என் மலர்tooltip icon

    இத்தாலி

    • விளம்பரங்கள் மூலம் ஈட்டிய வருவாய் தொடர்பாக வரி ஏய்ப்பு செய்ததாக இத்தாலி வழக்கு.
    • விசாரணையை கைவிட இத்தாலிக்கு பணம் செலுத்த கூகுள் ஒப்புக் கொண்டுள்ளது.

    கூகுள் உலகளவில் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக விளங்கி வருகிறது. யூடியூப் உள்ளிட்டவைகள் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறது.

    கூகுள் மூலம் சேவைகள் வழங்கினாலும் விளம்பரங்கள் மூலமாக அதிக அளவில் வருமானம் ஈட்டி வருகிறது. இந்த வருமானத்திற்கு கூகுள் முறையாக வரி கட்டுவதில்லை. வரி ஏய்ப்பு செய்வதாக பல்வேறு நாடுகள் குற்றம் சுமத்தியதுடன் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    அந்த வகையில் பிரான்ஸ் வழக்கு தொடர்ந்திருந்தது. அப்போது ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக பணம் செலுத்தி வரி ஏய்ப்பு விசாரணையை முடித்துக்கொண்டது.

    பிரான்சை தொடர்ந்து இத்தாலியும் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இத்தாலி அரசுடன் கூகுள் பேச்சுவார்த்தை நடத்தியது.

    இறுதியாக 2015 முதல் 2019 வரை விளம்பரம் உள்ளிட்டவைகள் மூலம் வருவாய் ஈட்டியதற்கான வரி ஏய்ப்பு விசாரணையை கைவிட கூகுள் நிறுவனம் 340 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 2953 கோடி) செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் விசாரணையை கைவிட முடிவு செய்துள்ளோம் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.

    ஆனால் கூகுள் நிறுவனம் இது தொடர்பாக உடனடியாக பதில் ஏதும் அளிக்கவில்லை.

    • சுவாசக் குழாயில் கலவையான தொற்று ஏற்பட்டு இருக்கிறது.
    • தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பு.

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு (வயது 88) உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 14-ந்தேதி இத்தாலியின் ரோமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் தொற்றுப்பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் போப் பிரான்சிக்கு சுவாச தொற்று அதிகரித்து காணப்படுவதால் அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வாடிகன் கூறும்போது, "போப் பிரான்சிசுக்கு சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் சுவாசக் குழாயில் பாலிமைக்ரோபியல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு சுவாசக் குழாயில் கலவையான தொற்று ஏற்பட்டு இருக்கிறது என உறுதியாகி உள்ளது.

    இதையடுத்து சுவாசக்குழாய் தொற்றுக்கான சிகிச்சையை டாக்டர்கள் மாற்றியுள்ளனர், தேவைப்படும் வரை போப் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் இருப்பார். அவருக்கு காய்ச்சல் இல்லை. உடல்நிலை சீராக உள்ளது. அவர் சில வேலைகளைச் செய்தார். பத்திரிகைகளைப் படித்தார்" என்று தெரிவித்துள்ளது.

    • மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.
    • ரோமில் உள்ள மருத்துவமனையில் போப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    ரோம்:

    கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த வாரம் வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார்.

    ஆனாலும் தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

    இந்நிலையில், இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    ஏற்கனவே, இதே மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சைக்காக கடந்த 2021, ஜூலை மாதத்தில் போப் பிரான்சிஸ் 10 நாட்கள் அனுமதிக்கப்பட்டார். 2023, ஜூலையிலும் அதே மருத்துவமனையில் அவருக்கு குடலிறக்கத்தை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சையும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அதிபர் டிரம்ப் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • அதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    ரோம்:

    மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் புலம்பெயர்ந்து அமெரிக்காவிற்குள் செல்கின்றனர். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அதிபர் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    இந்தியா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அமெரிக்க அரசு அனுப்பி வருகிறது.

    இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, போப் பிரான்சிஸ் அமெரிக்க பாதிரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த நடவடிக்கை புலம்பெயர்ந்தோரின் கண்ணியத்தை பாதிக்கிறது. இது மோசமாக முடிவடையும் என தெரிவித்துள்ளார்.

    போர், வறுமை மற்றும் காலநிலை பேரழிவுகளில் இருந்து தப்பிச் செல்பவர்களை பிற நாடுகள் வரவேற்று, பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் போப் ஆண்டவர், அரசாங்கங்கள் தங்கள் திறன் வரம்பிற்கு ஏற்றவாறு இதனை செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    • இத்தாலி பத்திரிகையாளரான சிசிலியா சாலா ஈரான் நாட்டிற்குச் சென்றார்.
    • அங்கு அவரை கடந்த மாதம் 19-ம் தேதி ஈரான் அரசு கைது செய்தது.

    ரோம்:

    இத்தாலியைச் சேர்ந்தவர் சிசிலியா சாலா ஈரான் நாட்டிற்குச் சென்றார். பத்திரிகையாளர் விசா மூலம் ஈரான் சென்ற அவரை 3 நாளுக்குப் பிறகு இஸ்லாமிய சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் ஈரான் அரசு கடந்த மாதம் 19-ம் தேதி அவரை கைது செய்தது.

    கிட்டத்தட்ட 3 வாரங்கள் அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் இத்தாலி அரசு ஈடுபட்டது.

    இந்நிலையில், இத்தாலி பத்திரிகையாளரான சிசிலியா சாலா ஈரான் சிறையில் இருந்து விடுதலையானார்.

    நேற்று பிற்பகலில் விமானம் மூலம் ரோமின் சியாம்பினோ விமான நிலையத்தில் தரையிறங்கினார். அங்கு அவரை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்பட குடும்ப உறுப்பினர்கள் பலர் வரவேற்றனர்.

    இத்தாலி அரசின் ராஜதந்திர முயற்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானாவின் சூர்யாபேட்டையைச் சேர்ந்தவர் கிராந்தி குமார் பணிகேரா டிரில்மேன்.
    • இத்தாலியின் லோ ஷோ டீ ரெக்கார்ட் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமீபத்தில் இவர் பங்கேற்றார்.

    சுழலும் 57 மின்விசிறிகளை நாக்கால் தடுத்து நிறுத்தி இந்தியாவை சேர்ந்த கிராந்தி ட்ரில்மேன் என்பவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    தெலுங்கானாவின் சூர்யாபேட்டையைச் சேர்ந்தவர் கிராந்தி குமார் பணிகேரா- டிரில்மேன். இத்தாலியின் லோ ஷோ டீ ரெக்கார்ட்[ Lo Show Dei Record] என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமீபத்தில் இவர் பங்கேற்றார்.

    அதில் 57 ஓடும் மின் விசிறிகளை 1 நிமிடத்துக்குள் தனது நாக்கால் நிறுத்தியுள்ளார். தனது நாக்கை பயனப்டுத்தி அவர் மின் விசிறிகளின் சுழலும் பிளேடுகளை நிறுத்தும் வீடியோவை கின்னஸ் உலக சாதனைகள் (GWR) அமைப்பு அதன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    அவர் இந்த உலக சாதனையை படைக்கும்போது அந்த ஷோவில் இருந்த ஜட்ஜ்கள் உட்பட அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். எப்போதும் வித்தியாசமான செயல்கள் மூலம் மக்களை வியப்பில் ஆழ்த்தும் பணிகேரவின் இந்த சாதனை அவரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளது. இதை பயிற்சி இல்லாதவர்கள் முயற்சிப்பது ஆபத்தில் முடியும். 

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெற்றது.
    • இதில் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் கோப்பை வென்றார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி இன்றுடன் முடிவடைகிறது.

    இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.

    இதில் சின்னர் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • இதில் நம்பர் 6 வீரரான காஸ்பர் ரூட் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், 6-வது நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.

    இதில் சின்னர் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதுகிறார்.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • இதில் நம்பர் 2 வீரரான ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி நாளையுடன் முடிவடைகிறது.

    இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நம்பர் 2 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.

    இதில் பிரிட்ஸ் 6-3, 3-6, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரிட்ஸ், சின்னர் அல்லது ரூட் இவர்களில் ஒருவருடன் மோத உள்ளார்.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • இதில் நம்பர் 6 வீரரான காஸ்பர் ரூட் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது லீக் போட்டியில் 6-வது நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட், 8வது நிலை வீரரான ரஷியாவின் ஆண்ட்ரூ ரூப்லெவ் உடன் மோதினார்.

    இதில் காஸ்பர் ரூட் 6-4, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • இதில் நம்பர் 2 வீரரான ஸ்வரேவ் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி நாளை மறுதினம் வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொனடனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது லீக் போட்டியில் நம்பர் 2 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நம்பர் 3 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் ஸ்வரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதுகிறார்.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • இதில் நம்பர் 1 வீரரான சின்னர் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது லீக் போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் சின்னர், நம்பர் 4 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உடன் மோதினார்.

    இதில் சின்னர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் சின்னர் அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    ×