என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க.-வின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி..!- உதயநிதி ஸ்டாலின்
- தேர்தல் வரும்போதெல்லாம் பிரதமர் மோடி தமிழகம் வருவது வழக்கம்.
- சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு உள்ளது.
திருச்சி செங்கிப்பட்டியில் நடைபெறும் டெல்டா மண்டல திமுக மகளிரணி மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாதத்திற்கு ஒரு மாநாடு, சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. இந்தி திணிப்புக்கு எதிராக பெண்களை திரட்டி போராடியவர்கள் இந்த மண்ணை சேர்ந்தவர்கள் தான்.
தேர்தல் வரும்போதெல்லாம் பிரதமர் மோடி தமிழகம் வருவது வழக்கம். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெறும் முதல் 4 இடங்களில் உள்ள மாநிலங்களை ஆள்வது பாஜக தான். பாஜகவின் முரட்டு அடிமையை நம் கண் முன் காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்தி திணிப்புக்கு எதிராக பெண்களை திரட்டி போராடியவர்கள் இந்த மண்மை சேர்ந்தவர்கள் தான்.
மகளிருக்கான அரசு என்பது தான் திராவிட மாடல் அரசுக்கான அடையாளம்.
திராவிட மாடல் பார்ட்-2க்கு மக்கள் தயாராிவிட்டார்கள். நாம் தான் மீண்டும் வெல்வோம். நாம தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.
பில்கிஸஅ பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தது பாஜக.
இவ்வாறு அவர் கூறினார்.






