இந்தியா வழங்கிய ரோந்து விமானத்துக்கு நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்

இந்தியாவின் சுதந்திர தினத்தன்று கடல்சார் கண்காணிப்பு விமானம் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.கடல்சார் கண்காணிப்பு விமானத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார்.
ரணில் விக்ரமசிங்கே
ரணில் விக்ரமசிங்கே
Published on

கொழும்பு:

இலங்கையில் கடல்சார் கண்காணிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக ட்ரோனியர் ரோந்து விமானத்தை இந்தியா இலங்கைக்கு வழங்கியது.

இந்நிலையில், கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமானப்படை தளத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், முன்னாள் பிரதமர் நேரு இலங்கைக்கு செய்த உதவிகளை சுட்டிக்காட்டினார். அத்துடன் ஐ.நா.சபையில் இலங்கை இடம் பெறுவதற்கு நேரு உதவி செய்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவும் இலங்கையும் ஒரு நாணயத்தில் இரு பக்க‌ங்கள். இரு நாடுகளுக்கும் தனியான பயணம் கிடையாது. விமானம் வழங்கியிருப்பதன் மூலம் இரு நாட்டுடனான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தியா ராமரை மாவீரனாக பார்க்கிறது. ஆனால் இலங்கை ராமர், ராவண‌ன் இருவரையும் மாவீர‌ர்களாக பார்க்கிறது என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com