண்டு புது மாணிட்டர்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. புது மாணிட்டர் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் தனது சாதனங்கள் பிரிவை நீட்டிக்க இருக்கிறது. புது மாணிட்டர்கள் X 27 மற்றும் E 24 என அழைக்கப்படுகின்றன. இவற்றில் முறையே 27 இன்ச் மற்றும் 24 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புது மாணிட்டர் மற்றும் அதன் அளவீடுகளை ஏற்கனவே உறுதிப்படுத்திய நிலையில், தற்போது இவற்றின் மிக முக்கிய அம்சம் பற்றிய தகவலை ஒன்பிளஸ் வெளியிட்டு இருக்கிறது. இந்த அம்சம் X27 மற்றும் E 24 என இரண்டு மாடல்களிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. புதிய ஒன்பிளஸ் மாணிட்டர்களில் 165Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இது அனிமேஷன் காட்சிகளை சிறப்பாக கையாள்வதோடு, தலைசிறந்த வியூவிங் அனுபவத்தை வழங்கும்.

    இந்த மாணிட்டர் 1ms ரெஸ்பான்ஸ் டைம் கொண்டிருப்பதால், கேம்பிளே மிகவும் சீராக இருக்கும். புதிய ஒன்பிளஸ் மாணிட்டர்களில் AMD-யின் Freesync பிரீமியம் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இது கேம் மற்றும் வீடியோ பார்க்கும் போது அவை ஸ்டடர் அல்லடு ஸ்கிரீன் டியரிங் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

    இரு மாணிட்டர்களில் ஒன்பிளஸ் X 27 மாணிட்டர் பிரமீயம் மாடல் என்றும் E 24 மாடல் மிட்-ரேன்ஜ் சாதனம் என்றும் ஒன்பிளஸ் ஏற்கனவே தெரிவித்துவிட்டது. இவற்றில் X 27 மாடல் தலைசிறந்த டிஸ்ப்ளே மற்றும் செயல்திறன் பணி மற்றும் கேமிங்கிற்கு ஏற்றவாரு இயங்கும். E 24 மாடல் அன்றாட பணிகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    ஒன்பிளஸ் X 27 மற்றும் E 24 மாணிட்டர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. மேலும் புது மாணிட்டர்களுடன் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய Y1S ப்ரோ 55 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலையும் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ×