என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியா உடனான உறவு தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது - அமெரிக்கத் தூதரகம்
    X

    இந்தியா உடனான உறவு தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது - அமெரிக்கத் தூதரகம்

    • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
    • ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்

    பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றார்.

    இன்று சீனாவில் தொடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

    உச்சி மாநாட்டிற்கு பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக மாநாட்டு அரங்கில் இருந்து ஒரே காரில் பிரதமர் மோடி மற்றும் ரஷ்யா அதிபர் புதின் புறப்பட்ட சென்றனர்.

    இந்நிலையில், அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவு தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருவதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் பதிவிட்டுள்ளது ஏற்றப்படுத்தியுள்ளது.

    சீனாவில் நடைபெற்று வரும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று ரஷ்ய அதிபர் புதினுடன் பேசி வரும் நிலையில், இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×