என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடன் பற்றி பேச அ.தி.மு.க.வுக்கு தார்மீக உரிமை இல்லை- அமைச்சர் தங்கம் தென்னரசு
- அ.தி.மு.க. விட்டுச்சென்ற கடனுக்கு 5 ஆண்டாக வட்டி மட்டும் ரூ.1.40 லட்சம் கோடி கட்டியுள்ளோம்.
- அ.தி.மு.க. ஆட்சியில் 128 சதவீத அளவிற்கு கடன் அதிகரித்தது.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபையின் 3-ம் நாள் அமர்வு நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-
* தமிழ்நாடு கடனில் தத்தளிப்பதாக கூறுவது தவறு. அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கிய கடனுக்கு 5 ஆண்டாக வட்டி கட்டி வருகிறோம்.
* அ.தி.மு.க. விட்டுச்சென்ற கடனுக்கு 5 ஆண்டாக வட்டி மட்டும் ரூ.1.40 லட்சம் கோடி கட்டியுள்ளோம்.
* அ.தி.மு.க. ஆட்சியில் 128 சதவீத அளவிற்கு கடன் அதிகரித்தது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டில் 93 சதவீதம் தான் கடன் அதிகரித்துள்ளது.
* கடன் பற்றி பேச அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு தார்மீக உரிமை இல்லை.
* சேராத இடம் தேடி போய் சேர்ந்திருக்கிறது அ.தி.மு.க. என்றார்.
Next Story






