என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    துஷ்டசக்திகளை ஏவி விட்டு செய்தல், யந்திரத் தகடுகள் வைத்து செய்தல் போன்றவற்றால் செய்வினை செய்திருப்பின் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருக்கும்.
    துஷ்டசக்திகளை ஏவி விட்டு செய்தல், யந்திரத் தகடுகள் வைத்து செய்தல் போன்றவற்றால் செய்வினை செய்திருப்பின் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருக்கும்.

    வீட்டில் உள்ள நிம்மதி காணாமல் போகும், கணவன் மனைவிக்குள் சதாகாலமும் சண்டை சச்சரவு ஏற்படும்.

    வீட்டில் பொருட்செலவுகளை ஏற்படுத்தும், பல விடயங்கள் நடக்கும்.

    பிள்ளைகளுக்கு படிப்பில் குறைபாடு ஏற்படும்.

    பணம் சேமிப்பு ஆகாது, பண விரயம் ஏற்படும்.

    எதிர்பாராத நோய்களையும், வாகன விபத்துக்களையும் ஏற்படுத்தும்.

    தெய்வ வழிபாடு செய்ய முடியாது, கடவுள் நம்பிக்கை குறையும்.

    அதிக கடன்கள் உண்டாகும்,

    மனநிம்மதி இருக்காது, பசி, தூக்கம் இருக்காது, மனதில் எதிர்மறை சிந்தனை, எண்ணங்கள் தோன்றும்.

    இதற்கு மாறாக இப்படியும் இருக்கும், அதாவது அசைவ உணவு சாப்பிட அதிக ஆர்வம், நீண்ட நேர தூக்கம், அதிக கோபம், அதிகமான காம உணர்வு எண்ணங்கள் இவைகளையும் ஏற்படுத்தும்.

    எந்த தொழில், வேலை செய்தாலும் நஷ்டம், தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின் செய்வினை கோளாறு பாதிப்பு உண்டு என உறுதிப்படுத்தலாம்.

    மதுபோதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பாம்புரம் தலத்தில் வழிபட முழுமையான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
    ஒருவரது மது குடிக்கும் பழக்கம் அவரை மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரையும் அனைத்து வகையிலும் பாதிக்க செய்து விடும். தொடர்ந்து மது குடிப்பவர்கள் கடைசியில் அதற்கு அடிமையாகி உடல் நலம், மன நலம், வாழ்க்கை வளம் எல்லாவற்றையும் தொலைத்து நிர்க்கதியாக நிற்க வைத்து விடுகிறது.

    ராகு- கேது போன்ற சர்ப்ப கிரகங்கள் ஜாதகத்தில் சரியான இடத்தில் இல்லாமல் தோஷம் இருந்தால் இப்படி மதுவுக்கு அடிமையாகி அவர்கள் மனநிலையில் ஒரு தெளிவில்லாமல் இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். அதற்கு நாக தோஷ பரிகாரம் செய்ய வேண்டும் என்பது சிலரின் கூற்றாக உள்ளது.

    ராகு,கேது திருநாகேஸ்வரம், பெரும்பள்ளம் போன்ற தலங்களில் தனித்தனியாக இருக்கிறார்கள். காளகஸ்தி போன்ற புகழ்பெற்ற திருக்கோவில்களில், சிவபெருமானே ராகு-கேதுக்களாக வீற்றிருந்து பக்தர்களின் தோஷம் நீக்கி அருள்பாலிக்கிறார்.

    திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்றத் தலமாக விளங்கும் திருப்பாம்புரத்தில், ராகுவும்- கேதுவும் ஏக சரீரம் எனப்படும் ஓருடலாய் இணைந்து வீற்றிருப்பது சிறப்புக்குரியதாக உள்ளது.

    மேற்கு பார்த்த சன்னிதியில் இருந்து இறைவனை நெஞ்சில் நிறுத்தி வணங்கிய நிலையில் ராகு-கேது உள்ளனர். இருவரும் ஒருவராய் வீற்றிருப்பதால், மற்ற நாக பரிகார தலங்களைக் காட்டிலும், இந்தத் தலம் சிறப்புக்குரியதாக விளங்குகிறது.

    எனவே மதுபோதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தலத்தில் வழிபட முழுமையான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிறப்பு பரிகாரம் இந்த ஆலயத்தில் செய்யப்படுகிறது. மது பாதிப்பு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, இந்த ஆலயத்திற்கு எதிரே உள்ள சேஷ தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்னர் கோவிலுக்குள் சென்று சுவாமியையும், அம்பாளையும் பிரார்த்தனை செய்து விட்டு, ராகு- கேதுவுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் பலர் மது மயக்கத்தில் இருந்து மாறுதல் அடைந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கு நம்பிக்கைதான் முக்கியம் என்றும் சொல்கிறார்கள்.

    தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு முறை இந்தத் திருத்தலத்திற்கு சென்று வரலாமே. நம்பிக்கையோடு சென்று வாருங்கள். நல்லதே நடக்கும்.
    நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது ”போகர்12000” நூலில் கூறியிருக்கிறார்.
    நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது ”போகர்12000” நூலில் கூறியிருக்கிறார். இந்த பரிகாரத்தை வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார். அவர் குறிப்பிடும் அந்த தினம் ”நாக சதுர்த்தி திதி”

    ‘நாக சதுர்த்தி திதி” அன்று, அரச மரம் ஒன்றின் அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும் நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம் என்கிறார் போகர். 
    திருவாரூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நடனேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் வெண்குஷ்டம் எனப்படும் தொழு நோய் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் பெற்றதாக விளங்குகிறது.
    வெண்குஷ்டம் எனப்படும் தொழு நோய் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் பெற்றவர் நடனேஸ்வரர். திருவாரூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் மருத நிலத்திற்கு உரிய இயல்புகளோடு உள்ளது தலையாலங்காடு என்னும் திருத்தலம். இங்கு நடனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    கோவிலுக்கு வெளியே கீழ்புறத்தில் ‘சங்குதீர்த்தம்’ என்ற பெயரில் திருக்குளம் ஒன்று இருக்கிறது. இந்த குளத்தில் வெளியில் இருந்து நீர்வரத்து இல்லை. ஊற்று நீர்தான் பெருக்கெடுத்து குளத்தை நிரப்புகிறது. இந்த தீர்த்தம், அந்த மண்ணுக்கே உரிய வேதி, மருந்துப்பொருட்களோடு கலந்து இருப்பதால், வெண்குஷ்டம் எனப்படும் தொழு நோய் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் பெற்றதாக விளங்குகிறது.

    இந்தத் திருக்குளத்தில் நீராடி விட்டு, ஆலயத்திற்குள் உள்ள சுவாமி, அம்பாளுக்கு 5 நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்பவர்களுக்கு, அபிஷேக விபூதி மற்றும் மூலிகை மருந்து கொடுக்கப்படுகிறது. அதனை எடுத்துச் சென்று 48 நாட்களுக்கு விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு, மூலிகை மருந்தினை சாப்பிட வேண்டும். நோய் தீர்ந்ததும் மீண்டும் ஆலயத்திற்கு வந்து சங்கு தீர்த்தத்தில் நீராடி, சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து, புதுத் துணிகள் சாத்தி வழிபட வேண்டும். இந்த திருக்குளத்தில் தொடர்ந்து 48 நாட்கள் நீராடினால் கண்கண்ட பலன் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
    நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும். மேலும் சுபகிரகங்கள் பார்த்தால் தோஷம் விலகும். அடிக்கடி சர்ப்ப சாந்தியைச் செய்து கொள்ள நன்மை உண்டாகும்.
    ராகு, கேதுக்களின் மத்தியில் மீதியுள்ள கிரகங்கள் இடம் பெற்றிருக்குமானால் அது கால சர்ப்ப தோஷம் என்று கூறப்படும். சந்திரனுக்கு முன்னாலோ, அல்லது பின்னாலோ ராகு நின்றால் நாக தோஷம் இருப்பதாக கொள்ள வேண்டும். ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டிலோ அல்லது பன்னிரண்டிலோ ராகு தனித்து நின்றால் நாக தோஷம் உண்டு.

    ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷத்தால் திருமண தடை ஏற்படும். ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும். புத்திர ஸ்தானத்திற்கு 1,5,9 ஆகிய மூன்று திரிகோண ஸதானங்களில் எங்காவது ராகு அல்லது கேது இடம் பெற்றிருந்தால் அது புத்திர தோஷத்தை அளிக்கக்கூடியது.

    இவர்கள் அடிக்கடி சர்ப்ப சாந்தியைச் செய்து கொள்ள நன்மை உண்டாகும். மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும். மேலும் சுபகிரகங்கள் பார்த்தால் தோஷம் விலகும்.
    குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலையன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் உடல் நோய்கள், கிரக தோஷங்கள் அகலும்.
    குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பிரசித்தி பெற்ற தாணுமாலையசுவாமி கோயில் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் இவ் ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் உள்ள 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் உடல் நோய்கள், கிரக தோஷங்கள் அகலும். செவ்வாய், சனி, மூல நட்சத்திர நாள், அமாவாசை நாட்களில் வெண்ணெய் சாத்தி வழிபடுவது உகந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆஞ்சநேயர் ஜெயந்தி இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதே போல் இந்த ஆண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி வரும் ஜனவரி மாதம் 5-ம்தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி அன்றைய தினம் ஆஞ்சநேயருக்கு களபம், பால், தயிர், நெய், குங்குமம், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடக்கும் .அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு எதிரே உள்ள ராமபிரானுக்கு புஷ்பாபிசேகம் நடக்கும். பின்னர் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு மலர்களால் புஷ்பாபிஷேகம் நடக்கும். இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கும். ஆஞ்சநேயரை வழிபட்டால் வாழ்வில் எல்லா வித துன்பங்களும் விலகும் என்பதால், மும்மூர்த்திகளை வணங்கி விட்டு, பக்தர்கள் ஆஞ்சநேயர் தரிசனம் செய்வதை வழக்கமாக உள்ளனர்.
    ஜாதகத்தில் எந்த தோஷங்கள் இருப்பவர்கள் திருப்பாம்புரம் கோவிலுக்கு வந்து தோஷ நிவர்த்தி பரிகாரங்களை செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புத்தி கேது புத்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க திருப்பாம்புரம் தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நவர்த்தி செய்து கொள்ளலாம்.

    கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் (வழி-பேரளம்) செல்லும் சாலையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி 2 கிலோ மீட்டர் சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம். 
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஐராவதேசுவரர் கோவிலில் வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஐராவதேசுவரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் ஐராவதேசுவரர், பாரிஜாதவனேசுவரர், பிரம்மபுரேசுவரர், இந்திராபுரீசுவரர், புஷ்பபுரீசுவரர், ஐராவதபுரீசுவரர் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அர்த்த மண்டபத்தின் அடுத்துள்ள கருவறையில் இறைவன் ஐராவதேசுவரர் லிங்கத்திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம்.  ஆலயத்தின் தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம்.

    ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று இறைவிக்கு வளையல் அலங்காரம் நடைபெறும். பின் அந்த வளையல்கள் பெண்களுக்கு விநியோகம் செய்கின்றனர். அன்று அம்மன் வயிற்றில் முளைப்பாரி கட்டி அதை குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு பிரசாதமாகத் தருவர். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள். மேலும் இறைவியின் சந்நதியின் முன் தொட்டில் கட்டி குழந்தைக்காக பெண்கள் வேண்டிக்கொள்கின்றனர்.  

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நேமம் என்ற இந்த தலம். சாலையின் ஓரத்திலேயே உள்ளது
    ஆலயம்.    
    ராகு கேது தோஷத்திற்கு பரிகாரம் செய்ய தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்பு ஸ்தலங்கள் உள்ளன. இந்த ஸ்தலங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நாகமுகுந்தன்குடி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியிலிருந்து வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

    நாகப்பட்டினம்: காயாரோகணேஸ்வரர் எனும் இத்தல இறைவனை ஆதிசேஷன் பூஜித்து மகிழ்ந்தார். அம்பாளுக்கு நீலாயதாட்சி எனும் திருப்பெயர்.

    சென்னை - குன்றத்தூர்: பூவிருந்தவல்லிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் காமாட்சி அம்மன் சமேதராக நாகேஸ்வரர் அருட்பாலிக்கிறார்.

    சென்னை-கெருகம்பாக்கம்: சென்னை போரூர் குன்றத்தூர் பாதையில் கெருகம்பாக்கத்தில் இத்தலம் உள்ளது. போரூர் சந்திப்பிலிருந்து 3 கி.மீ தொலைவு. நீலகண்டேஸ்வரர், ஆதிகாமாட்சி எனும் திருப்பெயர்களோடு இறைவனும், இறைவியும் அருள்கின்றனர்.

    கோடகநல்லூர்: திருநெல்வேலியிலிருந்து மேற்கே 13 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் காளத்தீஸ்வரர் எனும் திருநாமத்தோடு இறைவன் அருட்பாலிக்கிறார்.     
    திருக்களாஞ்சேரி: மயிலாடுதுறை, தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் மூலவர் சுயம்புலிங்கமாக நாகநாதர் அருட்பரப்புகிறார்.

    ஆம்பூர்: வேலூர், வாணியம்பாடிக்கு அருகில் இத்தலம் உள்ளது. அபயவல்லி சமேத நாகரத்தின ஸ்வாமி எனும் திருப்பெயர்களோடு இறைவனும், இறைவியும் அருட்பாலிக்கின்றனர்.

    பெத்தநாகபுடி: திருவள்ளூர் மாவட்டம், சோளிங்கருக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. நாகவல்லி சமேத நாகநாதேஸ்வரராக இங்கு எழுந்தருளியிருக்கின்றனர்.

    திருக்கண்ணங்குடி: திருவாரூர்-நாகை பாதையிலுள்ள கீழ்வேளூருக்கு 3 கி.மீ, தொலைவில் இத்தலம் உள்ளது. சுயம்பு லிங்கமாக காளத்தீஸ்வரர் எனும் திருப்பெயரோடு வீற்றிருக்கிறார்.

    ஊஞ்சலூர்: ஈரோடுக்கு அருகேயுள்ள கொடுமுடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் நாகேஸ்வரர் மூலவராக வீற்றிருக்கிறார்.

    காஞ்சிபுரம்: பெரிய காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ளது. மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்தது. மூலவர் மகாகாளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். ராகுகேது பூஜித்த தலமும் ஆகும்.

    ஸ்ரீகாளஹஸ்தி: சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவும், திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவும் உள்ளன. புகழ்பெற்ற ராகு-கேது தலமாகும். இறைவன் காளத்திநாதர் என்றும், அம்மை ஞானப்பூங்கோதை எனும் திருப்பெயரோடும் எழுந்தருளியுள்ளார்கள்.

    கீழப்பெரும்பள்ளம் : மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து இத்தலத்தை அடையலாம். மூலவர் நாகேஸ்வரர். கேது பகவானுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது.   

    திருநாகேஸ்வரம் : கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகேஸ்வரரையும், பிறையணிவாணுதலாள் அம்மனையும், இரண்டாம் பிராகாரத்திலுள்ள நாகராஜரையும் வணங்கி வாருங்கள்.

    கும்பகோணம் : நகரின் மையத்திலேயே அமைந்துள்ள நாகேஸ்வரன் கோயிலில் அருட்பாலிக்கும் நாகேஸ்வரரையும், பெரியநாயகியையும் தரிசியுங்கள். ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.

    பாமணி : மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் சுயம்பு லிங்கமாக அருளும் நாகநாதரையும், அமிர்தநாயகியையும் தரிசியுங்கள். பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் தோன்றி வழிபட்டதால் பாதாளீச்சரம் என்று இத்தலத்தை அழைப்பர்.

    திருப்பாம்புரம் : கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து பேரளம் வழியாக இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பாம்புரேஸ்வரரையும், வண்டார் பூங்குழலியையும் தரிசியுங்கள். ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.

    ஸ்ரீவாஞ்சியம் : கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிருந்து நன்னிலம் வழியாக இத்தலத்தை அடையலாம். ராகுவும், கேதுவும் சேர்ந்திருக்கும் அரிய கோலத்தை இங்கு தரிசிக்கலாம்.

    நாகூர்: நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள இத்தலத்தில் நாகவல்லி சமேத நாகநாதராக இறைவன் அருட்பாலிக்கிறார். நாகராஜன் பூஜித்து பேறுபெற்ற தலம் இது.

    பேரையூர் : புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலவராக நாகநாதரும், அம்மன் பிரகதாம்பாள் எனும் திருப்பெயரோடும் திகழ்கிறார்கள். நாகராஜன் பூஜித்த தலம் இது.

    நயினார்கோவில் : ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. சௌந்தரநாயகி சமேத நாகநாதராக இங்கு இறைவன் அருட்பாலிக்கிறார். 
    திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் ஈசனை வணங்கினால் திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
    சென்னை ஆவடியை அடுத்த வட திருமுல்லைவாயலில் 1800 ஆண்டு பழமை வாய்ந்த மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்குள் நுழைந்தவுடன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் மாசிலாமணீஸ்வரர். லிங்கத்தின் மேல் பகுதியில் வெட்டுப்பட்ட தடம் உள்ளது. கொடி போன்ற இடை கொண்டதால் இங்குள்ள அம்பாள் கொடியிடை நாயகி என அழைக்கப்படுகிறாள்.

    இங்குள்ள குளம் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் நீராடி, இக்கோயில் வீற்றிருக்கும் மாசிலாமணீஸ்வரரை வணங்கினால் பாவங்கள் நீங்கும். இங்குள்ள நந்திக்கு பூஜை செய்த மாலையை அணிந்து கொண்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும். திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அம்மனை குளிர்விக்கும் வகையில் தினமும் அம்மனுக்கு சந்தன காப்பு செய்யப்படுகிறது. 
    குழந்தைபேறு, திருமண வரம் கேட்டு வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை அள்ளித் தரும் வரப்பிரசாதியாக செல்லாண்டி அம்மன் திகழ்கிறாள்.
    சப்த மாதர்களுக்கான ஆலயம் ஒன்று திருச்சிக்கு அருகே உள்ள துவாக்குடி என்ற கிராமத்தில் உள்ளது. இந்த ஆலயத்தின் கருவறையில் சப்த மாதர் வரிசையாக காட்சித்தர, நடுவே உள்ள இந்திராணி ‘செல்லாண்டி அம்மன்’ என்ற திருநாமத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

    குழந்தைபேறு, திருமண வரம் கேட்டு வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை அள்ளித் தரும் வரப்பிரசாதியாக செல்லாண்டி அம்மன் திகழ்கிறாள்.

    திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் துவாக்குடி எனும் கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். திருச்சியில் இருந்து நகரப்பேருந்து வசதி உள்ளது. 
    ஒருவரது ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் அவரது வாழ்க்கையில் முன்னேற்றமே இருக்காது. ஒருவருக்கு பித்ரு தோஷம் உள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்வது என்று பார்க்கலாம்.
    1. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாமிடம் என்பது பூர்வபுண்ணியம் ஆகும். அதே ஐந்தாமிடம் தான் அவர்களுடைய சிந்தனைஸ்தானம், புத்திரஸ்தானம், குல தெய்வஸ்தானம், மன உறுதி ஸ்தானம் ஆகும்.இங்கே ராகு அல்லது கேது இருக்க ஒரு ஆணோ பெண்ணோ பிறந்துவிட்டால், அந்த ஜாதகருக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும். பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.

    2. பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்த கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன. இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப்பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.

    3. சூரியன் மற்றும் சந்தினுக்கு கிரஹண தோஷத்தை தரும் ராகு மற்றும் கேது சூரியனோடும் சந்திரனோடும் இணைந்து நிற்பது மற்றும் சூரியனும் சந்திரனும் ராகு/கேது சாரத்தில் நிற்பது போன்றவை பித்ரு தோஷத்தை உறுதி செய்கின்றது.

    4. ஒரு ஜாதகத்தில் சனைஸ்வரரின் நிலையும் பித்ரு தோஷத்தை தெரிவிக்கும். சனைஸ்வர பகவான் பித்ரு ஸ்தானத்தில் நிற்பது, வக்ரம் பெற்று நிற்பது, குடும்பந்தில் அனைவரின் ஜாதகங்களிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வக்ரம் நீசம் ஆகிய நிலைகளில் நிற்பது பித்ரு தோஷத்தை தெரிவிக்கும்.
    ×