என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதிய கட்சிகளை விமர்சிக்கக் கூடாது - த.வெ.க. குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்
    X

    புதிய கட்சிகளை விமர்சிக்கக் கூடாது - த.வெ.க. குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்

    • எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.
    • நம்முடைய குரல், மய்யத்தின் குரல் மாநிலங்களவையில் ஒலிக்க வேண்டும்.

    சென்னை:

    'தக்லைப்' பட பணி நிமித்தம் காரணமாக மலேசியாவுக்கு செல்ல நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    'தக்லைப்' படம் நல்லா இருக்கும் என்று நம்பிதான் மக்கள் முன்னாடி விடுகிறோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. மக்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிற எல்லா ஆதாரங்களும் எங்க கிட்ட இருக்கு. இப்பகூட ப்ரோமோஷனுக்காக மலேசியா, துபாய் செல்ல உள்ளேன். அதன்பிறகு வெளியீட்டுக்கு தயாராகி வருவேன்.

    நம்முடைய குரல், மய்யத்தின் குரல் மாநிலங்களவையில் ஒலிக்க வேண்டும். அது ஒரு பாரபட்சம் இல்லாத தமிழர்களுக்கான குரலாக இருக்க வேண்டும் என்றார்.

    இதனிடையே, தமிழகத்தில் நிறைய புதிய கட்சி தொடங்கியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், நானே புதிய கட்சி தான். புதிய கட்சிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது என்று கூறி விட்டு சென்றார்.

    Next Story
    ×