என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரெய்டு விடுவதற்கெல்லாம் நயினார் நாகேந்திரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை - அண்ணாமலை
    X

    ரெய்டு விடுவதற்கெல்லாம் நயினார் நாகேந்திரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை - அண்ணாமலை

    • அதிமுகவுக்கு 'ரெய்டு' மூலம் நெருக்கடி கொடுக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை.
    • எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக பேசினாலே பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி ஏற்பட்டு விடும்

    நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

    அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், "வருமான வரித்துறை சோதனை, அமலாக்கத்துறை சோதனை மூலமாக கூட்டணிக்கு வரும்படி எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி எதுவும் கொடுக்கப்படவில்லை. 'ரெய்டு' மூலம் நெருக்கடி கொடுக்க வேண்டிய தேவை இல்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக பேசினாலே பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி ஏற்பட்டு விடும்" என்று தெரிவித்தார்.

    நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது தொடர்பாக திருப்பூரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "ரெய்டு விடுவதற்கெல்லாம் நயினார் நாகேந்திரன் அண்ணனுக்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×