search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாங்க அவங்களுக்கு ஓட்டு போட்டோம்.. அதுதான் சனாதன தர்மம்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அதிரடி
    X

    நாங்க அவங்களுக்கு ஓட்டு போட்டோம்.. அதுதான் சனாதன தர்மம்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அதிரடி

    • தி.மு.க. ஏன் திரவுபதி முர்முக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை
    • நீங்கள் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாகவே வாக்களித்தீர்கள்.

    சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த நிலையில், இவருக்கு எதிரான கருத்துக்கள் வலுத்து வருவதோடு, இவர் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படாதது தான் சனாதன தர்மத்திற்கு சமீபத்திய உதாரணம்," என்று தெரிவித்து இருந்தார். இவரது கருத்துக்கு பதில் அளித்த பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, தி.மு.க. ஏன் திரவுபதி முர்முக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    "பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கட்சி ஏன் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை? நீங்கள் திரவுபதி முர்முவுக்கு எதிராக களமிறங்கிய யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாகவே வாக்களித்தீர்கள், அவர் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்? இந்த நாட்டின் குடிமக்களாக நாங்கள் அவருக்கு வாக்களித்தோம், அதுதான் சனாதன தர்மம், நீங்கள் ஏன் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை," என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

    "சனாதன தர்மத்தை நம்பும் நாங்கள், எல்லோரும் சமம் என்று நினைப்பதால் தான் நாங்கள் அவருக்கு வாக்களித்தோம். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எங்களிடம் இருந்து சனாதன தர்மத்தை கற்றுக் கொள்ளுங்கள்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    Next Story
    ×