என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது- காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்
- தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது.
- சட்டமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடந்த தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது.
அந்த கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
டெல்லியில் நடந்த தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளிடம் தனித்தனியாக கருத்து கேட்டதாக தகவல் வெளியாக உள்ளது.
மேலும், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி அறிவுறுத்தியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய செல்வப்பெருந்தகை," கூட்டணி குறித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை இடக்கூடாது. தலைமை எடுக்கும் முடிவுக்கு மாநில காங்கிரஸ் கட்டுப்பட வேண்டும்" என்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் அறிவுறுத்தினார்.
Next Story






