என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்: பா.ம.க., தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை
- பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
- கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து வலுவான கூட்டணி அமைக்க அ.தி.மு.க. வியூகம் அமைத்துள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்வதில் அ.தி.மு.க. மும்முரமாக உள்ளது.
அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சார்ந்த நிர்வாகிகள் பா.ம.க., தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பா.ம.க., தே.மு.தி.க.வின் எதிர்பார்ப்புகளை அ.தி.மு.க. கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ம.க., தே.மு.தி.க.வுடனான கூட்டணியை உறுதி செய்யும் பணியில் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து வலுவான கூட்டணி அமைக்க அ.தி.மு.க. வியூகம் அமைத்துள்ளது.






