என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அமித் ஷாவுடன் பேச்சுவார்த்தை: NDA கூட்டணியில் இணைகிறாரா சசிகலா? - இ.பி.எஸ். விளக்கம்
- புதிய கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளது.
- அ.தி.மு.க. கூட்டணி சுமூகமாக உள்ளது. தி.மு.க. கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது.
டெல்லியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.
* தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேசினேன்.
* தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் விவாதித்தேன்.
* புதிய கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளது.
* அ.தி.மு.க. கூட்டணி சுமூகமாக உள்ளது. தி.மு.க. கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது.
* சசிகலாவை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் விவாதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






