என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- ஆலயங்களுக்கு செல்லும் போது தவறாமல் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் வலியுறுத்தி சென்றுள்ளனர்.
- அந்த விளக்கு நீண்ட நேரம் எரிந்தால் இறைவன் நமக்கு அருள்கிறார் என்பார்கள்.
இறைவழிபாட்டின் போது நாம் செய்யும் ஹோமங்கள், எல்லாப் பொருட்களையும் இறைவனே அழிக்கிறான் என்பதை காட்டுகிறது. தீபாராதனை காட்டுவது அறிவு செல்வத்தை உணர்த்துகிறது.
ஆனால் சூடம் ஏற்றி தீபாராதனை செய்வதற்கு வேறொரு தத்துவம் உள்ளது.
அதாவது சூடம் கடைசி வரை எரிந்து காற்றோடு கலந்து விடும். அதுபோல ஆன்மா கடைசியில் இறைவனுடன் கலந்து விடும் என்பதை சூடம் தீபாராதனை காட்டுகிறது.
ஆலயத்தில் மாவிலை தோரணம் கட்டுவதிலும் ஒரு தத்துவம் உள்ளது. மாவிலை ஒரு போதும் அழுகாது. காய்ந்து சருசாகி உலர்ந்து மண்ணோடு மண்ணாக சேர்ந்து விடும்.
அதுபோல நம் உடலும் இடையில் கெட்டுப் போகாமல் நீண்ட காலம் காய்ந்து சருகாகி உலர வேண்டும் என்பதை மாவிலை தோரணம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
ஆலயங்களுக்கு செல்லும் போது தவறாமல் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் வலியுறுத்தி சென்றுள்ளனர்.
அந்த விளக்கு நீண்ட நேரம் எரிந்தால் இறைவன் நமக்கு அருள்கிறார் என்பார்கள்.
விளக்கு தீபம் எப்போதும் மேல் நோக்கியே எரியும்.
எனவே விளக்கு ஏற்றினால் கர்வம் மறைந்து, நம் அறிவானது மேல் நோக்கி உயர்ந்து பிரகாசிக்கும் என்பதை தீபம் காட்டுகிறது.
- தினமும் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்பவர்கள் அம்பிகையின் திருவருள் சிறப்பை எளிதில் பெறுபவர்கள் என்பதை குறிக்கிறது.
- சந்தனம் குளிர்ச்சியை தருவது. இறைவழிபாடு செய்பவர்கள் நிச்சயம் மனம் குளிர்வார்கள் என்பதை சந்தனம் காட்டுகிறது.
சமயச் சடங்குகளில் குங்குமம், சந்தனம், திருநீறும் நமக்கு ஒரு உண்மையை உணர்த்தியபடி உள்ளன.
திருநீறு பூசுவது என்பது நம் வாழ்க்கை நிலை இல்லாதது, சாம்பலாகி விடுவோம் என்பதை காட்டுகிறது.
யார் ஒருவர் நெற்றியில் 3 விரல்களால் திருநீறு பூசிக் கொள்கிறாரோ அவரிடம் இருந்து ஆணவம், கன்மம், மாயை மூன்றும் விலகி விடும் என்பது ஐதீகம்.
குங்குமம் என்பது சக்தியின் அடையாளம். பராசக்தி துணை இல்லாமல் இந்த உலகில் நாம் எதுவும் செய்ய முடியாது.
இதனால்தான் பூஜைகளில் குங்குமம் தவறாமல் இடம் பெறுகிறது.
தினமும் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்பவர்கள் அம்பிகையின் திருவருள் சிறப்பை எளிதில் பெறுபவர்கள் என்பதை குறிக்கிறது.
சந்தனம் குளிர்ச்சியை தருவது. இறைவழிபாடு செய்பவர்கள் நிச்சயம் மனம் குளிர்வார்கள் என்பதை சந்தனம் காட்டுகிறது.
இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகம், நாட்டில் நில வளமும், நீர் வளமும் பெருகும் என்பதை காட்டுகிறது.
இறைமூர்த்தங்களை அலங்காரம் செய்வது என்பது, அவன் படைக்கின்ற பொருட்களை காத்து நிலை பெறச் செய்ய வேண்டும் என்பதை காட்டுகிறது.
- ஆனால் வாழைப்பழத்தை வீசி எறிந்தால் அது முளைப்பதில்லை. இது பிறவி இல்லாததை காட்டுகிறது.
- இறைவழிபாட்டின் முக்கிய நோக்கமே இன்னொரு பிறவி வேண்டாம் என்பது தான்.
வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதியும் இருப்பதாக ஐதீகம், எனவே தான் இறைவழிபாடு வெற்றிலை இல்லாமல் முழுமை அடையாது என்பார்கள்.
வெற்றிலையை நாம் எப்போதும் வெற்றி தரும் இலையாக பார்க்க வேண்டும்.
மேலும் வெற்றிலையை உரிய முறையில் பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.
வெற்றிலையை நம் முன்னோர்கள் நமது உடலுடன் ஒப்பிட்டனர்.
இதை உணர்த்த பூஜைகளில் நம் முன்னோர்கள் வெற்றிலை வைப்பதை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்தனர்.
ஸ்தூல உடல், சூட்சம உடல் இரண்டையும் குறிக்க பூஜைகளில் 2 வெற்றிலை வைப்பது வழக்கம்.
அது போல ஸ்தூல உடல், சூட்சம உடல், காரண உடல் மூன்றையும் குறிக்க மூன்று வெற்றிலை வைத்து வழிபட்டனர்.
நோய் இல்லாமல் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே வெற்றிலை வைப்பதன் குறிக்கோளாகும்.
பாக்கு என்பது செல்வத்தை குறிக்கும். வாழைப்பழம் என்பது பிறப்பற்ற நிலையை குறிக்கும் பொதுவாக பழம் சாப்பிட்டு நாம் வீசி எறியும் கொட்டையில் இருந்து புதிய செடி முளைக்கும்.
ஆனால் வாழைப்பழத்தை வீசி எறிந்தால் அது முளைப்பதில்லை. இது பிறவி இல்லாததை காட்டுகிறது.
இறைவழிபாட்டின் முக்கிய நோக்கமே இன்னொரு பிறவி வேண்டாம் என்பது தான்.
அதை இறைவனிடம் வேண்டவே மறுபிறவி இல்லாத வாழைப்பழத்தை பூஜையில் வைக்கிறோம்.
உலகம் முழுவதும் இறை வழிபாட்டில் வாழைப்பழம் முக்கிய இடம் பிடித்து இருப்பதற்கு இதுவே காரணமாகும்.
இரண்டு வாழைப்பழம் வைத்து வழிபடுவதை நாம் செய்யும் நல்வினை, தீவினை இரண்டையும் குறிக்கும்.
ஆக தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகிய நான்கையும் வைப்பதன் தத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
வாழ்வில் ஒருவருக்கு அறிவு, ஆரோக்கியம், செல்வம், பிறப்பற்ற நிலை ஆகிய நான்கும் முக்கியம். தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் ஆகிய நான்கும் அவற்றை தருகின்றன.
- நம் அறிவை எப்போதும் ஆணவம் மறைத்துக் கொண்டிருக்கிறது.
- அந்த ஆணவம் நீங்கினால்தான் அறிவு பிரகாசிக்கும்.
முதலில் ஆலயங்களில் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்வது ஏன் என்பதை பார்க்கலாம்.
நம் அறிவை எப்போதும் ஆணவம் மறைத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆணவம் நீங்கினால்தான் அறிவு பிரகாசிக்கும்.
இதை நமக்கு உணர்த்துவது தேங்காய்.
தேங்காயைச் சுற்றியுள்ள ஓடு அறிவை சூழ்ந்துள்ள ஆணவத்தை காட்டுகிறது.
அந்த தேங்காய் ஓட்டை இரண்டாக உடைத்து விட்டால் உள்ளே தேங்காயின் வெள்ளைப் பகுதியை காணலாம்.
அது கள்ளமற்ற நம் மனதை காட்டுகிறது.
தேங்காய் உடைக்கும் போது வெளியேறும் தண்ணீர் நம் மனதில் உள்ள பந்த பாசங்கள் விலகி ஓடுவதை உணர்த்துகிறது.
ஆணவம், பந்த பாசம் விலகி விட்டால் தேங்காய் வெள்ளைப் பகுதி போல நம் மனம் பிரகாசமாகி விடும்.
அது நம் அறிவை பளீரென பிரகாசிக்க செய்யும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நம் மனதில் உள்ள ஆணவம் நீங்க வேண்டும் என்பதையே தேங்காய் உடைப்பு பிரதிபலிக்கிறது.
தேங்காய்க்கு முக்கண் உண்டு.
நாம் கடவுளை பிரார்த்தனையும், தியானமும் செய்து வழிபாட்டால் மூன்றாவது கண்ணாகிய ஞானத்தை பெறலாம் என்பதை தேங்காயின் முக்கண் காட்டுகிறது.
- ஆலய வழிபாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் நம் முன்னோர்கள் நிறைய ரகசியங்களை உள்ளடக்கி வைத்துள்ளனர்.
- அவற்றை அறிந்து கொண்டு கடவுளை வழிபாடு செய்தால் ஆத்மார்த்தமான பலன்களை நாம் அனுபவிக்க முடியும்.
ஆலய வழிபாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் நம் முன்னோர்கள் நிறைய ரகசியங்களை உள்ளடக்கி வைத்துள்ளனர்.
அவற்றை அறிந்து கொண்டு கடவுளை வழிபாடு செய்தால் ஆத்மார்த்தமான பலன்களை நாம் அனுபவிக்க முடியும்.
பொதுவாக இறைவனை நெருங்க வேண்டுமானால் உண்மையான வழிபாடு, மனதை நெகிழ செய்யும் பிரார்த்தனை, குறைகளை தீர்த்துக் கொள்ளும் பரிகாரம் ஆகிய மூன்றும் அவசியமாகும்.
யார் ஒருவர் தினமும் இறைவனை வழிபடுகிறாரோ, அதுவும் பிரதிபலன் எதிர்பாராமல் வழிபாடு செய்கிறாரோ அவருக்கு முக்தி பாதை உடனே தெரியும்.
இத்தகைய வழிபாட்டுக்கு நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ள சமயச்சடங்குகள் உதவி செய்பவையாக உள்ளன.
இறை வழிபாட்டின் போது தேங்காய், வெற்றிலைப்பாக்கு, பழம், பூ, சந்தனம், குங்குமம் வைத்து வழிபாடு செய்வோம்.
இந்த சமயச் சடங்குகளின் பின்னால் தத்துவம் உள்ளது.
- பிரம தீர்த்தம் - பித்ருக்களை கரையேற்றும்
- கங்கை தீர்த்தம் - கயிலை பதவி அளிக்கும்
1. இந்திர தீர்த்தம் -வானுலக வாழ்வு அளிக்கும்
2. அக்கினி தீர்த்தம் -பிரமஹத்தி தோஷம் நீங்கும்
3. யம தீர்த்தம் -யம பயமில்லை
4. நிருதி தீர்த்தம் -பூத, பிரேத, குற்றம் நீங்கும்
5. வருண தீர்த்தம் -ஆயுள் விருத்தி உண்டாகும்
6. வாயு தீர்த்தம் -பிணிகள் அகலும்
7. குபேர தீர்த்தம் -சகல செல்வங்களும் உண்டாகும்
8. ஈசான தீர்த்தம் -சிவனடி சேர்க்கும்
9. பிரம தீர்த்தம் -பித்ருக்களை கரையேற்றும்
10. கங்கை தீர்த்தம் -கயிலை பதவி அளிக்கும்
11. யமுனை தீர்த்தம் -பொன்விருத்தி உண்டாகும்
12. கோதாவிரி தீர்த்தம்-இஷ்ட சித்தி உண்டாகும்
13. நருமதை தீர்த்தம் -திடகாத்திரம் உண்டாகும்
14. சரசுவதி தீர்த்தம் -ஞானம் உண்டாகும்
15. காவிரி தீர்த்தம் -புருஷார்த்தங்களை நல்கும்
16. குமரி தீர்த்தம் -அசுவமேத பலன்களைக் கொடுக்கும்
17. பயோடினி தீர்த்தம் -கோலாகலம் அளிக்கும்
18. சரயு தீர்த்தம் -மனக்கவலை தீரும்
19. அறுபத்தாறு கோடி தீர்த்தம்-துன்பம் நீங்கி இன்பம் கைகூடும்.
- மகாமகம் குளத்தில் பிரம்மதேவர் தன் பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கினார்.
- அஷ்டதிக்கு பாலகர்கள் 8 பேரும் தீர்த்தம் கண்டனர்.
மகாமகம் குளத்தில் பிரம்மதேவர் தன் பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கினார்.
அஷ்டதிக்கு பாலகர்கள் 8 பேரும் தீர்த்தம் கண்டனர்.
தம் பாவங்களைப் போக்க வந்த நவக்கன்னியர் ஒன்பது பேரும் தத்தம் பேரால் ஓர் தீர்த்தம் கண்டனர்.
தேவர், கின்னார், கிம்புருடர், கந்தர்வர், சித்தர், வித்தியாதரர், சாரணர், முனிவராதியோர் கண்ட தீர்த்தமும் பல.
ஆகவே மகாமக தீர்த்தத்தில் உள்ள பிரம்ம தீர்த்தம் ஒன்று, திக்குபாலகர் தீர்த்தம் எட்டு, நவகன்னியர் தீர்த்தம் ஒன்பது, தேவராகியர் தீர்த்தம் அறுபத்தாறு கோடியுமாகும்.
இப்படி அனைத்து தீர்த்தங்களும் ஒரு சேர விளங்குவதே மகாமகத் தீர்த்தமாகும்.
- கர்ப்ப காலத்தில் சூரியன் பலமானால் தந்தையின் உருவ அமைப்பை பெறும்.
- சந்திரன் பலமானால் தாயின் உருவ அமைப்பு அக்குழந்தை பெற்று இருக்கும்.
கர்ப்ப காலத்தில் சூரியன் பலமானால் தந்தையின் உருவ அமைப்பையும், சந்திரன் பலமானால் தாயின் உருவ அமைப்பும் அக்குழந்தை பெற்று இருக்கும்.
கருவுற்ற தாய் மார்கள் சுகபிரசவம் பெற வர்மக்கலை மருத்துவத்தில் வர்மப்புள்ளிகள் உள்ளன.
இந்த வர்மப்புள்ளிகளை சரியான காலத்தில் சரியான முறைப்படி தூண்டுவதன் மூலம் 100சதவீதம் சுகபிரசவம் பெற முடியும்.
குழந்தை பாக்கியம் பெறும் தம்பதியர்களுக்கு மலச்சிக்கலோ, மனச்சிக்கலோ, தோல் நோய்கலோ இருந்தால் அது பிறக்கும் குழந்தைக்கு எதாவது ஒரு நோய் ஏற்படுத்தும்.
ஆகவே குழந்தை பாக்கியம் பெற விரும்பும் தம்பதியர்கள் இவ்வாறு நோய்கள் இல்லாமல் இருந்தால் அது பிறக்கும் குழந்தையையும் பாதிக்காமல் இருக்கும்.
- ஆறாம் மாதம் சனி உரோமங்கள் உருவாகின்றன.
- ஏழாம் மாதம் புதன் நரம்பு மண்டலங்கள் விருத்தி செய்கின்றன
மனிதனின் உடலில் பஞ்சபூதம் இயங்கும் ஆனால் ஒரு தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைக்கு நான்கு பூதம் தான் வேலை செய்யும் தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளியே வந்த பின்பு தான் 5வது பூதம் தன் வேலையை செய்யும்.
இதைத் தான் ஜோதிடத்தில் குழந்தை பிறந்த நேரம் லக்கனம் எடுத்துக் கொண்டும் அன்றயை சோச்சாரப்படியும் ஜாதகம் கணிப்பார்கள்.
குழந்தை பிறந்த பின்புதான் நவகிரகங்கள் வேலை செய்யும், என்றால் இந்த கிரகங்கள் தாயின் கருவறையில் இருந்தே வேலை செய்யும். இதைத்தான் கர்பகாலம் சென்ற இருப்பு என ஜாதகத்தில் எழுதுவார்கள்.
நவகிரகங்கள் கர்ப்பகாலத்தில் எவ்வாறு தன் வேலையை செய்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.
கர்ப்பம்
1. முதல் மாதம் சுக்கிரனின் ஆளுகை விந்து இன்னும் திரவ நிலையிலேயே இருக்கும்.
2. இரண்டாம் மாதம் அதிபர் செவ்வாய் உருவம் பெற ஆரம்பிக்கிறது.
3. மூன்றாம் மாதத்திற்கு குரு அதிபதி ஆகிறார். அங்கங்கள் உருவாகின்றன.
4. நான்காம் மாதம் சூரியன் எலும்புகள் உருவாகின்றன.
5. ஐந்தாம் மாதம் சந்திரன் தோல் தோன்றுகிறது.
6. ஆறாம் மாதம் சனி உரோமங்கள் உருவாகின்றன.
7. ஏழாம் மாதம் புதன் நரம்பு மண்டலங்கள் விருத்தி செய்கின்றன.
8. எட்டாம் மாதம் லக்ன அதிபதி. தொப்புள் கொடி மூலம் குழந்தை உணவு எடுத்துக்கொள்கிறது.
9. ஒன்பதாம் மாதம் சூரியன்: கர்ப்பத்திலுள்ள சிசு தாகம், பசி இவைகள் உணர வைக்கிறார்.
10. பத்தாம் மாதம் சந்திரன்: பிரசவத்திற்கு தயாராக்குகிறார்
இவ்வாறு நவகிரகங்கள் தன் வேலையை கர்பகாலத்தில் செய்கின்றன.
- பூமியை முன்பு போல நிலைபெறச் செய்தார். தேவர்கள் இதைக்கண்டு மகிழ்ந்தனர்.
- இங்கு வராஹமூர்த்தி பூமிதேவியை தனது இடது மடியில் அமர்த்தி வீற்றிருக்கும் கோலத்தோடு காட்சி தருகிறார்.
சக்ரபாணி திருக்கோவிலுக்கு தென்மேற்கில் அமைந்த இந்த திருக்கோவில், மற்ற கோவில்களை விட வித்தியாசமானது.
இங்கு இறைவன் பன்றி (வராகம்) முகத்தோடு காட்சியளிக்கிறார். தாயார் பூமாதேவி.
முன்னொரு சமயம் "இரண்யாட்சன்" என்ற ஒரு அசுரன் பூமியைக் கவர்ந்து பாதாளத்தில் ஒளிந்து கொண்டான்.
இதனால் பெரிதும் கலக்கமுற்ற வானவர்கள், ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலிடம் சென்று, நடந்ததை சொல்லி, பூமாதேவியை அந்த அசுரனிடமிருந்து காக்கும்படி வேண்டினார்கள்.
அந்த அசுரனால் கவர்ந்து செல்லப்பட்ட பூமியைக் கொண்டு வர திருமால் வராக அவதாரம் எடுத்தார். பாதாளம் புகுந்தார்.
அந்த இரண்யாட்சனுடன் கடுமையாக போர்புரிந்து தனது ஒரு கொம்பினால் அவனையும் அவனை சார்ந்த அசுரர் கூட்டத்தையும் அழித்தார்.
அசுரர்கள் கொல்லப்பட்ட பின்பு வராகமூர்த்தி, தனது இன்னொரு கொம்பினால் பூமியை பாதாள உலகத்திலிருந்து தாங்கி, மீட்டுக்கொண்டு மேலே வந்தார்.
பூமியை முன்பு போல நிலைபெறச் செய்தார். தேவர்கள் இதைக்கண்டு மகிழ்ந்தனர்.
இங்கு வராஹமூர்த்தி பூமிதேவியை தனது இடது மடியில் அமர்த்தி வீற்றிருக்கும் கோலத்தோடு காட்சி தருகிறார்.
திருமாலை சரண் அடைந்தால் நாம் நிச்சயம் காப்பாற்றப்படுவோம் என்பதற்கு அடையாளமாக விளங்குவதுதான் குடந்தையில் உள்ள இந்த ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில்.
- கல்யாணபுரி, சாரங்கராஜன் பட்டினம் என்று இந்த தலத்திற்கு மற்ற பெயர்களும் உண்டு.
- ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் சுற்று மதில் சுவருடன் அர்த்தமண்டபம், மகாமண்டபம் உண்டு.
இந்த கோவில் அழகான பல்வகையான மந்திர-தந்திர சிறப்புகளைக் கொண்டது. காவிரி ஆற்றுக்கு சற்று தெற்கில் இத்தலம் அமைந்துள்ளது.
கல்யாணபுரி, சாரங்கராஜன் பட்டினம் என்று இந்த தலத்திற்கு மற்ற பெயர்களும் உண்டு.
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் சுற்று மதில் சுவருடன் அர்த்தமண்டபம், மகாமண்டபம் உண்டு.
மூலவர் சாரங்கபாணி, எட்டு கைகளுடன் காட்சியளிக்கிறார். தாயார் விஜயவல்லி, பஞ்சமுக ஆஞ்சநேயர் இங்கிருக்கிறார்.
சக்ரபாணியின் எட்டு கைகளுடன் கூடிய திருக்கோலத்தை காண விரும்பிய பிரம்மா, சூரியன், அக்னி, திருமகள் ஆகியோருக்கு பெருமாள் பிரத்ட்சயம் ஆனார் என்பது மிகச்சிறப்பு.
இங்கு எழுந்தருளியிருக்கிற பெருமாள் சக்கர வடிவமாக தாமரைப் பூவில் அறுகோண யந்திரத்தில் காட்சி தருகிறார்.
முன்னொரு சமயம் குடந்தையில் தங்கி தவம் செய்த தேவர்களை முனிவர்களை, அசுரர்கள் பலவகையிலும் தொந்தரவு செய்து துன்புறுத்தினர்.
ஒருகால கட்டத்தில் தொந்தரவு, அளவுக்கு அதிகமாகப் போகவே, அவர்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்ற பெருமாள் தனது கையிலிருந்த சுதர்சன சக்கரத்தால் அசுரர்களை கொன்று அழித்தார்.
அன்று எந்த கோலத்தில் நின்று அசுரர்களை அழித்தாரோ அதே கோலத்தில் இன்ற நமக்கு கருணை கொண்டு அருள் பாலித்து வருகிறார்.
கும்பகோணத்தில் உள்ள பெரிய கடைவீதியில் அமைந்த அற்புதமான கோவில். சின்ன கோவில் இது.
இறைவன் திருநாமம் ராஜகோபாலன். தாயார் செங்கமலவல்லி. அமைதியாகவும், கருணையுடன் பொங்குவது போலவும் உருவச் சிலைகள் அமைந்துள்ளன.
யார் என்ன பாவத்தைச் செய்திருந்தாலும், அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் இந்த தலத்திற்கு வந்து எம்பெருமான் ராஜகோபாலனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் போதும்.
அவர்கள் அனைவரது பிரார்த்தனைகளும் வெகு சீக்கிரத்திலேயே நிறைவேறி விடும் என்பது இந்த ராஜகோபால சுவாமி கோவிலின் விசேஷம்.
இன்னும் சொல்லப் போனால் மன்னார்குடி ராஜகோபால பெருமாளுக்கு என்ன பெருமை உண்டோ அத்தனையும் இந்த கும்பகோணம் ராஜகோபால சுவாமிக்கும் உண்டு.






