என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ராமர் கோவில் விவகாரம் - உதயநிதிக்கு என்ன தெரியும்?
- ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை கோவில் இடித்தார்கள்?
- இந்திய அளவில் தமிழகம் 3-வது மாநிலம் ராமர் கோவில் கட்டுவதற்கு அதிக பணம் கொடுத்த மாநிலம்.
சென்னை:
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணல் குறித்து மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை Friendly Match-ன்னு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை கூறியதாவது:-
உதயநிதி ஸ்டாலினின் நெறியாளர் சந்திப்பு என்பது ஒரு Friendly Match. அதில் எந்த கேள்வியும் சீரியஸான கேள்வி இல்லை. எந்த பதிலும் சீரியஸான பதிலும் இல்லை. அதற்கு நாங்கள் பதில் சொல்லி தரம் தாழ்த்திக்க விரும்பவில்லை. பத்திரிகையாளர் சந்திப்புன்னா எப்படி இருக்கனும்னுங்கறதுக்கு பாரதிய ஜனதா கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு உதாரணம். அதை உயதநிதி ஸ்டாலின் வீட்டில் உட்கார்ந்து சிடி போட்டு பார்க்கணும். என்ன கேள்வி கேட்குறாங்க, தமிழ்நாட்டின் பிரச்சனை என்ன? அதை எப்படி பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் கையாள்கிறார்கள் உதயநிதி ஸ்டாலின் பார்க்கணும்.
உதயநிதி ஸ்டாலின் தான் துணை முதலைமைச்சருன்னு ஆரம்பிச்சதே அவர். சில பேர் தேவையில்லாமல் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சருன்னு சொல்றாங்க அதற்கு உதயநிதியே முற்றுப்புள்ளி வைச்சுட்டாருன்னு ஸ்டாலின் சொல்றார். ஆரம்பித்து வைத்தது தி.மு.க. காரர்கள். என்னுடைய வாழ்நாள்ல உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சரா பார்க்கணும் நாங்க சொன்னோமா தி.மு.க. எம்.எல்.ஏ. சொன்னாங்களா? உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமானவருன்னு நாங்க சொன்னோமா? தி.மு.க. அமைச்சர் சொன்னாங்களா? உதயநிதி துணை முதல்வராக வரவேண்டும்னு நாங்க சொன்னோமா? திமுக நிர்வாகிகள் சொன்னாங்களா?. சொன்னது நீங்க.. செட்அப் பண்ணது நீங்க. உதயநிதி துணை முதலமைச்சராக வந்தால் மக்களே ஏத்துக்கமாட்டாங்க... சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று தெரிந்த பிறகு நீங்க பல்டி அடித்துவிட்டாச்சு...
மத வழிபாட்டு தல இடிப்பு பற்றி பேசுவதற்கு கடைசி தகுதி யாருக்கு இருக்குன்னு தி.மு.க.வுக்கு. ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை கோவில் இடித்தார்கள்? மக்கள் எல்லாம் போர் குரல் எழுப்பிய பிறகு கோவில் இடிப்பை நிறுத்தி வைச்சு இருக்காங்க. உச்சநீதிமன்றத்தில் இருதரப்புக்கும் நியாயம் கொடுக்கப்பட்டு இருக்கு. ராமர் கோவிலுக்கு ஒவ்வொரு மனிதனும் சம்பாதித்த பணத்தை எல்லாம் போட்டு கோவில் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு நபர் ராமர் கோவிலுக்கு ரூ.25 கோடி கொடுத்துள்ளார். இந்திய அளவில் தமிழகம் 3-வது மாநிலம் ராமர் கோவில் கட்டுவதற்கு அதிக பணம் கொடுத்த மாநிலம். உதயநிதிக்கு என்ன தெரியும்? உச்சநீதிமன்றம் தீர்ப்பு பற்றி தெரியுமா? என கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்