என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தோனேசியாவில் 8 வயது சிறுவனை மனித வெடிகுண்டாக பயன்படுத்திய பெற்றோர்
Byமாலை மலர்14 May 2018 12:25 PM GMT (Updated: 14 May 2018 12:25 PM GMT)
இந்தோனேசியாவில் காவல்துறை அலுவலகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 8 வயது சிறுவன் மனித வெடிகுண்டாக பயன்படுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. #IndonesiaBlast
ஜகர்த்தா:
இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான சுரபயாவில் உள்ள மூன்று முக்கிய தேவாலயங்களில் நேற்று தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, இன்று சுரபயா நகரின் காவல்நிலையத்துக்கு அருகே இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் உள்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தலைமை காவல் அதிகாரி, 2 மோட்டார் சைக்கிளில் 8 வயது சிறுவனுடன் வந்த பயங்கரவாதிகள், காவல்நிலையம் வெளியே உள்ள சோதனைச்சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளதாகவும், இச்சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பயங்கரவாதிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவனின் தந்தை, ஜே.ஏ.டி எனப்படும் பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். #Indonesia #IndonesiaBlast
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X