என் மலர்
ஆன்மிகம்
- ஈஸ்வரனை சாதாரண நாளில் இடமிருந்து வலமாக மூன்று முறை வலம் வந்தால் போதுமானது.
- ஆனால் பிரதோஷ நாளில் அப்படி வலம் வருதல் கூடாது.
ஈஸ்வரனை சாதாரண நாளில் இடமிருந்து வலமாக மூன்று முறை வலம் வந்தால் போதுமானது.
ஆனால் பிரதோஷ நாளில் அப்படி வலம் வருதல் கூடாது.
பிரதோஷ நாளில் "சோமசூக்த பிரதட்சன" முறையை கையாள வேண்டும்.
சோமசூத்த பிரதட்சணம் என்றால் என்ன?
ஆலால விசமானது தேவர்களை துரத்தியது. தேவர்கள் ஈசனை வலமாக ஓடி வந்தனர்.
ஆலால விசம் இடமாக வந்து எதிர்த்தது. விசம் எதிர்ப்பதை கண்டு தேவர்கள் அப்படியே திரும்பி இடமாக வந்தனர்.
ஆலாலம் வலமாக வந்து எதிர்த்தது.
ஆக ஆலாலம் முன்னும், பின்னும் தேவர்களை எதிர்த்ததால் பிதோஷ நாளன்று ஈஸ்வரனை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் தரிசனம் செய்ய வேண்டும்.
இந்த முறையே "சோம சூக்த பிரதட்சணம்".
- கடவுளுக்காக ஒரு நிமிடம் செலவழித்து வாழ்ந்தால் என்றென்றும் இன்பங்கள் அடையலாம்.
- உங்கள் அன்றாட பூஜையை வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்களை நல்ல வழியில் கூட்டி செல்லுங்கள்.
ஆராதனை என்று சொல்லும் போது அது கற்பூர தீப ஆரத்தியையே குறிக்கிறது.
கற்பூர தீபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி காட்டி கற்பூர தீபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ளவேண்டும்.
பின்னர் சிறிது பூவினை எடுத்து நீரில் நனைத்து கற்பூர தீபத்தினை 3 முறை சுற்றி ஏதோ எனக்கு தெரிந்த முறையில் முடிந்த அளவில் பூஜை செய்தேன்.
எனது பூஜையில் இருக்கும் குற்றம் குறைகளை மன்னித்து எனது பூஜையை ஏற்றுக் கொள்ளுங்கள் என மனதார வேண்டிக்கொண்டு பாதத்தில் சமர்பிக்க வேண்டும்.
ஓரிரு நிமிடங்கள் கண்ணை மூடி நாம் வணங்கிய தெய்வத்தின் உருவத்தை மனக்கண்ணில் கொண்டு வந்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
கற்பூர தீப ஆராத்தியினை தொட்டுக் கும்பிட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளவும்.
நம் வீட்டில் பூ, சூடம் இல்லை. தீர்ந்து விட்டது என்றால் அதற்காக கவலைப்பட தேவையில்லை. நம்மிடம் எது இருக்கிறதோ அதைக் கொண்டு பூஜை செய்தாலே இறைவன் ஏற்றுக் கொள்வார்.
ஒரு விளக்கை ஏற்றி, பால், பழம், கல்கண்டு, பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை இதில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாக வைத்து தீபம் காட்டி, மணி அடித்து நம் இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள்.
உங்கள் வாழ்வில் வளம் உண்டாகும்.
கடவுளுக்காக ஒரு நிமிடம் செலவழித்து வாழ்ந்தால் என்றென்றும் இன்பங்கள் அடையலாம்.
உங்கள் அன்றாட பூஜையை வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்களை நல்ல வழியில் கூட்டி செல்லுங்கள்.
தூபம்
தூய சாம்பிராணி தூபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி வாசனை தூபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ளவேண்டும்.
தூய சாம்பிராணி கிடைக்காதவர்கள் நல்ல வாசனையுள்ள பத்தி காட்டலாம்.
தீபம்
நெய் தீபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி காட்டி தீபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ள வேண்டும்.
- உருவச் சிலை, படம் இல்லாதவர்கள் மானசீகமாக தெய்வத்தின் பெயரைக் கூறி தூய பாத்திரத்தில் சேர்க்கலாம்.
- பதினாறு பெயர் தெரியாதவர்கள் தாங்கள் எந்த பெயரை சொல்லி தெய்வத்தை வணங்குகிறார்களோ அதே பெயரை 16 தடவை கூறி பூ சேர்க்கலாம்.
அந்தந்த தெய்வத்திற்கு உகந்த பூவினை அல்லது பூக்களைக் கொண்டு அந்த தெய்வத்தின் பதினாறு திருநாமங்களை (குறைந்த பட்சம்) சொல்லி ஒரு நாமத்திற்கு குறைந்தது ஒரு பூவாக உருவச் சிலையின் பாதத்தில் அல்லது அந்த தெய்வத்தின் படத்தில் அதன் பாதத்தில் சேர்ப்பிக்க வேண்டும்.
உருவச் சிலை, படம் இல்லாதவர்கள் மானசீகமாக தெய்வத்தின் பெயரைக் கூறி தூய பாத்திரத்தில் சேர்க்கலாம்.
பதினாறு பெயர் தெரியாதவர்கள் தாங்கள் எந்த பெயரை சொல்லி தெய்வத்தை வணங்குகிறார்களோ அதே பெயரை மீண்டும் மீண்டும் 16 தடவை கூறி பூ சேர்க்கலாம்.
முடிந்தவர்கள் 108 தடவை பூ சமர்பிக்கவும்.
இறுதியில் தங்களை வணங்கி பூ சேர்க்கிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
பூ கிடைக்காதவர்கள் மந்திரம் மட்டும் சொல்லி வணங்கலாம். மந்திரம் என்றதும் ஏதோ மிகப் பெரிய விஷயமாக எண்ண வேண்டாம்.
ஓம் அதனைத் தொடர்ந்து தெய்வத்தின் பெயர் இறுதியில் போற்றி. இது எளிமையான மந்திரமாகும்.
உதாரணமாக வினாயகருக்கு என்றால் ஓம் வினாயகப் பெருமானே போற்றி போதுமானது.
முருகனுக்கு என்றால் ஓம் முருகப் பெருமானே போற்றி ஆகும்.
இரண்டொரு துளி தண்ணீரினை (பச்சை கற்பூரம், கிராம்பு பொடி கலந்த தூய பன்னீர் சிறப்பானது) நாம் பூஜை செய்யப் போகும் தெய்வத்தின் உருவ சிலையின் பாதத்தில் அல்லது அந்த தெய்வத்தின் படத்தில் அதன் பாதத்தில் சேர்ப்பிக்க வேண்டும்.
உருவச் சிலை, படம் இல்லாதவர்கள் மானசீகமாக தெய்வத்தின் பெயரைக் கூறி நீரினை தூய பாத்திரத்தில் சேர்க்கலாம்.
நைவேத்தியம்
உலர்திராட்சை அல்லது டயமண்ட் கல்கண்டு வைத்து முதலில் நீரினால் 3 முறை சுற்றி அந்த நீரை வலது புறம் விட்டு விட்டு ஒரு இரண்டு பூக்களை எடுத்து நீரில் பூவினை நனைத்து நைவேத்தியத்தை 3 முறை சுற்றி தெய்வத்திற்கு ஊட்டி விடுவது போல் பாவனை செய்தபடி நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். பூ இல்லாதவர்கள் நீரினை கொண்டு செய்யலாம்.
- ஆனால் நேரமின்மை காரணமாக பூஜைகள் செய்ய முடிவதில்லை.
- மிக குறுகிய நேரத்தில் கீழ்க்கண்ட முறையில் சிறப்பாக பூஜை செய்ய முடியும்.
தினசரி பூஜை செய்ய வேண்டும் எனப் பலருக்கு ஆசையிருக்கும்.
ஆனால் நேரமின்மை காரணமாக பூஜைகள் செய்ய முடிவதில்லை.
மிக குறுகிய நேரத்தில் கீழ்க்கண்ட முறையில் சிறப்பாக பூஜை செய்ய முடியும்.
1. அபிஷேகம்.
2. மந்திர புஸ்பம்.
3. தூபம்.
4. தீபம்.
5. நைவேத்தியம்.
6. ஆராதனை.
- சிவன்- அபிஷேகப் பிரியர்
- விஷ்ணு- அலங்காரப் பிரியர்
அருள் சக்தி,
போர் சக்தி,
கோசக்தி,
புருஷசக்தி.
அருள்சக்தி- பார்வதி
போர்ச்சக்தி- காளி
கோ சக்தி- துர்க்கை
பிருஷ சக்தி- விஷ்ணு
தெய்வங்களுக்கு பிரியமானவை:
சிவன்- அபிஷேகப் பிரியர்
விஷ்ணு- அலங்காரப் பிரியர்
சூரிய பகவான்- நமஸ்காரப் பிரியர்
விநாயகர்- நைவேத்யப் பிரியர்.
- திருப்பனந்தான்- சோழநாடு
- திருப்பனையூர்- சோழநாடு
பனை மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள் ஐந்து அவை
1. திருப்பனந்தான்- சோழநாடு
2. திருப்பனையூர்- சோழநாடு
3. திருப்பனங்காடு- தொண்டை நாடு
4. திருவோத்தூர்- தொண்டை நாடு
5. புரிவார் பனங்காட்டூர்- நடுநாடு.
தத்புருஷம் - கிழக்கு - பொன்நிறம்
அகோரம் - தெற்கு - கருமை நிறம்
சத்தியோஜாதம் - மேற்கு - வெண்ணிறம்
வாமதேவம் - வடக்கு - சிவப்புநிறம்
ஈசானம் - வடகிழக்கு - பளிங்கு நிறம்
- கணவனும் மனைவியும் இருவரும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள்.
- கிருஷ்ணர் குழந்தை வடிவில் வீட்டிற்குள் நுழைந்தார்.
குருவாயூரில் ஒரு கிராமம். அங்கு ஒரு கணவனும் மனைவியும் வசித்து வந்தனர். இருவரும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள். எப்பொழுதும் வேலை முடித்ததும் கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருவது வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
கிருஷ்ணர் மீது பக்திப் பாடல்கள் பாடி அவனை பூஜிப்பார்கள். ஒருநாள் இரவு கணவன் வெளியே சென்றிருந்த சமயம் அது. கிருஷ்ணர் குழந்தை வடிவில் அந்த வீட்டிற்குள் நுழைந்தார். மனைவிக்கு அதிர்ச்சி கலந்து ஆச்சரியம். கண்களில் ஆனந்தக் கண்ணீர். உடனே பால கிருஷ்ணனுக்கு ஒரு ஆசனமளித்து அமர வைத்தாள் அவள்.

தட்டில் சில பழங்களைக் கொண்டு வந்தாள்! பக்தி மிகுதியால் வாழைப்பழத்தை உரித்து, பழத்தைத் தட்டில் வைத்து விட்டு பழத்தின் தோலைக் கண்ணனுக்கு அளித்தாள். கண்ணன் அவளது பக்தியில் மனம் கரைந்து இருந்தான். அவனும் தோலை வாங்கி வாய்க்குள் போட்டுச் சுவைத்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் சென்றதும் கணவன் வீட்டிற்குள் நுழைந்தான். இந்தக் காட்சியைக் கண்டதும் அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. மனைவியைக் கடிந்து கொண்டான். அவளும் சுய நினைவுக்கு வந்தாள். இருவரும் குழந்தை கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.
தங்கள் வீட்டில் சாப்பிட்டுச் செல்ல வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர். உணவு தயாரானது. கண்ணனுக்குப் பரிமாறினார்கள். கண்ணனும் சாப்பிட்டான். கணவன் கண்ணனிடம், "கண்ணா சாப்பாடு சுவையாக இருக்கிறதா?'' என்று கேட்டான்.
அதற்கு கண்ணன், "உன் மனைவி நான் வந்தவுடன் தந்தாளே வாழைப்பழத்தோல்!....அதைவிட இந்த விருந்தில் சுவை குறைவாகத்தான் இருந்தது' இறைவனுக்கு என்ன தருகிறோம் என்பதை விட எப்படித் தருகிறோம் என்பதே முக்கியம்.
- ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் மிக முக்கியமாக இருப்பது லக்னமாகும்.
- சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பேப்பர் படிக்கும் பொழுதும் சரி, காலையில் தினசரி காலண்டரை காணும்போது சரி, அதில் ராசிபலன் பக்கத்தில் கீழே இன்று சந்திராஷ்டமம் பெறும் ராசி என்று போடப்பட்டிருக்கும். ஆனால் நமக்கு அதைப்பற்றி தெரியாத தால் பெரும்பாலானோர் அதை பொருட்படுத்துவது இல்லை.
ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் மிக முக்கியமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். பிறந்த ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதாகும்.

சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கிறோம்.
சந்திராஷ்டமம்=அஷ்டமம்+ சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் 'சந்திராஷ்டம' காலம் என்கிறோம்.
அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17-வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும்.
பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும்.
மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன. ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள்.

மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள், பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள்.
புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள், புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களையும் பேச மாட்டார்கள். ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.
எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும்.
17-ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன். உங்கள் நட்சத்திரத்திற்கு 17-வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரம் வரும் நாட்களில், நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும்.
- நம் பெருமானை போற்றிப் பாடலாம். எழுந்திடுவாய்!
- மாயக்காரன், மாதவன், வைகுந்தன் நாமங்கள் கூறியேனும் அவளை எழுப்பி விடுங்கள்.
திருப்பாவை
பாடல்:
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாழ் திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
தூய மணிகளால் செய்யப்பட்ட மாளிகையில் நாற்புறமும் விளக்குகள் எரிய, அகில் போன்ற புகை மணம் இனிது கமழ துயில்வதற்கேற்ற படுக்கையில் உறங்கும் பெண்ணே! மணிகள் பொருத்தப்பட்ட கதவைத் திறவாய்! மாமி ! உங்கள் மகள் ஊமையா? செவிடா? மிகுந்த சோம்பேறியா? யாராவது மந்திரம் போட்டு அவளை எப்போதும் உறங்கச் செய்து விட்டார்களா? பெரும் மாயக்காரன், மாதவன், வைகுந்தன் என்று நாமங்கள் பலவற்றைக் கூறியேனும் அவளை எழுப்பி விடுங்கள்
திருவெம்பாவை
பாடல்:
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்;
அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்;
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
காலத்தால் முற்பட்ட எல்லாப் பழமையான பொருட்களுக்கும் முன்பு தோன்றிய பழமையான பொருளே! பின்னால் வரப்போகிற புதுமைகளுக்கு எல்லாம் புதுமையாக விளங்கும் பெருமை பெற்றவனே; உன்னை இறைவனாகப் பெற்றுள்ள உன்னுடைய தொண்டர்களின் பாதங்களை வணங்குவோம்; அவ்வடியவர்களின் மனம் குளிர நடந்துகொள்வோம்; அப்படிப்பட்டவர்களையே எங்கள் கணவராகக் கொள்வோம். அவர்கள் சொல்வதையே மனமுவந்து செய்வோம். இத்தகைய இறைவன் அருளை பாடித் தொழுதால் வேறு என்ன குறை நமக்கு இருக்கப்போகிறது? அந்த நம் பெருமானை போற்றிப் பாடலாம். எழுந்திடுவாய்!






