என் மலர்
இலங்கை
- இலங்கையை நோக்கி தொடர்ந்து பயணம் மேற்கொண்ட சீன கப்பல்.
- சீன உளவு கப்பல், ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்குள் நிறுத்த இலங்கை அரசு அனுமதி அளித்தது.
கொழும்பு:
சீன ராணுவத்தின் உளவு கப்பலான 'யுவான் வாங்' கடந்த 11-ந் தேதி இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து சீன கப்பலின் வருகையை தள்ளி வைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசு கேட்டுக் கொண்டது. இதற்கு சீனா தனது அதிருப்தியை தெரிவித்தது.
இதற்கிடையே இலங்கையை நோக்கி தொடர்ந்து பயணம் மேற்கொண்ட சீன கப்பல், இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது.
ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு கிழக்காக 600 கடல் மைல் தொலைவில் சீன கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. துறைமுகத்துக்குள் நுழைய அனுமதிக்காததால் காத்திருந்தது. இது தொடர்பாக இலங்கையுடன் சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சீன உளவு கப்பல், ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்குள் நிறுத்த இலங்கை அரசு அனுமதி அளித்தது. அதன்படி அக்கப்பல், வருகிற 16-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை துறை முகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும்.
சீன கப்பல், எரிபொருள் நிரப்புதல் போன்றவற்றுக்காக வருவதாக தெரிவிக்கப் பட்டாலும் அக்கப்பலில் செயற்கை கோல் கண்காணிப்பு அறிவியல் ஆராய்ச்சி பணி உள்ளிட்ட அதிநவீன வசதிகள் உள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய கவலை தெரிவித்தது.
இந்த நிலையில் ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு வர உள்ள சீன உளவு கப்பலுக்கு இலங்கை அரசு நிபந்தனைகள் விதித்துள்ளது. சீன கப்பல், துறைமுகத்துக்கு வரும் போது சில நிபந்தனைகள் விதிக்கும்படி இலங்கை பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, இலங்கை பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் கப்பல் இருக்கும்போது அதன் தானியங்கி அடையாள அமைப்பு இயக்கப்பட்டிருக்க வேண்டும். இலங்கை கடல் பகுதிக்குள் எந்தவித அறிவியல் ஆராய்ச்சி பணிகளும் செய்யக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- சீனாவின் இந்த அடாவடி செயல் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.
- பாகிஸ்தான் நாட்டு போர்க் கப்பலும் இப்போது இலங்கை கடற்கரை பகுதிக்கு வந்துள்ளது.
கொழும்பு:
சீனாவின் உளவுகப்பலான யுவான் வாங்க் 5 என்ற கப்பலை இலங்கை அம்பந்தட்டை துறைமுகத்தில் 6 நாட்கள் நிறுத்தி ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என அந்நாடு இலங்கையிடம் அனுமதி கேட்டது.
இதற்கு முதலில் ஒப்புதல் அளித்த இலங்கை இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக பின் வாங்கியது. இதனால் உளவு கப்பலை இலங்கைக்கு வருவதை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. ஆனால் இதை பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் அந்த உளவு கப்பலை சீனா இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
யுவான் வாங்க் 5 கப்பல் நேற்று இலங்கையின் அம்பந்தட்டை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. தற்போது அந்த கப்பல் அங்கு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த கப்பல் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கை கோள்களை கண்டறியும் அதி நவீன வசதிகள் கொண்டது.
சீனாவின் இந்த அடாவடி செயல் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.
இந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பாகிஸ்தான் நாட்டு போர்க் கப்பலும் இப்போது இலங்கை கடற்கரை பகுதிக்கு வந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் கட்டமைக்கப்பட்ட பி.என்.எஸ் தைமூர் என்ற போர்க் கப்பல் மலேசியாவில் இருந்து பாகிஸ்தான் நோக்கி புறப்பட்டது. இந்த கப்பலை வங்காளதேசம் சட்டோ கிராம் என்ற துறைமுகத்தில் நிறுத்த பாகிஸ்தான் அனுமதி கேட்டது.
ஆனால் இதற்கு வங்காளதேசம் அனுமதி மறுத்து விட்டது. வங்க தேச பிரதமர் ஷேக்ஹ சீனா விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இலங்கை அப்பந்தட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்குமாறு பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது. இதற்கு இலங்கை சம்மதம் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பாகிஸ்தான் போர்க்கப்பல் அப்பந்தட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த கப்பலில் அதிநவீன ஆயுதங்கள், சென்சார் கருவிகள், லேசர் உதவியுடன் இயங்கும் ஏவுகணைகளை கொண்ட வசதிகள் உள்ளது.
பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையினை எடுத்து வருகிறது. சீனாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வரும் பாகிஸ்தான் தற்போது தனது போர்க் கப்பலை இலங்கை கடல் பகுதியில் நிறுத்தி உள்ளதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்துஇருக்கிறது.
அம்பந்தட்டை துறைமுகம் இலங்கை தலைநகர் கொழும்புக்கு மிக அருகில் உள்ளது.
சீனாவின் உளவு கப்பல் இங்கிருந்து தமிழ்நாடு உள்பட தென்இந்தியாவில் உள்ள பாதுகாப்பு தளங்களை வேவு பார்க்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. தமிழக கடற்பகுதியில் இருந்து கொழும்பு சிறிது தூரத்தில் தான் உள்ளது. இதனால் இந்த துறைமுகத்தில் இருந்து எளிதாக தமிழகத்தை கண்காணிக்கலாம் .இதன் காரணமாக தமிழக பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவின் எதிர்ப்பை மீறி, இலங்கை துறைமுகத்தில் நிற்கும் சீனா, பாகிஸ்தான் கப்பல்களால் இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கப்பல்களின் செயல்பாடுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
- மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே மீது இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடப்பட்டுள்ளது.
- தடை உத்தரவு செப்டம்பர் 5-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு :
இலங்கையை சேர்ந்த சிலோன் வர்த்தக கூட்டமைப்பு முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்னே உள்ளிட்ட சிலர் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே, மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவர்டு கப்ரால் ஆகியோர்தான் காரணம் என்றும், அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி இருந்தனர்.
கடந்த மாதம் 15-ந் தேதி, இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மேற்கண்ட 3 பேரும் நாட்டை விட்டு வெளியேற ஜூலை 28-ந் தேதிவரை தடை விதித்தது. பிறகு இத்தடை ஆகஸ்டு 2-ந் தேதிவரையும், 11-ந் தேதிவரையும் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கை சுப்ரீம் கோர்ட்டு நேற்று மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட 3 பேரும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடையை செப்டம்பர் 5-ந் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டது.
- பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார்.
- அதிபர் மாளிகைக்கு எதிரே காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம்.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள், ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளில் இருந்து விலகக்கோரி போராட்டம் நடந்தது.
இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். ஆனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்தார்.
இதையடுத்து அதிபர் மாளிகைக்கு எதிரே காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அங்கேயே கூடாரங்களை அமைத்து தங்கினர்.
இதற்கிடையே இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவி ஏற்ற மறுநாளே காலிமுகத்திடலில் இருந்த போராட்டக்காரர்கள் கூடாரங்களை போலீசார் அகற்றியதால் மோதல் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கே கேட்டுக் கொண்டார். ஆனாலும் போராட்டக்காரர்கள் அங்கேயே தொடர்ந்து இருந்தனர்.
இந்த நிலையில் கொழும்பு காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதாக இன்று போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இலங்கை அரசுக்கு எதிராக புதிய வடிவில் போராட்டத்தை தொடரப்போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
- தென் மாநிலங்களில் உள்ள 6 முக்கிய துறைமுகங்களையும் உளவு பார்க்க முடியும்.
- சீன உளவு கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக இலங்கைக்கு வருகிறது.
கொழும்பு:
சீன ராணுவத்தின் உளவு கப்பலான 'யுவான் வாங்-5' இலங்கையின் ஹம்பந் தோட்டை துறைமுகத்துக்கு இம்மாதம் 11-ந்தேதி (நாளை) வர உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. அந்த கப்பல் 17-ந்தேதி வரை இலங்கை துறைமுகத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சீன கப்பல், இலங்கைக்கு வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. செயற்கைகோள் கண்காணிப்பு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வசதிகள் கொண்ட சீன உளவு கப்பலில் இருந்து 750 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு உள்ள பகுதிகளில் உளவு பார்க்கமுடியும் என்று கூறப்படுகிறது.
அதன்படி தமிழகத்தின் கல்பாக்கம்-கூடங்குளம் உள்பட அணுமின்சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்களை உளவு பார்க்க முடியும். அதேபோல் தென் மாநிலங்களில் உள்ள 6 முக்கிய துறைமுகங்களையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக கப்பலின் வருகையை தள்ளிவைக்கு மாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக கடந்த 5-ந்தேதி சீன வெளியுறவுத்துறைக்கு இலங்கை கடிதம் அனுப்பியது. கப்பல் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை கேட்டு கொண்டதற்கு சீனா கடும் அதிருப்தியை தெரிவித்தது.
இதுதொடர்பாக சீனா கூறும்போது, 'இலங்கை அதன் சொந்த வளர்ச்சியின் நன்மைக்காக மற்ற நாடுகளுடன் உறவுகளை வளர்க்க அதற்கு உரிமை உள்ளது. சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு என்பது பொதுவான நலன்களை பூர்த்தி செய்கிறது. பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள்காட்டி இலங்கைக்கு, இந்தியா அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது' என்றது.
இதற்கிடையே சீன கப்பல் வருவதை தள்ளி வைக்குமாறு இலங்கை கூறியிருந்த நிலையில் அந்த கப்பல் ஹம்பந்தோட்டை துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு தைவான் கடல் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த சீன உளவு கப்பல் தற்போது இந்தோனேஷியா கடற்கரைக்கு மேற்கில் 26 கிலோ மீட்டர் வேகத்தில் இலங்கை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
அந்த கப்பல் இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீன உளவு கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக இலங்கைக்கு வருகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அதனை இந்தியா ஏற்கவில்லை. இதற்கிடையே சீன கப்பலின் பயணத்தை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஹம்பந்தோட்டை துறைமுகம் அமைக்க சீனா உதவியது. அந்த துறைமுகம் 2017-ம் ஆண்டு சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
- இந்த விலை உயர்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
- மின் கட்டண உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது.
கொழும்பு :
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் இலங்கையில் மின்சார கட்டணத்தை அரசு அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. யூனிட்டுக்கு 75 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு குடும்பத்தினர் இனிமேல் 198 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டும். இந்த விலை உயர்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வுக்கு இலங்கை மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.
ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விண்ணை முட்டும் விலைவாசியால் தவித்து வரும் மக்களுக்கு, தற்போது மின் கட்டண உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது.
- இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ராணுவ தலைமையகத்திற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே திடீரென்று சென்றார்.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பேரணியை நடந்த போராட்டக்காரர்கள் தயாராகியுள்ளனர். இதையடுத்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசேஷ அதிரடிப்படையினர் மற்றும் ஆயுதப்படையினரும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கலவர தடுப்பு பிரிவு தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குழுக்கள் விழிப்புடன் வைத்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பை பாதுகாப்பதற்காக பல விசேஷ போலீஸ் படையினர் வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அக்குரேகொடவில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே திடீரென்று சென்றார்.
- சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே வருகிற 11-ந்தேதி வரை தங்கி இருக்க முடியும். அதன்பின் அவர் இலங்கை திரும்புவார் என்று தகவல் வெளியானது.
- கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 2 வாரம் விசாவை நீட்டித்து வழங்க சிங்கப்பூரிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் தவித்த மக்களின் புரட்சி போராட்டத்தால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த 13-ந்தேதி மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் மறுநாள் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றார். அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
கோத்தபய ராஜபக்சே வந்திருப்பதாகவும், தனிப்பட்ட பயணமாக அவருக்கு 14 நாட்கள் தங்கி இருக்க விசா வழங்கப்படுவதாகவும் அடைக்கலம் தரவில்லை என்றும் சிங்கப்பூர் அரசு தெரிவித்தது.
கோத்தபய ராஜபக்சேவின் சிங்கப்பூர் விசா காலம் கடந்த 28-ந்தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் விசாவை மேலும் 2 வாரம் அந்நாட்டு அரசு நீடித்தது.
இதன்படி சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே வருகிற 11-ந்தேதி வரை தங்கி இருக்க முடியும். அதன்பின் அவர் இலங்கை திரும்புவார் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 2 வாரம் விசாவை நீட்டித்து வழங்க சிங்கப்பூரிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கி இருக்க அனுமதிக்குமாறு இலங்கை அரசு சிங்கப்பூர் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் மேலும் சில நாட்கள் தங்கி இருப்பார் என்று தெரிவித்துள்ளன.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்க உயர் பதவிகளில் இருந்த கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் காரணம் என்று கூறி மக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைவரும் தங்களது பதவிகளில் இருந்து விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 6 முக்கிய துறைமுகங்களையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
- சீன கப்பலின் வருகை நோக்கம் எரி பொருளை நிரப்புவது மட்டுமே.
கொழும்பு:
சீனா ராணுவத்தின் யுவான் வாங்க்-5 என்ற நவீன உளவு போர்க் கப்பல் இலங்கையின் ஹம்பந் தோட்டை துறைமுகத்துக்கு வருகிற 11-ந்தேதி வர உள்ளது என்றும் அந்த கப்பல் 17-ந்தேதி வரை இலங்கையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்திய கடல் பகுதி அருகே சீன உளவு கப்பல் வருவது பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என்று இந்தியா, இலங்கை அரசிடம் தனது எதிர்ப்பை தெரிவித்தது.
செயற்கைகோள் கண்காணிப்புபடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணைகள் வசதிகள் ஆகியவற்றை கொண்ட சீன கப்பலில் இருந்து 750 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு உள்ள பகுதிகளில் உளவு பார்க்கமுடியும் என்று கூறப்படுகிறது.
அதன்படி தமிழகத்தின் கல்பாக்கம்-கூடங்குளம் உள்பட அணுமின்சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்களை உளவு பார்க்க முடியும். அதேபோல் கேரளா, ஆந்திரா கடலோர பகுதிகளையும், தென் மாநிலங்களில் உள்ள 6 முக்கிய துறைமுகங்களையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா வின் எதிர்ப்புக்கு இலங்கை பணிந்தது. உளவு கப்பல் வருகையை ஒத்திவைக்கு மாறு சீனாவுக்கு இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது.
இதுதொடர்பாக சீன தூதரகத்திடம் இலங்கை வெளியுறவு அமைச்சகம் விடுத்த கோரிக்கையில், சீன கப்பல் திட்டமிட்டபடி வருகையை முன்னெடுத்து செல்ல வேண்டாம் எனவும் கப்பல் வருவதை நிறுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் சீன அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தும் வரை கப்பலின் வருகையை தள்ளி வைக்குமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கான கடிதத்தை கடந்த 5-ந்தேதி சீனாவுக்கு இலங்கை அனுப்பியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கைக்கான சீன தூதர் கூறும்போது, 'கப்பலுக்கு அனுமதி மறுப்பது இருதரப்பு உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்' என்றார்.
சீனாவின் உளவு கப்பல் பயணம் நிறுத்தப்படும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீன கப்பல், எரிபொருள் நிரப்புவதற்காக ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜூலை 13-ந்தேதி சீனாவில் இருந்து புறப்பட்ட அந்த கப்பல் தற்போது தைவான் அருகே பயணம் செய்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையே அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறும் போது, 'சீன கப்பலின் வருகை நோக்கம் எரி பொருளை நிரப்புவது மட்டுமே. இலங்கையில் எந்தவொரு உள் விவகாரங்களிலும், வியாபாரத்திலும் சீன கப்பல் அல்லது அதன் பணியாளர்கள் ஈடுபடமாட்டார்கள்.
இதற்கிடையே சீனாவும் எப்போதும் இலங்கைக்கு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் உண்மையான நண்பர்களாக உதவுகின்றன. இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் நல்லுறவுக்கும், நம்பிக்கைக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கையில் எதையும் செய்யாது' என்றார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசியல் நிலைத்தன்மை முக்கியமானது.
- வெளிநாட்டு கடன் மற்றும் உள்ளூர் கடன் இரண்டையும் நாம் பார்க்க வேண்டும்.
கொழும்பு :
இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசு நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தற்போதைய நெருக்கடியில் இருந்து நாடு மீள்வதற்கு ஓராண்டு ஆகும் என ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
கொழும்புவில் நடந்த 2 நாள் கருத்தரங்கு ஒன்றில் பேசிய விக்ரமசிங்கே இது தொடர்பாக கூறியதாவது:-
அடுத்த 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை இலங்கையின் பொருளாதார நெருக்கடி நீடிக்கும். அடுத்த ஆண்டு ஜூலை வரை இந்த கடினமான நாட்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.
நாட்டின் பொருளாதார மீட்சிக்கு அணுசக்தி மற்றும் தளவாடங்கள் போன்ற புதிய துறைகளை நாம் பார்க்க வேண்டும். இதில் தளவாடங்கள் துறையை நான் அதிகமாக நம்புகிறேன்.
இந்திய, வங்காளதேச, பாகிஸ்தான் பொருளாதாரங்களை பார்க்கும்போது, கொழும்பு, அம்பன்தோட்டா, திரிகோணமலையிலும் தளவாடங்கள் துறை மிகப்பெரிய பங்காற்ற முடியும்.
சொத்துகள் மீது வரி விதித்தாலும், முதலில் பொருளாதார மீட்சிக்காகவும், இரண்டாவது சமூக நிலைத்தன்மைக்காகவும் அந்த நடவடிக்கைகளை நாம் நாட வேண்டும்.
அது மட்டுமின்றி, அணுசக்தி துறையில் நுழைவதை நாடு பரிசீலிக்க வேண்டும். நம்மிடம் அதிக எரிசக்தி இருந்தால் இந்தியாவுக்கு விற்கலாம். அதே நேரத்தில் அதிக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் கிடைக்கும். இதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
சர்வதேச நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில், கடன் மறுசீரமைப்பு தொடர்பான சட்ட மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்கள் பணியை முன்னெடுத்து செல்கின்றனர்.
வெளிநாட்டு கடன் மற்றும் உள்ளூர் கடன் இரண்டையும் நாம் பார்க்க வேண்டும். இது நிச்சயமாக கடினமான காலமாக இருக்கும். நாம் இதுவரை பார்த்திராத காலகட்டமாக முதல் ஆறு மாதங்கள் இருக்கும்.
நாட்டின் 2.10 கோடி மக்கள் தொகையில், 60 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் மேலும் பலர் வேலையை இழந்து வருகின்றனர். அவர்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசியல் நிலைத்தன்மை முக்கியமானது.
எனவே சீர்திருத்தத்தின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார பரிமாணங்கள், நாம் செயல்படுத்தப் போகும் மறுசீரமைப்பு ஆகியவற்றை நாம் பார்க்க வேண்டும்.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
- இந்தியாவின் எல்லைக்கு அருகில் இந்த கப்பல் நிறுத்தப்படுவதால் இது பாதுகாப்பு அச்சுறுத்துலாக கருதப்படுகிறது.
- இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
கொழும்பு:
இலங்கையில் தனது ராணுவ ஆதிக்கத்தை நிலை நிறுத்துதற்கு வசதியாக சீனா அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு சீனா அதிக அளவில் கடன் கொடுத்து உள்ளது.
இதற்கு கைமாறாக இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாகத்தை 99 ஆண்டுகள் குத்தையாக சீனாவுக்கு அளித்துள்ளது. இது இந்திய எல்லைக்கு மிக அருகில் உள்ள துறைமுகம் ஆகும்.
இதையடுத்து இந்த துறைமுகத்தில் தனது உளவு கப்பலை நிறுத்துவதற்கான நடவடிக்கையினை சீனா எடுத்து வருகிறது.
நவீன தொழில் நுட்ப ரீதியில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் திறன் கொண்ட யுவான் வாங்-5 என்ற உளவு கப்பலை இந்த துறைமுகத்துக்கு சீனா அனுப்ப முடிவு செய்தது.
சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் இக்கப்பல் நிர்வகிக்கப்பட்டு வந்தாலும் ராணுவ ரீதியிலான பல்வேறு பயன்பாடுகளை இந்த கப்பல் கொண்டுள்ளதாகவும், நவீன தொழில் நுட்ப ரீதியில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் திறன் கொண்டதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவின் எல்லைக்கு அருகில் இந்த கப்பல் நிறுத்தப்படுவதால் இது பாதுகாப்பு அச்சுறுத்துலாக கருதப்படுகிறது.
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஏவுகணை சோதனை உள்ளிட்டவைகளை கண்காணித்து, ஏவுகணையின் செயல்பாடு குறித்து அறிந்து கொள்ளும் திறன் இந்த உளவு கப்பலுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானதும் இந்தியா உஷார் ஆனது. ஆரம்பம் முதலே இந்த விவகாரத்தை கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இது பற்றி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் பேசப்பட்டதாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் சீன உளவுக்கப்பல் இலங்கையை நோக்கி தனது பயணத்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இக்கப்பல் வருகிற 11 அல்லது 12-ந்தேதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்து சேரும் என தெரிகிறது. 17-ந்தேதி வரை இக்கப்பல் இந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
அதேசமயம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
தைவானை சுற்றி சீனா தனது படைகளை குவித்து வைத்து இருக்கும் நிலையில் தற்போது இந்தியாவை உளவு பார்க்க கப்பலை இலங்கைக்கு அனுப்பி உள்ளது மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே மீது விசாரணை நடந்து வருகிறது.
- நாட்டைவிட்டு வெளியேற தடை வருகிற 11-ந்தேதி வரை நீட்டிப்பு.
கொழும்பு :
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே மீது விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அதை தொடர்ந்து கடந்த மாதம் 15-ந்தேதி வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் ஜூலை 28-ந்தேதி வரை நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர் இந்த தடை ஆகஸ்டு 4-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடையை வருகிற 11-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






