என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாநிலங்களவை தேர்தல்: கமல்ஹாசன் உள்பட 4 பேர் பட்டியலை வெளியிட்டது தி.மு.க.
    X

    மாநிலங்களவை தேர்தல்: கமல்ஹாசன் உள்பட 4 பேர் பட்டியலை வெளியிட்டது தி.மு.க.

    • மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    • தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வில்சனுக்கு இந்தத் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    மாநிலங்களவை உறுப்பினர்களான வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது.

    இதற்கிடையே, புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    2025, ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 4 இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

    தி.மு.க. வேட்பாளர்களாக பி.வில்சன் பி.எஸ்சி, பி.எல்., எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

    மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மக்களவைத் தேர்தலின்போது செய்த உடன்பாடு அடிப்படையில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது. அதன்படி, மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்.

    Next Story
    ×