என் மலர்tooltip icon

    நேபாளம்

    • விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் பயணித்துள்ளனர்

    காத்மாண்டு:

    நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் என மொத்தம் 72 பேருடன் பொக்காரா விமான நிலையத்திற்கு வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. விமானம் தரையிறங்குவதற்கு விமான நிலையத்தை நெருங்கியபோது, சேதி ஆற்றின் கரையில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இதையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீப்பற்றி கரும்புகை எழுந்ததால் மீட்பு பணி கடும் சவாலாக உள்ளது. இன்று மாலை நிலவரப்படி 67 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது.

    விபத்து பற்றி கேள்விப்பட்டதும் பிரதமர் புஷ்ப கமல் தால் பிரசந்தா அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நேபாள அரசு நாளை ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கிறது.

    விபத்தில் இறந்தவர்களுக்கு இந்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா இரங்கல் தெரிவித்துள்ளார்.

    விமானத்தில் பயணித்தவர்களில் 53 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். 6 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
    • காத்மாண்டுவில் இருந்து விமானம், பொக்காரா சென்றதாக தெரிகிறது.

    காத்மாண்டு:

    நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.

    சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    காத்மாண்டுவில் இருந்து விமானம், பொக்காரா சென்றதாக தெரிகிறது. விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதாக தெரிகிறது. விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, தற்போதைக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

    • நேபாள நாட்டவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • வெளிநாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்களில் பணத்தை டெபாசிட் செய்ய அனுமதி கிடைக்காது.

    காத்மாண்டு:

    நேபாள நாட்டவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் மத்திய வங்கியான நேபாள ராஸ்ட்ரா வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நேபாள நாட்டவர்கள் வெளிநாடுகளில் நிலம், வீடு, சொத்து, கடன் பத்திரம் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்களில் பணத்தை டெபாசிட் செய்ய அனுமதி கிடைக்காது. வங்கி விதியின்கீழ் வெளிநாட்டில் யாரும் இது போன்ற பணம் செலுத்துவதில் ஈடுபடக்கூடாது. இந்த விதியை யாராவது மீறினால் நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாளத்தின் மத்திய வங்கி பணப்புழக்க நெருக்கடியை காரணம் காட்டி வாகனங்கள் மற்றும் பிற ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாக்லுங் மாவட்டத்தில் 2 முறை நிலநடுக்கம் பதிவானது.
    • பாதிப்பு தொடர்பாக விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

    காத்மண்டு:

    நேபாள நாட்டில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாக்லுங் மாவட்டத்தில் நள்ளிரவு ஒரு மணி முதல் 2 மணிக்குள் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    அதிகாரி சௌர் பகுதியில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவிலும், குங்கா பகுதியில் 2வதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவிலும் பதிவானது. இரண்டு முறை பதிவான நிலநடுக்கங்களால் உயிர் சேதமோ, வீடுகள், கட்டிடங்கள் குறித்த சேதமோ  குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

    இதனிடையே நேபாள நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியிலும் அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 3.1 என்ற அளவில் பதிவானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • நேபாளத்தின் பிரதமராக புஷ்ப கமல் தஹாலை அந்நாட்டு ஜனாதிபதி நியமித்தார்.
    • புஷ்ப கமல் தஹர் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

    காத்மண்டு:

    275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள பாராளுமன்றத்தில் 165 உறுப்பினர்கள் நேரடியாகவும், மீதமுள்ள 110 இடங்களுக்கு தேர்தல் மூலமும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். நேபாளத்தில் நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இதனால் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியுடன் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்தது. முதல் இரண்டரை ஆண்டுகள் தாம் பிரதமர் பதவி வகிப்பதாக ஒப்பந்தமும் செய்தது.

    மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசந்தா அந்நாட்டு ஜனாதிபதியைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தனக்கு ஆதரவளிக்கும் 169 எம்.பி.க்களின் பட்டியலை அளித்தார்.

    இதற்கிடையே, நேபாளத்தின் பிரதமராக புஷ்ப கமல் தஹால் பிரசந்தாவை நியமித்து ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், நேபாள நாட்டின் பிரதம மந்திரியாக புஷ்ப கமல் தஹால் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 3 துணை பிரதமர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    புஷ்ப கமல் தஹர் மூன்றாவது முறை பிரதமராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேபாளத்தின் புதிய பிரதமராக புஷ்ப கமல் தஹாலை அந்நாட்டு ஜனாதிபதி நியமனம் செய்தார்.
    • புஷ்ப கமல் தஹார் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

    காத்மண்டு:

    275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள பாராளுமன்றத்தில் 165 உறுப்பினர்கள் நேரடியாகவும், மீதமுள்ள 110 இடங்களுக்கு தேர்தல் மூலமும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

    நேபாளத்தில் நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இதையடுத்து முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியுடன் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்தது. முதல் இரண்டரை ஆண்டுகள் தாம் பிரதமர் பதவி வகிப்பதாக ஒப்பந்தமும் செய்தது.

    இதற்கிடையே, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசந்தா இன்று அந்நாட்டு ஜனாதிபதியைச் சந்தித்து பிரதமருக்கான உரிமை கோரினார். அப்போது தனக்கு ஆதரவளிக்கும் 169 எம்.பி.க்களின் பட்டியலையும் அளித்தார்.

    இந்நிலையில், நேபாளத்தின் புதிய பிரதமராக புஷ்ப கமல் தஹால் பிரசந்தாவை நியமனம் செய்து ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    புஷ்ப கமல் தஹர் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    • சோப்ராஜின் கொலை பட்டியலில் சிக்கியவர்கள் சுமார் 30 இருக்கும் என கூறப்படுகிறது.
    • இந்தியாவிலும் 21 ஆண்டுகள் சிறைக்கம்பிகளை எண்ணினான்.

    காத்மாண்டு :

    இந்திய தந்தைக்கும், வியட்நாம் தாய்க்கும் 1944-ம் ஆண்டு பிறந்தவன் சார்லஸ் சோப்ராஜ் (வயது 78). சட்டப்படி பிரான்ஸ் குடியுரிமை பெற்றிருந்த இவன், இளம் வயதில் இருந்தே குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறை செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தான்.

    1970-களில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தொடர் கொலைகளை அரங்கேற்றி உலகையே அதிர்ச்சிக்குள் வைத்திருந்தான். இளம்பெண்களை குறிவைத்து கொலை செய்து வந்த சோப்ராஜின் கொலை பட்டியலில் சிக்கியவர்கள் சுமார் 30 இருக்கும் என கூறப்படுகிறது.

    இஸ்ரேல் நாட்டவரை கொலை செய்தது மற்றும் பிரான்சை சேர்ந்தவருக்கு விஷம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இந்தியாவிலும் 21 ஆண்டுகள் சிறைக்கம்பிகளை எண்ணினான்.

    நேபாளத்தில் கடந்த 1975-ம் ஆண்டு அமெரிக்க பெண் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சோப்ராஜ், கடந்த 2003-ம் ஆண்டு அந்த நாட்டு போலீசில் சிக்கிக்கொண்டான்.

    இதில் ஆயுள் தண்டனை பெற்று காத்மாண்டு மத்திய சிறையில் சோப்ராஜ் அடைக்கப்பட்டிருந்தான்.

    இந்த வழக்கில் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தண்டனைக்காலம் முடியும் நிலையில், சோப்ராஜின் உடல்நிலை, முதுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சமீபத்தில் நேபாள சுப்ரீம் கோர்ட்டு அவனை விடுதலை செய்தது. அத்துடன் 15 நாட்களுக்குள் பிரான்சுக்கு நாடு கடத்தவும் உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று அவன் காத்மாண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டான். அத்துடன் அவனை உடனடியாக பிரான்சுக்கு நாடு கடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் முதலில் தோஹாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து பிரான்ஸ் அனுப்பி வைக்கப்பட்டான்.

    இந்த தகவலை வெளியிட்ட நேபாளம் உள்துறை அமைச்சக செயலாளர் பனிந்திரா மணி பொகாரெல், சார்லஸ் சோப்ரா அடுத்த 10 ஆண்டுகளுக்கு நேபாளத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

    பல நாடுகளை கதிகலங்க வைத்த சோப்ராஜ் விடுதலை செய்யப்பட்டிருப்பது சர்வதேச அரங்கில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சார்லஸ் சோப்ராஜின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
    • சிறையில் வைத்து தன்னைவிட 44 வயது இளைய பெண்ணான நிஹிதா பிஸ்வாஸை திருமணம் செய்தார்.

    காத்மாண்டு:

    கொலை, கொள்ளை என உலகை உலுக்கிய சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ், இந்தியாவில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட பின், நேபாளத்தில் உள்ள கொலை வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    அமெரிக்க சுற்றுலாப் பயணி கோனி ஜோ ப்ரோன்சிச்சை கொலை செய்த வழக்கில் நேபாள நீதிமன்றம் 1975-ல் சோப்ராஜுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. 10 ஆண்டுக்குப் பிறகு ப்ரோன்சிச்சின் கனடா நண்பரை கொன்ற வழக்கிலும் சோப்ராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் தண்டனை பெற்ற சோப்ராஜ், 2008-ம் ஆண்டு சிறையில் வைத்து தன்னைவிட 44 வயது இளைய பெண்ணான நிஹிதா பிஸ்வாஸை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறையில் இருக்கும்போதே அவருக்கு இருதய பிரச்சினை ஏற்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவருக்கு 78 வயதாகிறது.

    இதற்கிடையே, வட அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவரை கொலை செய்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சார்லஸ் சோப்ராஜை விடுதலை செய்யும்படி நேபாள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

    இந்நிலையில், நேபாள சிறையில் இருந்து சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் விடுதலை செய்யப்பட்டார்.

    • சார்லஸ் சோப்ராஜின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் இருந்து விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளார்.
    • சிறையில் வைத்து தன்னைவிட 44 வயது இளைய பெண்ணான நிஹிதா பிஸ்வாஸை சோப்ராஜ் திருமணம் செய்தார்.

    காத்மாண்டு:

    கொலை, கொளளை என உலகை உலுக்கிய சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ், தனது 52வது வயதில் இந்தியாவில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், நேபாளத்தில் உள்ள கொலை வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 2004ம் ஆண்டு நேபாள அரசு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கியது. சிறையில் இருக்கும்போதே அவருக்கு இருதய பிரச்சினை ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவருக்கு 78 வயதாகிறது.

    இந்நிலையில், வட அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவரை கொலை செய்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சார்லஸ் சோப்ராஜை விடுதலை செய்யும்படி நேபாள உச்ச நீதிமன்றம்  இன்று உத்தரவிட்டுள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் இருந்து விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளார்.

    தொடர்ந்து அவரை சிறையில் வைத்திருப்பது கைதிகளுக்கான மனித உரிமைக்கு பொருந்தாத செயல் என்று நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஏஎப்பி செய்தி வெளியட்டுள்ளது. சோப்ராஜை சிறையில் அடைக்க, அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றால், இன்றைக்குள் அவரை விடுதலை செய்து, 15 நாட்களுக்குள் நாடு திரும்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    1975இல் அமெரிக்க சுற்றுலாப் பயணி கோனி ஜோ ப்ரோன்சிச்சைக் கொலை செய்த வழக்கில் நேபாள நீதிமன்றம் சோப்ராஜுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. 10 ஆண்டுக்குப் பிறகு ப்ரோன்சிச்சின் கனடா நண்பரை கொன்ற வழக்கிலும் சோப்ராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் தண்டனை பெற்ற சோப்ராஜ்,

    2008 ஆம் ஆண்டு சிறையில் வைத்து தன்னைவிட 44 வயது இளைய பெண்ணான நிஹிதா பிஸ்வாஸை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆளுங்கட்சியான நேபாள காங்கிரஸ் 55 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
    • சிபிஎன்-யுஎம்எல் கடசி 44 இடங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது.

    காத்மாண்டு:

    நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 20ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாராளுமன்றத்துக்கான 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

    நேரடியாக தேர்வு செய்யப்படும் 165 தொகுதிகளில் இதுவரை 162 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆளுங்கட்சியான நேபாள காங்கிரஸ் 55 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. சிபிஎன்-யுஎம்எல் கடசி 44 இடங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது.

    ஆட்சியமைக்க 138 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் நேபாள காஙகிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    இதுபற்றி நேபாள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான பிரகாஷ் மான் சிங் (வயது 66) கூறுகையில், 'ஆட்சி அமைப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அனைத்து தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி, விகிதாச்சார வாக்கு முறை அடிப்படையில் ஒதுக்கப்படும் இடங்கள் தீர்மானிக்கப்பட்ட பிறகு, பாராளுமன்ற கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்போம்' என்றார்.

    நேபாள காங்கிரஸ் கட்சியில் பிரதமர் பதவிக்கான போட்டியில் 6 தலைவர்கள் உள்ளனர். அவர்களில் பிரகாஷ் மான் சிங்கும் ஒருவர். 

    • மொத்தமுள்ள 550 சட்டசபை உறுப்பினர்களில் 330 பேர் நேரடியாகவும் 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.
    • தனது சொந்த தொகுதியான தன்குடாவில் தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

    அண்டை நாடான நேபாளத்தில் நீண்டகாலமாகவே அரசியல் ஸ்திரமற்ற சூழல் நிலவுகிறது. அங்கு கடந்த 2006ம் ஆண்டில் இருந்து எந்தவொரு பிரதமரும் முழு பதவிக்காலம் பணியாற்றவில்லை.

    இந்த நிலையில் 275 உறுப்பினர்களை கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. அதோடு 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது.

    நாடாளுமன்ற தேர்தலில் 60 சதவீத ஓட்டுகள் பதிவானதாக நேபாள தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. நாடாளுமன்றத்துக்கான 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

    அதேபோல் மொத்தமுள்ள 550 சட்டசபை உறுப்பினர்களில் 330 பேர் நேரடியாகவும் 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 8-ந் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேர் பகதூர் தூபாவின் ஆளும் நேபாள காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக மற்றும் இடதுசாரி கூட்டணிக்கும், முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்டு கட்சி (யூ.எம்.எல்) தலைமையிலான இடதுசாரி மற்றும் இந்து சார்பு கூட்டணிக்கும் இடையே பலப்பரீட்சை நிலவுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேர் பகதூர் தூபா வெற்றி பெற்றார்.

    தனது சொந்த தொகுதியான தன்குடாவில் தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். ஷேர் பகதூர் தூபா 25 ஆயிரத்து 534 வாக்குகளை பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட சாகர்தாகல் 13 ஆயிரத்து 42 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

    • பாராளுமன்ற தேர்தலில் 61 சதவீத ஓட்டுகள் பதிவானதாக நேபாள தேர்தல் கமிஷன் தெரிவித்தது.
    • தேர்தல் இறுதி முடிவுகள் ஒரு வாரத்திற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காத்மாண்டு:

    நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

    இந்த தேர்தலில் 1.79 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 22 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாராளுன்றம் தேர்தலில் போட்டியிடும் 2,412 வேட்பாளர்களில் 867 பேர் சுயேட்சைகள்.

    பாராளுமன்றத்துக்கான 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். இதேபோல் மொத்தமுள்ள 550 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 330 பேர் நேரடியாகவும் 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

    காலை 7:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டனர். மாலை 5:00 மணிக்கு ஓட்டுப் பதிவு நிறைவடைந்தது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் 60 சதவீத ஓட்டுகள் பதிவானதாக நேபாள தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    ஆளும் நேபாள காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தொங்கு பாராளுமன்றம் அமையலாம் என்றும், போதுமான அரசியல் ஸ்திரத்தன்மையை வழங்க வாய்ப்பில்லாத அரசு அமையும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர். தேர்தல் இறுதி முடிவுகள் ஒரு வாரத்திற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×