search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போதை பொருள் ஒழியும் வரை அ.தி.மு.க. போராட்டம் தொடரும்- ஆர்.பி.உதயகுமார்
    X

    போதை பொருள் ஒழியும் வரை அ.தி.மு.க. போராட்டம் தொடரும்- ஆர்.பி.உதயகுமார்

    • தி.மு.க.வைச் சேர்ந்த ஜாபர் போதை மாபியாவை உலகமே தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.
    • குஜராத் மாநிலம் துறைமுகத்தில் போதை பொருள் கைப்பற்றப்பட்டது.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று கூறியதாவது:-

    தி.மு.க. அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து தமிழகம் முற்றிலுமாக சீர்கேடு அடைந்து தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி வருங்கால தலைமுறையின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. போதை பொருள் கடத்தலால், இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு தலை குனிவு ஏற்பட்டுள்ளது. இதனை விளக்கும் வகையில் எடப்பாடியார் ஒரு வீடியோ பதிவை கொடுத்துள்ளார்.

    அதில் கடைசி சொட்டு போதை ஒழிப்பு வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். போதைப் பொருள் கடத்தல் மாபியா கும்பல் முழுமையாக கைது செய்யப்படும் வரை தமிழகத்தில் அ.தி.மு.க. போராட்டம் தொடரும் என எடப்பாடியார் மன உறுதியோடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தி.மு.க.வைச் சேர்ந்த ஜாபர் போதை மாபியாவை உலகமே தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். இளைஞர்கள் மற்றும் மாணவர்களை சீரழிக்கும் இந்த போதைப் பொருள் குறித்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக மக்களிடத்திலே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையிலும், தி.மு.க.வை எச்சரிக்கின்ற வகையிலும் எடப்பாடியார் பல்வேறு ஆதாரங்களோடு குற்றச்சாட்டை எடுத்து வைத்து இன்றைக்கு இந்த தாய் தமிழ்நாட்டை இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்காக தொடர்ந்து உரிமைக்குரல் எழுப்பி வருகின்றார்.

    போதைப் பொருட்களால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளும், பள்ளி, கல்லூரி மாணவிகளும், ஐ.டி. துறையினருமாகிய இளைய தலைமுறைதான். தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்ற உடனே 2021 செப்டம்பர் 15 அன்று குஜராத் மாநிலம் துறைமுகத்தில் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு ரூ.21,000 கோடியாகும், இந்த வழக்கிலே சென்னையை சேர்ந்த கணவன், மனைவி முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட் டுள்ளனர்.

    2021 ஆண்டு மார்ச் 18-ந்தேதி லட்சத்தீவு படகில் 300 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு திருச்சி சிறப்பு முகாமில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கண்டது. 2022-ம் ஆண்டு ராமநாதபுரத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தப்பட்டது. கடந்த ஜனவரி 25-ந்தேதி சென்னையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் ஒரு கிலோ போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.

    கடந்த பிப்ரவரி 26-ந் தேதி ரூ.2000 கோடி மதிப்பில் போதை மருந்து கடத்தப்பட்டதாக சிலர் கைது செய்யப்பட்டனர். இதற்கு தி.மு.க.வைச் சேர்ந்த ஜாபர் மாபியா தலைவனாக உள்ளார். அதேபோல் 29-ந்தேதி மதுரை ரெயில் நிலையத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருள் பிடிபட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதனை கட்டுப்படுத்த தான் எடப்பாடியார் உரிமைக்குரல் எழுப்பியுள்ளார். நாம் அவருக்கு உறுதுணையாக இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுப்பதற்காக நாம் அணி திரளவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×