என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ், தமிழன் என பேசும் மு.க.ஸ்டாலின் அதன்படி செயல்படமாட்டார் - ஜெயக்குமார்
- தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை வெற்றியடைந்த ஒன்று.
- இலக்கணமற்ற இந்தி எங்கள் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* மும்மொழி கொள்கையால் எந்த பிரயோஜனமும் இல்லை.
* தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை வெற்றியடைந்த ஒன்று.
* இருமொழிக் கொள்கை உள்ள தமிழகத்தில் 80% மேற்பட்டோர் உயர்கல்வி செல்கின்றனர். வடமாநிலங்களில் செல்வதில்லை.
* இலக்கணமற்ற இந்தி எங்கள் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
* அந்தந்த மாநிலங்களில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மாநில மொழியே பயிற்று மொழி என முதலில் அறிவியுங்கள்.
* முதல்வரை பொருத்தவரை தமிழ், தமிழன் என பேசுவார். ஆனால் செயல்படமாட்டார் என்றார்.
Next Story






