என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. அரசின் திட்டங்கள் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது- அமைச்சர் கே.என்.நேரு
- அரசின் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுவதை முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
- எங்கள் கூட்டணி எப்போதும் சிறப்பான கூட்டணி.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளை சந்திப்பதற்காக தஞ்சை மாவட்டத்துக்கு வந்துள்ளேன். இங்கு நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும். தொகுதி நிலவரம் எப்படி உள்ளது. மக்கள் எந்த மனநிலையில் உள்ளனர் என்பதை தெரிவித்துள்ளனர். மேலும், அரசு சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை எவ்வித பிரச்சனையும் இல்லை. நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம். 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் தி.மு.க. அரசின் திட்டங்கள் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுவதை முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
தி.மு.க. அரசின் திட்டங்கள் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் மக்கள் தி.மு.க. பக்கம் தான் இருப்பார்கள். எங்கள் கூட்டணி எப்போதும் சிறப்பான கூட்டணி. இதில் எவ்வித மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






