என் மலர்tooltip icon

    சீனா

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் தோல்வி அடைந்தார்.

    ஷென்ஜென்:

    பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத், தாய்லாந்து வீராங்கனை சுபநிதா உடன் மோதினார்

    இந்தப் போட்டியில் மாளவிகா 9-21, 9-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    ஷென்ஜென்:

    பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசிய வீரர் லீ ஜி ஜியா உடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் லக்ஷயா சென் 21-14, 13-21, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் போட்டியில் லீயிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்தார்.

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    ஷென்ஜென்:

    பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்கியது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சிங்கப்பூரின் ஜியா மின் உடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் ஜியா மின் 16-21, 21-17, 21-23 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். தோல்வி அடைந்த பி.வி.சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • 2013-ம் ஆண்டு, காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது.
    • மாசுக்கு எதிரான போரில் சீனா ஒரே நாளில் வெற்றியைப் பெறவில்லை.

    சீனா கடந்த சில ஆண்டுகளாக மாசுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளாலும் மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாலும் பெருமளவில் மாசுபாட்டைச் சமாளித்து வருகிறது. CREA அறிக்கையின்படி, சீனாவின் காற்றின் தரம் 2024-ம் ஆண்டு முதல் பாதியில் மேம்பட்டது. ஏனெனில் 2023 உடன் ஒப்பிடும்போது நுண் துகள்கள் (PM2.5) 2.9 சதவீதம் குறைந்துள்ளது.

    கரடுமுரடான துகள்கள் (PM10), நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2), மற்றும் சல்பர் டை ஆக்சைடு (SO2) ஆகியவற்றின் அளவும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மிகப்பெரிய எண்ணெய் நுகர்வு காரணமாக சீனா கடுமையான மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக இருந்தது. ஏறக்குறைய ஆண்டுகளுக்கு முன்பு 2013-ம் ஆண்டு, காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது. PM2.5 அளவு ஒரு கன மீட்டர் காற்றில் 101.56 மைக்ரோகிராம்களை எட்டியது.

    அதே அளவுரு 10 ஆண்டுகளில் கடுமையாக மேம்பட்டது. 2023 ஆம் ஆண்டில், சீனாவில் PM2.5 காற்று மாசு அளவு ஒரு கன மீட்டர் காற்றில் 38.98 மைக்ரோகிராம் இருந்தது.

    மாசுக்கு எதிரான போரில் சீனா ஒரே நாளில் வெற்றியைப் பெறவில்லை. இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு விரிவான மூலோபாயத் திட்டங்கள் மற்றும் திட்டங்களை அது செயல்படுத்த வேண்டியிருந்தது.

    ICLEI-உள்ளாட்சிகள் நிலைத்தன்மைக்கான அறிக்கையின்படி, முக்கிய மாற்றத்தின் முக்கிய காரணிகளில் ஒன்று நகர்ப்புற ரெயில் விரிவாக்கம். நாட்டின் காரை மையமாகக் கொண்ட போக்குவரத்து அமைப்பு நிலையான இயக்கம் மாதிரியாக மாற்றப்பட்டது.

    ஒரு அதிநவீன ஒருங்கிணைந்த காற்றின் தர கண்காணிப்பு நெட்வொர்க் 2016 இல் நிறுவப்பட்டது, இது எச்டி செயற்கைக்கோள், ரிமோட் சென்சிங் மற்றும் லேசர் ரேடார் போன்ற உயர்தர தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வழிவகுத்தது என்று அறிக்கை கூறுகிறது. இது மாசுபாட்டை சிறப்பாக கண்காணிக்க சீனாவுக்கு உதவியது.

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

    ஷென்ஜென்:

    பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.

    நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி, சீன தைபே ஜோடியுடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 12-21, 21-19, 21-18 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    ஷென்ஜென்:

    பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்கியது.

    இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, தாய்லாந்து வீராங்கனை பூசானன் உடன் மோதினார்.

    இதில் பிவி சிந்து 21-17, 21-19 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், டென்மார்க் பேட்மிண்டன் வீராங்கனையுடன் மோதினார். இதில் பன்சோத் 20-22, 23-21, 21-16 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • 2008-ம் ஆண்டு தொழிலதிபரான ஜவோவை சந்தித்து 2010-ல் திருமணம் செய்து கொண்டார்.
    • வினோத ஆசை தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வலைத்தள வாசிகளிடையே பேசுப்பொருளாகி உள்ளது.

    சீனாவை சேர்ந்த தம்பதிக்கு 9 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் மேலும் அவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். சீனாவை சேர்ந்தவர் தியான். 2008-ம் ஆண்டு தொழிலதிபரான ஜவோவை சந்தித்து 2010-ல் திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்பட தற்போது வரை 9 குழந்தைகள் பிறந்துள்ளது. உடல் பலவீனம் காரணமாக குழந்தை பெறுவதை தள்ளி வைத்துள்ளநிலையில் அந்த தம்பதி மேலும் 4 குழந்தைகளை பெற்றெடுக்க விரும்புகிறார்கள்.

    இதுகுறித்து தியான் கூறுகையில், என் குழந்தைகளில் 2 பேர் ஒரே ராசிக்காரர்கள், மீதமுள்ள 7 பேர் வெவ்வேறு ராசிகளை கொண்டவர்கள். எனவே சீன சாஸ்திரத்தின்படி 12 ராசிகளை குறிக்கும் வகையில் மேலும் 4 குழந்தைகளை பெற்றுக்கொள்வேன் என்றார். மக்கள்தொகை அதிகம் கொண்ட சீனாவில் தம்பதியின் இந்த வினோத ஆசை தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வலைத்தள வாசிகளிடையே பேசுப்பொருளாகி உள்ளது.

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரஜாவத் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

    ஷென்ஜென்:

    பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்கியது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், இந்தோனேசியாவின் வார்டயோ உடன் மோதினார்.

    இதில் ரஜாவத் முதல் செட்டை 24-22 என கைப்பற்றினார். இதில் சுதாரித்த வார்டோய் அடுத்த செட்களை 21-13, 21-18 என வென்றார். 3வது சுற்றில் முன்னிலை பெற்ற ரஜாவத் கடைசியில் தோல்வி அடைந்தார்.

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அனுபமா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    ஷென்ஜென்:

    பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்கியது.

    இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, அமெரிக்காவின் பெய்வென் ஜெங் உடன் மோதினார்.

    இதில் அனுபமா 21-17, 8-21, 22-20 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    ஷென்ஜென்:

    பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்கியது.

    இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் ரெட்டி-சிக்கி ரெட்டி ஜோடி, அமெரிக்காவின் பிரெஸ்லி-ஜென்னி ஜோடியுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 23-21, 17-21, 21-17 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

    • வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சீனாவின் ஹுனான் மாகாணம் சாங்டே நகரில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு இன்று காலை குழந்தைகள் வந்து கொண்டிருந்தனர். அப்போது வாகனம் ஒன்று பள்ளி வாசலில் மோதியது. இதில் ஏராளமான குழந்தைகள் காயம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் பள்ளியிலும், ஆஸ்பத்திரியிலும் குவிந்தனர்.

    வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வாகனத்தை ஓட்டி வந்தது யார் என்பது குறித்தும் போலீசார் தெரிவிக்கவில்லை.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது.
    • இந்த தாக்குதலில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    பீஜிங்:

    சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் வுக்ஸி நகரில் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்கும் 21 வயது வாலிபர் கண்ணில் பட்டவர்கள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்.

    இந்த கோர தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்றும், மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

    தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த 12-ம் தேதி சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த மக்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×