என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- நேர்த்தியாகக் கட்டப்பட்ட இந்த கோவில் தூண்களில் நல்ல வேலைப்பாடு அமைந்த சிற்பங்களை காணலாம்.
- திருமாலின் அவதாரங்கள் கண்ணைக் கவரும் விதத்தில் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த கோவில் கும்பகோணம் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் பெரிய கடை வீதியின் தென்கோடியில் அமைந்திருக்கிறது.
தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்திய ரகுநாத நாயக்க மன்னரால் கி.பி.1620 ல் இக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு.
"ஆதி கும்பேஸ்வரர்" திருக்கோவிலுக்கு மிக அருகிலேயே இக்கோவில் இருக்கிறது. கோவிலின் மொத்த நிலப்பரப்பு சுமார் இரண்டு ஏக்கர் இருக்கும்.
5 நிலை ராஜகோபுரத்துடன் வடக்கு நோக்கி மூலவர் ராமர், சீதை, பரதன், லட்சுமணன், சத்ருக்கன், அனுமன் எல்லாருடனும் சாமரக் குடையின் கீழ் பட்டாபிஷேக கோலத்தில் கண்குளிரக் காட்சியளிக்கிறார்.
நேர்த்தியாகக் கட்டப்பட்ட இந்த கோவில் தூண்களில் நல்ல வேலைப்பாடு அமைந்த சிற்பங்களை காணலாம்.
திருமாலின் அவதாரங்கள் கண்ணைக் கவரும் விதத்தில் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன.
ஆஞ்சநேயர் வீணையுடன் ராமாயண பாராயணத்துடனும் இருக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
பங்குனி மாதத்தில் வரும் ராமநவமி அன்று இங்கு வெகு விமரிசையாக விழா நடக்கும்.
கோவிலை விட்டு வெளியே வந்தாலும் இந்த கோவிலின் 62 தூண்களில் காணப்படும் நுண்ணிய வியக்கத்தக்க சிற்பங்கள் நம் கண்ணிலேயே நிற்கும்.
சாரங்கபாணி கோவில் காவிரியாற்றின் தென் பகுதியில் அமைந்திருக்கிறது. சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது.
கிழக்கு நோக்கி 147 அடி உயரம் கொண்ட 11 நிலை ராஜகோபுரம் உண்டு.
மூன்று பிரகாரங்களை உள்ளடக்கியது. மூலவர் ஸ்ரீசாரங்கபாணி பெருமாள்.
உத்யோக சயனத்தில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட நிலை. ஆராவமுதன் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
இத்தலத்தில் உள்ள இறைவன் சாரங்கம் என்னும் வில்லை ஏந்தி காட்சியளிப்பதால் சாரங்கபாணி என்று பெயர் பெற்றார்.
தாயார் கோமளவல்லித் தாயார். புஷ்கரணி, ஹேமபுஷ்கரணி, மற்றொரு பெயர் பொற்றாமரைக்குளம். விமானம் வைதீக விமானம்.
குளத்திற்கு வடக்கே ஹேமமுனிவர் சன்னதி உண்டு.
வசந்தமண்டபம், 100 கால் மண்டபம் இந்த கோவிலுக்கு தனிச்சிறப்பு.
ஹேமமுனிவரின் மகளாகத் தோன்றிய திருமகள், இத்தலத்தில் தவம்புரிந்து கோமளவல்லி என்ற பெயர் கொண்டு இத்தல இறைவனை மணந்ததாக ஐதீகம்.
உபய பிரதான திவ்விய சேத்திரமான இத்தலத்தில் மூலவருக்கு என்ன சிறப்பு செய்யப்படுகிறதோ, அதே சிறப்பு உற்சவ மூர்த்திக்கும் செய்யப்படுகிறது.
கோமளவல்லி தாயார் இதுவரை கோவிலை விட்டு வெளியே வந்ததில்லை.
எனவே தாயாருக்கு படிதாண்டா பத்தினி என்ற பெயரும் உண்டு.
உத்ராயண புண்ணிய காலத்தில் அதற்குரிய உத்ராயண வாசல் வழியாகவும், தட்சிணாயண காலத்தில் தட்சிணாயண வாசல் வழியாகவும் சென்றுதான் பகவானைத் தரிசிக்க வேண்டும்.
சுவாமியின் கருவறையே தேர் வடிவில் பிரமாண்டமான சக்கரங்களைக் கொண்டு மிக நுண்ணிய கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்டிருக்கிறது.
சோழ நாட்டு 40 திவ்ய தேசங்களில் இத்தலம் 14-வதாக போற்றப்படுகிறது.
இப்பெருமாளுக்கு "ஆராவமுதன்" என்று ஸ்ரீமந் நாத முனிகள் திருப்பெயர் சூட்டியிருக்கிறார்.
ஸ்ரீஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்¢கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மங்களா சாசனம் செய்துள்ளனர்.
ஜோதிடத்தில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும்போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது.
நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை இருக்கின்றனர்.
அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி - ஸ்ரீ துர்காதேவி (அண்டபுஜம்)
கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப்பெருமான்)
ரோகிணி - ஸ்ரீகிருஷ்ணன் (விஷ்ணு)
மிருகசீரிடம்- ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவபெருமான்)
திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் - ஸ்ரீராமர் (விஷ்ணு)
பூசம் - ஸ்ரீதட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம்- ஸ்ரீஆதிசேசன் (நாகம்மாள்)
மகம்-ஸ்ரீசூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம்- ஸ்ரீஆண்டாள் தேவி
உத்திரம் - ஸ்ரீ மகாலட்சுமி தேவி
அஸ்தம்- ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி - ஸ்ரீ நரசிம்மூர்த்தி
விசாகம் - ஸ்ரீமுருகப் பெருமான்
அனுசம்- ஸ்ரீலட்சுமி நாராயணர்
கேட்டை - ஸ்ரீவராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம் - ஆஞ்சநேயர்
பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம்- ஸ்ரீஹயக்கிரீவர் (விஷ்ணு)
அவிட்டம் - ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)
சதயம் - ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி - ஸ்ரீமகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்
அந்தந்த நட்சத்திரத்துக்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜாதகபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தேய்பிறை அஷ்டமி தினத்தன்று செய்யப்படும் பைரவர் வழிபாடு மிகச்சிறந்த நற்பலன்களைத் தரும்.
- ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு சிறப்பு பெயர் உண்டு.
கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி, பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும்.
இதனை ருத்ராஷ்டமி தேவாஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்வார்கள். இது தேவர்களே பைரவரை பூஜிக்கின்ற நாள்.
எனவே தேய்பிறை அஷ்டமி தினத்தன்று செய்யப்படும் பைரவர் வழிபாடு மிகச்சிறந்த நற்பலன்களைத் தரும்.
தைமாதம் முதல் துவங்கி ஒவ்வொரு செவ்வாய், சனிக்கிழமையும் பைரவரை வணங்கி பஞ்சதீபம் ஏற்றி, காலபைரவ அஷ்டகம் படித்து பூஜை செய்து வந்தால், எதிரிகள் அழிந்து கடன்கள் தீர்ந்து யம பய மட்டுமல்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம்.
செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமையில் வரும் பரணி, ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திரம் இணைந்த நாள் பைரவருக்கு மிகவும் உகந்த நாளாக கருத்தப்படுகிறது.
12 மாத அஷ்டமி பெயர்கள்
ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு சிறப்பு பெயர் உண்டு.
மார்கழி மாதம்: திரியம்பகாஷ்டமி,
சித்திரை மாதம்: ஸ்நாதனாஷ்டமி,
வைகாசி மாதம்: சதாசிவாஷ்டமி,
ஆனி மாதம்: பகவதாஷ்டமி,
ஆடி மாதம்: நீலகண்டாஷ்டமி,
ஆவணி மாதம்: ஸ்தானு அஷ்டமி,
புரட்டாசி மாதம்: சம்புகாஷ்டமி,
ஐப்பசி மாதம்: ஈசான சிவாஷ்டமி,
கார்த்திகை மாதம்: சம்புகாஷ்டமி
மார்கழி மாதம்: ஈசான சிவாஷ்டமி,
தை மாதம்: தேவாகாலபைரவாஷ்டமி.
நவக்கிரகங்களுக்கும் சனிபகவானுக்கும் பைரவர்தான் குரு.
சனிபகவான் அர்த்தாஷ்டம, அஷ்டம, கண்டகம், ஏழரை ஆண்டு சனி காலம், சனி திசை காலங்களில் ஆட்டிப்படைப்பவர்.
இப்படி சனி பகவானால் ஏற்படக்கூடிய துன்பங்களைத் தீர்ப்பவர் பைரவர்.
ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை மற்றும் வெற்றிலை மாலை அணிவித்து புனுகு பூசி கறிவேப்பிலை சாதம், பாகற்காய் கூட்டு, பால் பாயாசம், படையலிட்டு அல்லது கறிவேப்பிலை மாலை, பாகற்காய் மாலை அணிவித்து ஒரு பூசணியில் மிளகு தீபம், ஒரு பாகற்காய் மிளகு தீபம் ஏற்றி ஸ்ரீ பைரவருக்கு அர்ச்சனை செய்தால் சனி பகவான் பிடியிலிருந்து விடுபடலாம்.
இது பொதுவான பரிகார பூஜை. இதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.
சனிஸ்வர பகவானுக்குனு எள் சட்டி தீபம் ஒரு போதும் ஏற்றவே கூடாது.
நெய் தீபம் ஏற்றவும். அல்லது எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணையில் பைரவருக்கு தீபமேற்றினால் சனி தோஷம் நிவர்த்தியாகும்.
ராசிக்கு சனி பகவான் பார்வை இருந்தால் சனிக்கிழமை காலையில் ஒன்பது கருப்பு மிளகைத் தூள் செய்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
அதன் பிறகே கோவிலுக்குச் சென்று சனிஸ்வரருக்கும் ஸ்ரீபைரவருக்கும் வழிபாடு செய்து வரவேண்டும்.
ராசிக்கு சனிபகவான் பார்வை இருக்கும் வரை பொதுவான பரிகாரத்தை சனிக்கிழமையில் செய்து வரவேண்டும்.
இந்த விசேஷ பரிகாரத்தை மாதம் ஒரு முறை வரும் ஜன்ம அல்லது த்ரிஜன்ம நட்சத்திரம் அன்று செய்வது சிறந்தது.
- கும்பகோணம் நகரில் 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
- சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளுக்கும் கும்பகோணத்தில் ஆலயங்கள் உள்ளன.
1. குடம் என்றால் மேற்கு என்று பொருள். மூக்கு என்றால் மூக்கு போன்று குறுகிய வடிவம் என்று அர்த்தமாகும். அதாவது குடந்தை நகரம் மேற்கே மூக்கு போன்று குறுகியும் கிழக்கில் அகன்றும் விளங்குவதால் குடமூக்கு என்ற பெயரை பெற்றதாக சொல்கிறார்கள்.
2. சங்க இலக்கியங்களில் குடந்தை என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் 1384-ம் ஆண்டு முதல் கும்பகோணம் என்று அழைக்கப்பட்டது. சாரங்கபாணி கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டு இதை உறுதிபடுத்துகிறது.
3. கும்பகோணம் என்ற சொல் வடமொழி சொல் ஆகும். வடமொழியில் குடம் என்றால் கும்பம், மூக்கு என்றால் கோணம் என்று அர்த்தமாகும். அந்த அடிப்படையில் ஏற்பட்ட கும்பகோணம் என்ற பெயர் கடந்த 600 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
4. "குடமெடுத்து ஆடிய எந்தை" என்ற பாடல் வரியே குடந்தையாக மாறியதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
5. கும்பகோணத்துக்கு பாஸ்கரசேத்திரம், கல்யாணபுரம், தேவலோகப்பட்டனம், சிவவிஷ்ணுபுரம், மந்திராதி தேவஸ்தானம், சாரங்கராஜன்பட்டினம், சேந்திரசாரம், ஒளிர்மிகு பட்டணம் உள்பட பல பெயர்கள் இருந்தன. இந்த பெயர்கள் தற்போது வழக்கில் இல்லை.
6. கும்பகோணம் நகரில் 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
7. சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளுக்கும் கும்பகோணத்தில் ஆலயங்கள் உள்ளன.
8. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை தன்னுடைய திருக்குடந்தை புராணம், மங்களாம்பிகைப் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களில் கும்பேசுவரரையும், மங்களாம்பிகையையும் போற்றி பாடியுள்ளார்.
- காசி விசுவநாதர் கோவில்
- அபிமுகேசுவரர் கோவில்
1. கோடீஸ்வர சுவாமி கோவில்
2. சக்ரபாணி சுவாமி கோவில்
3. சங்கராச்சாரியார் மடம்
4. காளஹஷ்தீஸ்வரர் சுவாமி கோவில்
5. அய்யனார் கோவில்
6. கோபாலசாமி கோவில்
7. கும்பேசுவரர் கோவில்
8. ராமசாமி கோவில்
9. சாரங்கபாணி கோவில்
10. சோமேஸ்வரன் கோவில்
11. நாகேசுவரன் கோவில்
12. காசி விசுவநாதர் கோவில்
13. அபிமுகேசுவரர் கோவில்
14. பிரம்மன் கோவில்
15. கம்பட்ட விசுவநாதர் கோவில்
- சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடும்.
- அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும்.
விநாயகர் சதுர்த்தியன்று காரிய சித்திமாலை பாடல்களை பாடி அவரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன் அமர்ந்து உள்ளம் ஒன்றி பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பங்கள் எளிதில் நிறைவேறும்.
சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடும்.
அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும்.
எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
சங்கட ஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டு முறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும்.
தினமும் 21 முறை இப்பாடலை பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.
- பராசரர் விநாயகரை வேண்ட, அவர் எலி ரூபத்தில் இருந்த கந்தருவனின் கொட்டத்தை அடக்கினார்.
- கர்வம் நீங்கப் பெற்ற கந்தர்வன் விநாயகப் பெருமானுக்கு எலி வடிவில் வாகனமாக ஆனான்.
இந்திரனது சபையில், மகாஞானியான வாமதேவரை கிரௌஞ்சகன் என்ற கந்தருவன் அவமதித்து பேசிவிட்டான்.
அதனால் வெகுண்ட அவர் அவனை எலியாக மாற சாபம் தந்தார்.
எலியாக மாறிய கந்தருவன் சீற்றம் கொண்டு முனிவர்களுக்கு பல தொல்லைகளை கொடுத்தான். பராசர முனிவரின் ஆசிரமத்தை பாழ்படுத்தி விட்டான்.
பராசரர் விநாயகரை வேண்ட, அவர் எலி ரூபத்தில் இருந்த கந்தருவனின் கொட்டத்தை அடக்கினார்.
கர்வம் நீங்கப் பெற்ற கந்தர்வன் விநாயகப் பெருமானுக்கு எலி வடிவில் வாகனமாக ஆனான்.
அன்று முதல் விநாயகர் பெருமானுக்கு "மூஷிக வாகனன்" என்று பெயர் வந்தது.
உகந்த இலைகள்
முல்லை, எருக்கு இலை, கரிசலாங்கண்ணி, மருத இலை, வில்வம், விஷ்ணு கிரந்தி, ஊமத்தை, மாதுளை, இலந்தை, தேவதாரு, வெள்ளை அருகம்புல், மருவு, வன்னி, அரசு, நாயுருவி, ஜாதி மல்லிகை, கண்டங்கத்தரி, தாழை, அரளி, அகத்தி இவற்றின் இலைகளை கொண்டும் அர்ச்சிக்கலாம்.
- பஞ்ச பூதங்களையும் தன்னுள் கொண்டவர் என்ற தத்துவத்தை விநாயகருடைய திருமேனி காட்டுகின்றது.
- நாம் விநாயகர் உருவத்தை பார்க்கும் பொழுது பஞ்ச பூதங்களாக குறிக்கும் அடையாளங்கள் காணப்படுகின்றன.
தலை என்பது மூளை, கண், காது, வாய், மூக்கு என முக்கியமான உறுப்புகளை தன்னுள் கொண்ட ஒரு கூட்டமைப்பு.
அறிவின் இருப்பிடத்தை விசாலமான நுண்ணறிவை, பேரறிவை, காக்க அமைந்ததே யானைத்தலை.
யானைத் தலையானின் தலையில் கிரீடம் சூடி அவரை வணங்கும் மக்களுக்கு ராஜ போக வாழ்வு கிடைக்கும்.-அபிராமி பட்டர்.
உருவ தத்துவம்
பஞ்ச பூதங்களையும் தன்னுள் கொண்டவர் என்ற தத்துவத்தை விநாயகருடைய திருமேனி காட்டுகின்றது.
நாம் விநாயகர் உருவத்தை பார்க்கும் பொழுது பஞ்ச பூதங்களாக குறிக்கும் அடையாளங்கள் காணப்படுகின்றன.
சதுரமான பகுதி -பூமி
வட்டமான பகுதி -நீர்
முக்கோணப்பகுதி -தீ
அரைவட்டப் பகுதி -காற்று
நடுவே வளைந்த கோடு-ஆகாயம்
- விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடியிலேயே இருப்பார்.
- இது தவிர வாதராயண மரம், வன்னி, நெல்லி, ஆல மரத்தின் கீழும் இவரை பிரதிஷ்டை செய்யலாம்.
அரசமரத்தடி நிழல் படிந்த நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது.
பெண்கள் அரச மரத்தை சுற்றி வரும் போது கிடைக்கும் காற்று பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்கக்கூடியது.
எனவே கிராமங்களில் குளத்தங்கரையில் அரச மரத்தடியில் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள்.
கிராமத்தில் இருப்பவர்கள் குளத்தில் குளித்து விட்டு அரசமரத்தை சுற்றி பிள்ளையாரை வணங்கி செல்வதால் அவர்களுக்கு கர்ப்பப்பை குறைபாடுகள் பெரும்பாலும் வருவதில்லை.
விநாயகரும் 5 விதமான மரங்களும்
விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடியிலேயே இருப்பார்.
இது தவிர வாதராயண மரம், வன்னி, நெல்லி, ஆல மரத்தின் கீழும் இவரை பிரதிஷ்டை செய்யலாம்.
இந்த ஐந்து மரங்களும் பஞ்சபூத தத்துவத்தை விளக்குகிறது.
அரச மரம் ஆகாயத்தையும், வாதராயண மரம் காற்றையும், வன்னி மரம் அக்கினியையும், நெல்லி மரம் தண்ணீரையும், ஆலமரம் மண்ணையும் குறிக்கும்.
இந்த ஐந்து மரங்களும் விநாயகர் கோவிலில் நடப்பட்டால் அது முழுமை பெற்ற கோவிலாக இருக்கும்.
- நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும்.
- அதாவது ஆண், பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். யானை அக்திணைப் பொருள்.
யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன.
நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும்.
அதாவது ஆண், பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். யானை அக்திணைப் பொருள்.
மனிதர் உயர்திணை. ஆக, அக்திணை, உயர்திணை அனைத்தும் கலந்தவர். பெரும் வயிறை கொண்டதால் பூதங்களை உள்ளடக்கியவர்.
அவரே அனைத்தும் என்பதே இந்த தத்துவம்.






