என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணி- இபிஎஸ் பேச்சுக்கு துரைமுருகன் ஆதரவு
- முல்லைப்பெரியாறு அணை அதிமுக ஆட்சியில் ஆண்டுதோறும் முறையாக பராமரிக்கப்பட்டது.
- 'இடையூறு' என்ற வார்த்தையை இபிஎஸ் பயன்படுத்தியதற்கு சிபிஎம் எம்எல்ஏ நாகை மாலி எதிர்ப்பு தெரிவித்தார்.
தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரம் தொடங்கியதும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
முல்லைப்பெரியாறு அணை அதிமுக ஆட்சியில் ஆண்டுதோறும் முறையாக பராமரிக்கப்பட்டது.
பராமரிப்பு பணிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால் கேரள முதலமைச்சரை சந்திக்கும்போது அதுகுறித்து முதலமைச்சர் பேச வேண்டும் என்று கூறினார்.
முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக 'இடையூறு' என்ற வார்த்தையை இபிஎஸ் பயன்படுத்தியதற்கு சிபிஎம் எம்எல்ஏ நாகை மாலி எதிர்ப்பு தெரிவித்தார்.
கேரள அரசு தடுத்தால் 'இடையூறு' என்று தான் பொருள் என அவை முன்னவர் துரைமுருகன் இபிஎஸ் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தார்.
Next Story






