என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காஷ்மீரில் பயிலும் தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்- உதவி தேவைப்படுவோர் கவனத்திற்கு...
- மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை.
- மாணவர்களுடன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.
சென்னை:
இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து எல்லை பகுதியில் உள்ள மக்கள் குறித்து உறவினர்கள் கவலை கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கல்வி பயில காஷ்மீருக்கு சென்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 41 மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், உதவி தேவைப்படும் மாணவர்கள் 75503 31902 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ 80690 09901, 80690 09900 என்ற டோல்-ஃப்ரீ எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். nrtwb.chairman@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






