search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மத்திய சென்னை தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்
    X

    மத்திய சென்னை தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்

    • தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசார பயணத்திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதyமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் நேற்று தொடங்கினார். அவர், பொதுக்கூட்டங்கள் வாயிலாக வாக்குகள் திரட்டுகிறார். திருச்சியில் நேற்று பிரசாரத்தை தொடங்கிய அவர் வருகிற 17-ந் தேதி மத்திய சென்னை தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள், தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.

    அவர், மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து சேப்பாக்கம் பகுதி 62-வது வட்டத்தில் அமைந்துள்ள ஐயா தெரு, பஜார் தெரு சந்திப்பில் இன்று காலை 8.30 மணி முதல் திறந்த ஜீப்பில் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளார். இந்த தகவலை தி.மு.க. சேப்பாக்கம் பகுதி செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான எஸ்.மதன்மோகன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசார பயணத்திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டது. இதில் கடைசி நேரத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்பணிகள் முடிவடைந்தவுடன் அவருடைய பிரசார பயண விவரம் முழுவதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×