search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சபாநாயகர் தி.மு.க. உறுப்பினர் போன்று நடந்து கொண்டார்- அண்ணாமலை குற்றச்சாட்டு
    X

    சபாநாயகர் தி.மு.க. உறுப்பினர் போன்று நடந்து கொண்டார்- அண்ணாமலை குற்றச்சாட்டு

    • கவர்னருக்கும் கோட்சேவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
    • சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேச உரிமையில்லை.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை, பழைய வைத்தியநாதன் சாலையில் பா.ஜனதா கட்சியின் வடசென்னை பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்தை மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையை பொறுத்தவரை பாதயாத்திரையை வேறுவிதமாக நடத்த இருக் கிறோம். செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை வைத்து அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. சட்டசபையில் தமிழ்தாய் வாழ்த்தை முழுமையாக வாசிக்க வேண்டும்.

    கருணாநிதியால் வெட்டப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது. ஜி.எஸ்.டி.கொண்டு வரப்பட்டதற்கு பின்பு தான் தமிழகத்தின் வரி வளர்ச்சி அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சபாநாயகர் அப்பாவு தி.மு.க. உறுப்பினர் போல் நடந்து கொண்டார். நாதி ராம் கோட்சேவுக்கும் அப்பாவுக்கும் தொடர்பு இருக்கலாம். கவர்னருக்கும் கோட்சேவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேச உரிமையில்லை.


    ஆளுநருக்காக எழுதி கொடுத்த உரையில் 10 பொய்களை சுட்டிக்காட்டி உள்ளோம். சபாநாயகர் அப்பாவு தி.மு.க.வை விட மோசமாக உள்ளார்.

    சென்னை வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கவில்லை என்று கூறி தி.மு.க.வை கவர்னர் பாராட்ட வேண்டும் என்றால் எப்படி பாராட்டுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில துணைத் தலைவரும் வடசென்னை பொறுப்பாளருமான பால்கனகராஜ், பாராளுமன்ற இணை அமைப்பாளர் பிரசாத், பாராளுமன்ற பொறுப்பாளர் பெப்சி சிவா, மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார், கபிலன், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் மற்றும் பாராளுமன்ற பிரிவு பொறுப்பாளர் சி.பி.நவீன், ஆர்.கே.நகர் சட்டமன்ற அமைப்பாளர் எஸ்.ஆர்.செந்தில், பாஸ்கோ மாணிக்கம், சிவகுமார், திருவொற்றியூர் சட்டமன்ற அமைப்பாளர் ஜெய் கணேஷ், திருமுருகன், ராயபுரம் சட்டமன்ற அமைப்பாளர் வன்னிய ராஜன், இணை அமைப்பாளர் விஜயகுமார், பொருளாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×