என் மலர்
நீங்கள் தேடியது "Anupama Upadhyaya"
- சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.
- இதில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.
இந்திய வீரர்களில் எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென், வீராங்கனைகளில் பி.வி.சிந்து, அனுபமா உபாத்யாயா, உன்னதி ஹூடா ஆகியோர் ஒற்றையர் பிரிவுகளில் களம் கான்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, தைவானின் லீ சியாங் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 23-21 என அனுபமா உபாத்யாயா கைப்பற்றினார். இதில் சுதாரித்து ஆடிய தைவான் வீராங்கனை அடுத்த இரு செட்களை 21-11, 21-10 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதனால் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா முதல் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, சக நாட்டு வீராங்கனை ராஷ்மிகா ராம்ராஜ் உடன் மோதினார்.
முதல் செட்டை 21-15 என அனுபமா வென்றார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை 21-18 என ராஷ்மிகா கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 21-18 என அனுபமா உபாத்யாயா வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 2வது சுற்றில் அனுபமா, சீனா வீராங்கனை வாங் ஜியீயை எதிர்கொள்கிறார்.
- சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அனுபமா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
ஷென்ஜென்:
பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்கியது.
இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, அமெரிக்காவின் பெய்வென் ஜெங் உடன் மோதினார்.
இதில் அனுபமா 21-17, 8-21, 22-20 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.






