search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை மாநகர மக்களுக்கு சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை- அமைச்சர் பதில்
    X

    கோவை மாநகர மக்களுக்கு சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை- அமைச்சர் பதில்

    • சிறுவாணி அணையில் இருந்து 73 எம்.எல்.டி. தண்ணீர் வரவேண்டும் ஆனால் 38 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே வருவதாகவும் கூறினார்.
    • பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சிறுவாணி அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

    சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கோவை மாநகர மக்களுக்கு தண்ணீர் பிரச்சினை இருப்பதாகவும் சிறுவாணி அணையில் இருந்து 73 எம்.எல்.டி. தண்ணீர் வரவேண்டும் ஆனால் 38 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே வருவதாகவும் கூறினார்.

    இதன் காரணமாக 25 நாட்களுக்கு ஒரு முறை தான் கோவை மாநகர மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதாக தெரிவித்த அவர், கேரள அரசுடன் கலந்தாலோசித்து தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    அதேபோல், கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையில் வெள்ளலூரில் 62.61 ஏக்க நிலப்பரப்பில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 சதவீதம் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுவாணி அணையில் இருந்து குறைவாகவே கேரளா அரசு தண்ணீர் தருவதாகவும், இது குறித்து பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளதாகவும், சிறுவாணி அணையில் இருந்து உரிய நீரை பெற அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதோடு, கோவை மாநகர மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

    மேலும், வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிக்காக இணைப்பு சாலைகளை அகலப்படுத்த வேண்டிய தேவை உள்ளதால், அந்தப் பணிகளை முடித்த பிறகு இந்த ஆண்டிலேயே பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

    Next Story
    ×