search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சமூக வலைதளத்தில் ராகுல்-பிரியங்கா காந்தி பற்றி அவதூறு: பா.ஜ.க. மாநில நிர்வாகி கைது
    X

    சமூக வலைதளத்தில் ராகுல்-பிரியங்கா காந்தி பற்றி அவதூறு: பா.ஜ.க. மாநில நிர்வாகி கைது

    • காங்கிரஸ் கட்சியினர் கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.
    • சம்பவம் நாமக்கல் மாவட்ட பா.ஜ.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்துகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரவின்ராஜ். இவர் பா.ஜனதா மாநில ஊடகப்பிரிவு பெறுப்பாளராக உள்ளார்.

    இவர் சமூக இணையதளங்களில் தி.மு.க., காங்கிரசுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்து பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் குறித்து சர்சைக்குரிய வகையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று காலையில் நாமக்கல்லுக்கு வந்து பிரவின்ராஜை கைது செய்து கரூருக்கு அழைத்துச் சென்றனர்.

    பா.ஜனதாக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் நாமக்கல் மாவட்ட பா.ஜ.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×