என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கடன் பற்றி பேச அ.தி.மு.க.வுக்கு தார்மீக உரிமை இல்லை- அமைச்சர் தங்கம் தென்னரசு
    X

    கடன் பற்றி பேச அ.தி.மு.க.வுக்கு தார்மீக உரிமை இல்லை- அமைச்சர் தங்கம் தென்னரசு

    • அ.தி.மு.க. விட்டுச்சென்ற கடனுக்கு 5 ஆண்டாக வட்டி மட்டும் ரூ.1.40 லட்சம் கோடி கட்டியுள்ளோம்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் 128 சதவீத அளவிற்கு கடன் அதிகரித்தது.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபையின் 3-ம் நாள் அமர்வு நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

    * தமிழ்நாடு கடனில் தத்தளிப்பதாக கூறுவது தவறு. அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கிய கடனுக்கு 5 ஆண்டாக வட்டி கட்டி வருகிறோம்.

    * அ.தி.மு.க. விட்டுச்சென்ற கடனுக்கு 5 ஆண்டாக வட்டி மட்டும் ரூ.1.40 லட்சம் கோடி கட்டியுள்ளோம்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் 128 சதவீத அளவிற்கு கடன் அதிகரித்தது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டில் 93 சதவீதம் தான் கடன் அதிகரித்துள்ளது.

    * கடன் பற்றி பேச அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு தார்மீக உரிமை இல்லை.

    * சேராத இடம் தேடி போய் சேர்ந்திருக்கிறது அ.தி.மு.க. என்றார்.

    Next Story
    ×