என் மலர்
நீங்கள் தேடியது "ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்"
- ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீரர் லக்ஷயா சென் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கொடாய் நரோகா உடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய நரோகா 21-19, 21-11 என்ற நேர் செட் கணக்கில் லக்ஷயா சென்னை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, சீனாவின் வாங் சாங்-லியாங் ஜோடியிடம் 22-24, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது சுற்றில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, சீனா வீராங்கனை வாங் ஜியீயிடம் 21-13, 11-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
- ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, சக நாட்டு வீராங்கனை ராஷ்மிகா ராம்ராஜ் உடன் மோதினார்.
முதல் செட்டை 21-15 என அனுபமா வென்றார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை 21-18 என ராஷ்மிகா கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 21-18 என அனுபமா உபாத்யாயா வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 2வது சுற்றில் அனுபமா, சீனா வீராங்கனை வாங் ஜியீயை எதிர்கொள்கிறார்.
- ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
- இதன் முதல் சுற்றில் இந்திய ஆண்கள் ஜோடி அபார வெற்றி பெற்றது.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தென் கொரியாவின் காங் மின் யுக்-கி டோங் ஜு ஜோடியுடன் மோதியது.
ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய ஜோடி 21-18, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
- ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீரர் லக்ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் வாங் ஜெங் ஸின்னுடன் மோதினார்.
ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய லக்ஷயா சென் 21-11, 21-18 என்ற நேர் செட் கணக்கில் சீன வீரரை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், சக நாட்டு வீரரான பிரியான்ஷூ ரஜாவத்துடன் மோதினார்.
- லக்சயா சென் 21-15, 12-21, 24-22 என்ற செட் கணக்கில் ரஜாவத்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், சக நாட்டு வீரரான பிரியான்ஷூ ரஜாவத்துடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டில் லக்சயா சென் 21-15 என்ற கணக்கிலும் 2-வது செட்டில் ரஜாவத் 21-12 என கைப்பற்றினார். இதனையடுத்து வெற்றி யாருக்கு என்ற 3-வது செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் 24-22 என்ற செட் கணக்கில் ரஜாவத்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு லக்சயா சென் முன்னேறினார்.
- சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி இணை 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் முதல் சுற்றில் வென்றார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் லீயோ ரோலி கர்னாண்டோ-டேனியல் மார்ட்டின் ஜோடியுடன் மோதியது.
இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-16, 11-21, 21-13 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றை எட்டியது.
இதேபோல், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் வென்றார்.
- ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரரை வென்றார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரர் காந்தா சுனேயமா உடன் மோதினார். இந்த போட்டியில் லக்சயா சென் 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், சகநாட்டு வீரரான ஶ்ரீகாந்த் கிடாம்பியுடன் மோதினார்.
பரபரப்பாக நடந்த இப்போட்டியில் பிரனாய் 19-21, 21-9, 21-9 என்ற செட் கணக்கில் கிடாம்பியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி இணை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 2வது சுற்றில் வென்றார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, டென்மார்க்கின் லாஸ்சி மொல்ஹிடி-ஜேப்பி பாய் ஜோடியுடன் மோதியது.
இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-16, 21-11 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றை எட்டியது.
இதேபோல், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், பிரனோய் வென்றனர்.
- கால்இறுதி போட்டி ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரர் கோகி வாதனபே உடன் மோதினார்.
- லக்சயா சென் 21-15, 21-19 என்ற நேர்செட்டில் கோகி வாதனபேவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற கால்இறுதி போட்டி ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரர் கோகி வாதனபே உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லக்சயா சென் 21-15, 21-19 என்ற நேர்செட்டில் கோகி வாதனபேவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் தைவானின் வாங் சி லின் - லீ யாங் இணையை இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி எதிர் கொண்டது.
- இந்த ஆட்டத்தில் சாத்விக் - சிராக் ஜோடி 15-21, 25-23, 16-21 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தனர்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்எஸ் பிரணாய் 19-21, 21-18, 21-8 என்ற புள்ளி கணக்கில் விக்டர் ஆக்சல்செனிடம் தோல்வியடைந்தார். இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் நீடித்தது. ஆக்செல்சென் அரையிறுதியில் ஜப்பானின் கொடை நரோகாவை எதிர்கொள்கிறார்.
மேலும் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் தைவானின் வாங் சி லின் - லீ யாங் இணையை இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி எதிர் கொண்டது.
இந்த ஆட்டத்தில் சாத்விக் - சிராக் ஜோடி 15-21, 25-23, 16-21 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தனர். இந்த தோல்வியின் மூலம் சாத்விக் - சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. சாத்விக் - சிராக் ஜோடி இந்தோனேசிய ஓபன், கொரிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்றது.
- இதில் டென்மார்க் வீரர் அக்சல்சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடந்தது. இதில் டென்மார்க் வீரர் அக்சல்சென், இந்தோனேசிய வீரர் ஜொனாடன் கிறிஸ்டியை எதிர்கொண்டார்.
இதில் அக்சல்சென் 21-7, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.
- ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றிலேயே இந்தியாவின் அஷ்மிதா, மால்விகா தோல்வி அடைந்தனர்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, சீன தைபேயின் தாய் சு யிங் மோதினார். இதில் அஷ்மிதா 16-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனை அகார்ஷி காஷ்யப் 13-21, 12-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் கிம் கான் யுன்னிடம் தோல்வி அடைந்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனை மால்விகா பன்சோட் 21-23, 19-21 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனை பொலினா புரோவாவிடம் தோற்றார்.






