என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை அனுபமா முதல் சுற்றில் வெற்றி
    X

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை அனுபமா முதல் சுற்றில் வெற்றி

    • ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, சக நாட்டு வீராங்கனை ராஷ்மிகா ராம்ராஜ் உடன் மோதினார்.

    முதல் செட்டை 21-15 என அனுபமா வென்றார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை 21-18 என ராஷ்மிகா கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 21-18 என அனுபமா உபாத்யாயா வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் 2வது சுற்றில் அனுபமா, சீனா வீராங்கனை வாங் ஜியீயை எதிர்கொள்கிறார்.

    Next Story
    ×